Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
ஒரு பெரிய தேவன் இன்னொரு தேவனை (Demi god) படைத்து...இது என்ன மதம்?
Permalink  
 


1870: ரசல் 6 பேருடன் தன் வீட்டில் இயேசுக்கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப் பற்றியும் யெகோவாவின் இராட்சியத்தைப் பற்றியும் வேதப்பாடங்களை நடத்தத் தொடங்கினார். இயேசு 1914-இல் இவ்வுலகில் தமது ஆயிரம்வருட அரசாட்சியை ஸ்தாபிப்பார் என்றும் அதற்கு முன்னர் 40 வருட ஆயத்த காலம் இருக்கும் என்று போதித்தார்.

(Souce : J.K. VanBaalen, The Chaos of cults p 257)
,

1873-இல் இயேசுகிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தையும் தன்மையையும் பற்றி The Object and Manner of the Lord's Return என்னும் தலைப்பில் புத்தகத்தை வெளியிட்டார். இயேசுகிறிஸ்துவின் வருகை மானிடக் கண்களுக்குத் தெரியாததாய் இருக்கும் என்ப
தே இப்புத்தகத்தின் தர்க்கமாய் இருந்தது.

(Source : D.Harris, Awake to the Watch Tower p19)


ரசலின் (யெகோவா சாட்சிகளின்) பெரும்பாலான போதனைகள் ஏழாம் நாள் அட்வாந்து சபையின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதாக The American Religions (p77-81 by G.Melton) கூறுகிறது

Russel's PyramidRussel

ரசல் 1916-இல் மரணமடைந்தபோது அவரது பிரேதம் பாரிய பிரமிட் வடிவ அடையாளக் குறியுடனான கல்லறையிலே அடக்கம் செய்யப்பட்டது.

(Source : R. Tucker, Another Gospel, p124)

இதில் ஒரு விசேடம் உண்டு. உலகின் முடிவுக்காலத்தை அறிவிப்பதற்காகவே தேவன் பிரமிடுக்களை வடிவமைத்துள்ளார். பிரமிட் கற்களினாலான வேதாகமமே என அவர்கள் கருதினார்கள்.

(Source : R. Tucker, Another Gospel, p124)

பிரமிடுக்களின் அளவுகளை அடிப்படையாகக் கொண்டு உலகில் நடைபெறவிருக்கும் முக்கிய சம்பவங்கள் எப்போது சம்பவிக்கும் என இவர்கள் ஆரம்பத்தில் கூறிவந்தனர். 1928 வரை ஆண்டு வரை பிரமிட் வேதாகம உபதேசம் யெகோவா சாட்சிகளினால் பிரசுரிக்கப்பட்டு வந்தது.

(Souce : The Watchtower 15 May 1925, p148)


அதற்கு பிற்பாடு அது சாத்தானின் வேதாகமம் எனக் கூறத் தொடங்கினர்.

(Souce : The Watchtower 15 May 1928, p344)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இந்த நாள் யௌவன ஜனம் தளத்தின் பொன்னாள்..! நமது அன்புக்குரிய சகோதரரும் "மைகோவை அண்ணா" என்று தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்களால் அதிக நேசத்தோடு அழைக்கப்படுபவருமான அருமை நண்பர் மைகோவை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்;முதலில் பதிவிலேயே முத்தான கருத்தைப் பதித்தமைக்கு நன்றி..! தாங்கள் தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்த கோவை பெரியன்ஸுக்கான பதிலை எடுத்து இங்கே பதிக்கலாமா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

கிறிஸ்துவுக்குள் அன்பான கோல்வின் அவர்களுக்கு நீங்கள் சார்லஸ் ரசலை குறித்து எழுதும் விசயங்களில் மிகக்குறைவானதையே நான் படித்துள்ளேன். உங்களின் இந்த திரியில் எழுத்து எழுத்துக்கள் சாத்தானின் உபதேசங்களுக்கு ஒரு சவுக்காகவே இருக்கும்.இதிலிருந்து ரூதர்போர்ட் பிரித்த வேதாகம மாணாக்கர்கள் பற்றியும் எழுதுங்கள். அதுவும் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டியவைகளே.கர்த்ர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக..!


__________________
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அன்பரே, இந்த திரியிலேயே எனும் " கோவை வெறியன்" தலைதெறிக்க திடீர் ஓட்டம்..!" கட்டுரையைப் பின்னூட்டமாக இட்டேன்;ஆனால் நான் சொன்னதை நானே மீறலாமா என்ற உணர்வினால் எச்சரிக்கப்பட்டு அதனை மாற்றி தனி திரியாகப் பதித்தேன்;எனவே நீங்கள் தொடர்ந்து இரஸல் குறித்த காரியங்களை எழுதி வாருங்கள்;பிறகு அதனை வகைபிரித்து தனித் தனி கட்டுரையாக மாற்றும் வேலையை மாற்றும் வேலையை நான் கர்த்தருடைய கிருபையினால் பார்த்துக்கொள்ளுகிறேன்.

இதுவரை கிறித்தவர்கள் பலரும் கேள்விபட்டிராத ஒரு மனிதரான இரஸல் செய்த குழப்பங்களை தமிழ் கிறித்தவர்கள் நிச்சயமாக அறிந்திருத்தல் அவசியம் ஆகும்;இதுவரை தமிழ் இணையத்தில் இரஸல்
குறித்த ரசமான சமாச்சாரங்கள் ஏற்றப்படவில்லை என்றே எண்ணுகிறேன்;அந்த வகையில் தாங்கள் செய்வது அளப்பறிய தேவப்பணியாகும்;God Bless You..!

  • "தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்."(யாக்கோபு.5:20)
  • "அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து..,(யூதா.1:22)
-மேற்காணும் வேத வாக்கியங்களின்படி நிச்சயமாகவே பரம கானானில் தங்களுக்கு சிறப்பான பங்கு உண்டாயிருக்கும்;அப்படியிராதிருந்தாலும் பணி செய்வது நம்முடைய கடமை அல்லவா..?

நண்பர் ஜாண் அவர்களும் விவாதங்களிலும் கட்டுரை பகுதியிலும் தங்கள் பங்களிப்பைத் தொடருமாறு பணிவுடன் வேண்டுகிறேன்;நீங்கள் ஆரம்பித்த திரியை "இரஸல்" ஆக்கிரமித்துவிட்டார் மன்னிக்... ஆஹா, பொறுத்துக்கொள்ளவும்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: ஒரு பெரிய தேவன் இன்னொரு தேவனை (Demi god) படைத்து...இது என்ன மதம்?
Permalink  
 



விவாகரத்து வழக்கில் தன் மனைவிக்கு 8 பவுன்ஸ் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என தீர்பளிக்கப்பட்டது. ஆனால் அதை கொடுப்பதற்கு மனதில்லாமல் 60,000 பவுன்ஸ் மதிப்புள்ள சொத்துக்களை Watchtower இற்கு எழுதிவைத்துவிட்டார். நீதிமன்றத்தை ஏமாற்றிய குற்றத்திற்காக இன்னும் அதிகமான தொகை ஜீவனம்சமாக கொடுக்க நீதிமன்றம் ரசலுக்கு உத்தரவிட்டது


ரசல் ஒரு மி்ல்லியன் மைல்கள் பிரயாணம் செய்துள்ளதாகவும் 30,000 பிரசங்கங்களைச் செய்துள்ளதாகவும், 50,0000 பக்கங்கள் எழுதியுள்ளதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது. (Source : P.Royston, Jehovah's Witnesses, P13)


ரசலின் இன்னொரு பைத்தியக்காரத்தனமான கருத்து/கொள்கை
ரசல் எழுதிய வேதபாடம் 6 தொகுப்பு(6 Volume) நூல்களும் வேதத்தின் விமர்சனம் அல்ல. அது வேதமேதான். வேதப் புத்தகத்தை மாத்திரமே படித்தால் தேவனது திட்டங்களை அறிந்து கொள்ள இயலாது. வேதபாடம் என்ற இந்த 6 நூல்களையும் படித்தாக வேண்டும். இந்த 6 வேதப் பாட நூல்களை 10 ஆண்டுகள் நன்றாகப் படித்துப் பழக்கப்பட்டு, பரிட்சயமான ஒருவர் அந்நூல்களைத் தள்ளி வைத்து விட்டு வேதாகமத்தை மாத்திரம் படிக்க ஆரம்பிப்பார்களானால் அவர் வேதத்தில் எவ்வளவு பழக்கமுடையவராக இருந்தாலும் இரு ஆண்டுகளுககுள் இருளுக்குள் போவது உறுதி. மாறாக வேதத்தின் ஒரு பக்கத்தைக் கூடப் படிக்காமல் இந்த வேதபாடத்தை 2 ஆண்டுகள் தொடர்ச்சியாக படிப்பாராயின் அவர் வெளிச்சத்துக்குள் மீண்டும் கடந்து வருவது உறுதி. (Charles Russell, The Watch Tower, September 15, 1910, P298)

இவர் உரைத்த  கள்ள தீர்க்கதரிசனங்கள்
1914 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திருச்சபைகளும், பள்ளிகளும் வங்கிகளும் அரசாங்கங்களும் அழிந்துவிடும்
1915 இல் பெயர்க் கிறிஸ்தவம் முழுமையாக அழிந்துவிடும்
உலக அழிவு 1925 இல்







__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:
போகிறபோக்கைப் பார்த்தால் நான் கீழே குறிப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் சீடர் என எழுதுவார் போல. அப்படி எழுதினால் நான் இன்னும் அதிகம் சந்தோஷப்படுவேன்.

அதிகமாகப் படிப்பவர்களைப் புத்தகப் புழு என்பார்கள்;நீங்கள் புழு அல்ல,கற்றுத் தேர்ந்த வண்த்துப் பூச்சி..! இந்த விவரம் தெரியாத (மேசியாவின்) எதிரிகள் உங்களுக்கு ஆசிரியர் வசந்தகுமாரைத் தவிர யாரையும் தெரியாது என்று எண்ணிக்கொண்டு தூஷித்தார்கள்;ஆனால் அவர்களுடைய தவறான கணிப்புக்கு எதிராக‌  இதமானதொரு நகைச்சுவையுடன் கொட்டு வைத்த உங்களுக்கு ஒரு ஷொட்டு..!

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

என்னை உற்சாகப்படுத்திய சகோ. சில்சாமிற்கு நன்றி

போகிறபோக்கைப் பார்த்தால் நான் கீழே குறிப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் சீடர் என எழுதுவார் போல. அப்படி எழுதினால் நான் இன்னும் அதிகம் சந்தோஷப்படுவேன்.

வேதப்புரட்டன் ஏரியஸ் மற்றும் ரசல் உபதேசத்தை தனது சொந்த உபதேசம் போல் தனது கண்டுபி்டிப்பு போல் பேசும் பபிலோனிய புராணத்தைக் கொண்டோருக்கு இதுவெல்லாம் புரியாது. சரித்திரமும் தெரியாது.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கொல்வின் அவர்களுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன்; எங்க ஊருல சொல்லுவாங்க, "கோணியிலே கல்லைக் கட்டி அடிக்கிறது போல" என்று; நான் அதுபோலவே சமாளித்துக்கொண்டிருந்தேன்;ஆனாலும் வேதம் சொல்லுகிறது, "மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான்." (2.தீமோத்தேயு.2:5) என்பதாக; "நிறைகுடம் ததும்பாது" என்பார்கள், அதற்கு நீங்கள் ஒரு உதாரணம்; தொடரட்டும் உங்கள் பணி, நீங்கள் முடிசூட்டப்படுவீர்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
ஒரு பெரிய தேவன் இன்னொரு தேவனை (Demi god) படைத்து...இது என்ன மதம்?
Permalink  
 


உங்களுக்காக சில தகவல்கள்

Charles Taze Russell (1852-1916) தன் ஆரம்பத்தைக் கொண்டுள்ளது. இவர் 1852 February 16 இல் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள Alleghency என்னுமிடத்தில் பிறந்தார். 

ஆரம்பத்தில் இக்குழுவினர் ரசலைட்ஸ் எனும் பெயரிலேயே அறிமுகப்படுத்தப் பட்டிருந்தனர். 1931 இலேயே யெகோவா சாட்சிகள் என்று பெயராயிற்று

ஆரம்பத்தில் கிறிஸ்தவத் திருச்சபையின் பிரஸ்பிட்டேரியன் சபையிலும் பி்ன்னர் கொங்கிரிகேஷனல் சபையிலும் அங்கத்தினராக இருந்தார்.
பாரம்பரிய கிறிஸ்தவ உபதேசங்கள் இவருக்கு திருப்பதியளிப்பதாய் இருக்கவில்லை. வாலிப காலத்தில் திரித்துவம் மற்றும் நரகம் பற்றிய போதனைகள் இவருக்கு அதிருப்தியையும் அவிசுவாத்தையும் ஏற்படுத்தியது. (Anonymous Jahovah's Witnesses in the Divine Purpose pp14-15)

ஆரம்பத்திலிருந்து கிறிஸ்தவ சபையின் நரகத்தை பற்றிய போதனை ரசலுக்கு அதிக பயத்தையும் மனக்குழப்பத்தைம் ஏற்படுத்தியிருந்தது. (Source: J.H. Gerstner, The Teaching of Jehovah's Witnesses, p7)

1869 ம் ஆண்டில் ரசல் 17 வயதுடையவராக இருக்கும்போது கிறிஸ்தவத்தையும் வேதாகமத்தையும் நிராகரித்தவராக பௌத்தம், Confucianism மற்றும் கீழைத்தேய மதங்களைப் படிக்கத் தொடங்கினார். (Source : D. Harris, Awake to the Watch Tower, p19) ஆனால் 1870 ஆம் ஆண்டு 7ம் நாள் அட்வெந்து சபையின் போதனைகளினால் கவரப்பட்டார். அங்கிருந்துதான் மரணத்தின்போது மனித ஆத்துமா இல்லாமல் போகும். துன்மார்க்கர் நித்தியகாலமாய் துயரப்பட மாட்டார்கள், நரகம் இல்லை போன்ற போதனைகளைப் பெற்றார். (Source : A.M. Hoekema, The Four Major Cults, p224)

1879 இல் Zion's Watch Tower and Herald of Christ“s Presence என்னும் சஞ்சிகையை வெளியிடத் தொடங்கினார். 1874 இல் இயேசுக்கிறிஸ்துவின் பிரசன்னம் உலகில் இருப்பதை அறிவிப்பதே இச்சஞ்சிகையின் பிரதான நோக்கமாக இருந்தது. 1884 Zion's Watch Tower and Tract Society எனம் பெயரில் ரசல் தனது குழுவை மதச் சங்கமாக பென்சில்வேனியாவில் பதிவு செய்தார். 1896 இல் இச்சங்கத்தின் பெயர் Watchtower Bible and Tract Society என்று மாற்றப்பட்டது. 1908ல் இதன் தலைமையகம் நியூர்க்கிலுள்ள Brooklyn என்னும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

1914 இல் இவ்வுலகில் இயேசுக்கிறிஸ்து ஆயிரம் வருடஅரசாட்சியை ஸ்தாபிப்பார் அதற்கு முன் 40 வருட காலம் ஆயத்தகாலம் இருக்கும் என்றும் ரசல் போதித்தார். (Source : J.K. Van Baalen, The Chaos of Cults)

1873 இல் இயேசுக்கிறிஸ்துவின் வருகையின் நோக்கத்தையும் தன்மையையம் பற்றி The Object and Manner of the Lord's Return என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.

1886 இற்கும் 1906 இற்கும் இடைப்பட்ட காலத்தில் Studies in the Scriptures என்ற பெயரில் 6  தொகுதிகள் கொண்ட தனது உபதேச நூலை வெளியிட்டார். 1916 இல் ரசல் மரணமடையும் வரை 15,000,000 பிரதிகள் வெளியிடப்பட்டிருந்தன. 7வது தொகுதி ரசல் மரணமடைந்த பின் The Finished Mystery எனும் தலைப்பில் 1917 இல் வெளிவந்தது. 1917 ஆம் ஆண்டுடன் புறஜாதியாரின் காலம் முடிவடைந்துவிட்டதாக நம்பிய ரசல் அவ்வாண்டு ஆரம்பமான முதலாவது உலகமகா யுத்தத்தை அர்மகெதோன் யுத்தகமாகக் கருதினார். இவ்வுத்தம் ஆரம்பமாகி இரண்டு வருடங்களில் ரசல் மரித்தார்.

(மேலும் புதிய ஆர்வமூட்டக்கூடிய விடயங்களுடன் எழுதுகிறேன். சற்றுப் பொறுத்திருங்கள்.)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
இது என்ன மதம்?
Permalink  
 


யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளான காவற்கோபுரம், விழித்தெழு சஞ்சிகைகளையும் இன்னும் அவர்களின் சில நூல்களையும் நீண்ட  காலமாக படித்து வருகிறேன்.

ரசல் பற்றி எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம். விரைவில் இவர்களின் தலைவர்கள் குறித்த தனிப்பதிவுகளும், மற்றும் யெகோவா சாட்களின் கொள்கைள், அவை நவீன காலத்தில் மாற்றமடைந்த விதங்கள் குறி்த்தும் பார்ப்போம். அவர்களின் வெளியீடுகளை படிப்பதால் அவர்கள் பற்றிய அறிவு ஓரளவு உண்டு். ஏராளமான தகவல்களை சேகரி்த்து வைத்துள்ளேன். அவற்றினை முறையாக தொகுக்க வேண்டும் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருங்கள் பின்னர் தருகிறேன். சிலதகவல்கள் அவர்களிடம் நேரடியாக விசாரித்துப் பெற்றவை. மேலும் மேலும் தகவல்களைத் திரட்டி வருகிறேன்.

அவர்கள் எங்குமே கத்தோலிக்கர்கள்தான் திரித்துவ உபதேசத்தை  உருவாக்கியதாக கூறவில்லை. இதற்கு எதுவித ஆதாரங்களும் இல்லை.  அரைகுறை வேதப்புரட்டர்களின் கட்டுக்கதைகளே அன்றி வேறில்லை. அப்படியிருந்தால் ஆதாரத்துடன் அவர்களின் நூலின் பெயருடன் குறிப்பிடவும். பக்க இலக்கங்களை குறிப்பிட்டால் இன்னும் நல்லது.

திரித்துவம் என்னும் பதமானது Tertullian என்னும் சபை பிதாவினால் 2ம்  நூற்றாண்டில் (கி.பி 150-212) கிறிஸ்தவ இறையியலுக்கு  அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆயினும் இவர் இல்லாத ஒன்றை  சொல்லவில்லை.  வேதத்தில் மூவராயிருக்கும் ஒரு தேவனைக்  குறிப்பிடவே இந்த சொல்லினை உபயோகித்தார். (Source : Fortman, The Triune  God : A Historical Stuy of the Doctrine of Trinity p112)

இந்த சிறு உதாரணத்தைப் பாருங்கள்;புவியீர்ப்பு சக்தி என்னும்  வார்த்தை பூமிக்குள் இருக்கவில்லை. ஆனால்  பூமிக்குள் ஈர்ப்பு சக்தி இருப்பதைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் ஒரு  புதிய வார்த்தையால் அதனை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே ஈர்ப்பு சக்தி என்ற ஒன்று இருந்தது. அதனை ஒரு புதிய வார்த்தையின் மூலம் மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். எனவே இங்கு அவர் இல்லாத எதனையும்  சொல்லவில்லை.

இது போன்றதுதான் திரித்துவமும். வேதத்தில் திரித்துவம் என்ற  வார்த்தை கிடையாது. ஆனால் வசனங்களின் மூலம் ஒரே தேவன்  மூவராயிருக்கிறார் என அறிகிறோம். திரித்துவம் என்ற வார்த்தையை விட  திரியேகத்துவம் என்ற வார்த்தையே மிகப் பொருத்தமானது.

யெகோவா சாட்சிகள் திரித்துவம் பற்றி என்ன கூறுகிறார்கள் என  பாருங்கள்:-

  • இது தேவனை நிந்திப்பதற்காக சாத்தானால் உருவாக்கப்பட்டதாகும். (Source  : Anonymous, Riches p.185)
  • புராதன பபிலோனிய, எகிப்திய, அசீரிய மதங்களிலும் மூன்று  தெய்வங்களைப் பற்றிய நம்பிக்கைகள் இருப்பதால் அதிலிருந்து  பெறப்பட்டதே இவ்வுதேசம். (Source : Anonymous, Should you Believe in the  Trinity?pp 3, 9)
  • இயேசுக்கிறிஸ்து மரித்து 300 ஆண்டுகளுக்கு பின்பே உருவாக்கப்பட்டது.  (Source : Anonymous, Should you Believe in the Trinity? p6)
  • இது அக்காலத்தில் சபையின் இறையியலுக்கு கிடைத்த வெற்றியாகவும்,  வேத வசனங்களை நம்புகின்றவர்களுக்கு கிடைத்த தோல்வியாகவும்  உள்ளது. (Source : Anonymous, Mankind's Search for God p276)
  • இயேசுக்கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களும் முன்னறிவித்த ஆவிக்குரிய வீழ்ச்சி இதுவே என விளக்குகின்றனர் (Source : Anonymous, Should you Believe in the Trinity?pp 12)


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் கொல்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்; அருமையானதொரு கட்டத்துக்கு நாம் வந்துள்ளோம்;இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அடியேன் எண்ணுகிறேன்;இதுவரை (மேசியாவின்) எதிரிகள் இகழ்ந்து பேசாத இரஸ்ஸல் எனும் கள்ளப் போதகனைக் குறித்த தகவல்களை மட்டும் இங்கு நேர்த்தியான முறையில் தொகுத்தளிக்குமாறு வேண்டுகிறேன்;(மேசியாவின்) எதிரிகள் நம்மை எவ்வளவு தான் திசைதிருப்பினாலும் அதனைப் பொருட்படுத்தாமல் இந்த நடையிலேயே மேலதிக தகவல்களை பதிக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்;தனிப்பட்ட விமர்சனங்களையும் நம்முடைய உணர்வுகளையும் வேறே பொருத்தமான திரியிலோ அல்லது தனித் திரியாகவோ துவங்கி பதிக்கலாம்;தங்களுடைய விலைமதிப்பில்லாத பங்களிப்புக்கு நன்றி.

மேலும் தாங்கள் கத்தோலிக்க பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்ற முறையில் மற்றுமொரு வேண்டுகோளை தங்கள் முன்பாக வைக்க யோசிக்கிறேன்; அதாவது என்னைப் பொருத்தவரையிலும் திரித்துவம் எனும் கொள்கையை கத்தோலிக்க மார்க்க ஸ்தாபகர்கள் அங்கீகரித்தார்களே தவிர தோற்றுவிக்கவில்லை;இது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் ஆகும்; இதனை நிரூபிக்கும் தகவல்கள் தங்களிடம் இருக்குமானாலும் தயவுசெய்து கொடுத்து உதவவும்;ஏனெனில் திரித்துவம் என்பது கத்தோலிக்கத்தால் திணிக்கப்பட்ட கொள்கை என்பது (மேசியாவின்) எதிரிகளின் கூற்றாகும்; இஸ்லாமியர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று அதனை பவுலடிகளே திணித்தார் என்றும் கூறுவதுண்டு.அதனை அடித்து நொறுக்கிய உமர் அவர்களின் கட்டுரையை ஏற்கனவே நம்முடைய தளத்தில் பதித்துள்ளேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ரஸல் பற்றிய சிறுகுறிப்பு

தன்னைப் பற்றியும் தனது எழுத்துக்கள் பற்றியும் ரசல் மிகவும் உயர்ந்த எண்ணமுடையவராக இருந்தார்.. “தனது வேதப் புத்தகத்தையா? அல்லது வேதாகமத்தையா வாசிக்க வேண்டும் என்று கேட்பவர்களுக்கு ரசலின் பதில் தன்னுடைய புத்தகங்களையே வாசிக்க வேண்டும் என்பதாம். (Source : The Watchtower Reprints, 15 September 1910 P4685)

தன்னை பவுல் அப்போஸ்தலனுக்கு சமமாக கருதிய ரசலின் வாழ்க்கை சீர்கேடு நிறைந்தது. விபச்சாரம், கபடம், பெருமை, சுயலம், அடக்கியாளுதல் எனும் காரணங்களுக்காக இவரது மனைவி இவரை 1913 இல் சட்டரீதியாக விவாகரத்து செய்தார். (Source : The Brooklyn Daily Eagle. 1 November 1916, Quoted in W. Martin, The Kingdom of Cults, p62)

பணமோசடி, ஏமாற்று வியாபரம், நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லுதல் என்பன இவரின் வாழ்க்கையில் கறைபடுத்திய சம்பவங்களாகும்
1911ம் ஆண்டு June 15 The Watchtower சஞ்சிகையில் வழமையான விதையை விட 10-15 மடங்கு அதிக விளைச்சலைத் தரும் விளம்பரத்தை வெளியிட்டு சிக்கிக்கொண்டார் புற்றுநோய்க்கு மருந்து பற்றியும் தனது சஞ்சிகையில் வெளியிட்டார் (Source : D. Harris Awake to the Watch Tower P20)

மூலபாஷை பற்றிய வழக்கொன்றில் தனக்கு மூலமொழிபரீட்சியம் உண்டு எனவும், தான் இறையியலை முறைப்படி கற்றவன் என்றும் தேவனுடைய நாமத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார். ஆனால் வழக்கில் அவரிடம் கிரேக்க புதிய ஏற்பாட்டை கொடுத்து வாசிக்க சொன்னபோது, தான் பொய் சொன்னதாக ஒப்புக் கொண்டார். (Source: W. Martin, The Kigdom of the Cults pp64-65)


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//நீங்கள் யூதர்களின் குலதெய்வம் என்று சொல்லும் யெகோவா தேவன் தான் என்பதை இவர்கள் வசந்தகுமார் சொல்லி தரவில்லை போல..//

நல்லநகைச்சுவை. ஒருவரின் நூல்களை வாசிக்காமல் கருத்துக் கூறகூடாது. அது ஏற்படையதாக இருக்க மாட்டாது. ஆசிரியர் இலங்கை எழுத்தாளர். அவர் சொல்லித் தரவில்லை என்று எதை வைத்து சொல்லுகிறீர்கள். ரஸலைப் பற்றி யாரும் விமர்சிக்கலாம். அவர் எழுதிய நூல்கள் உலகம் முழுவதிலும் கிடைக்கும். ஏரியஸ் என்ற வேதப்புரட்டனின் கருத்துக்களையும் தனது சொந்தக் கருத்துக்களையும் சேர்த்து போதனையாக்கியவர்தான் ரஸல். அவரின் நூல்களில் Citation & Reference உள்ளதா? இப்படி ஒன்றுமே கொடுக்காத ஒரு மனிதனுடைய சொந்தப் போதனைகளை உங்கள் சொந்தப் போதனைகளாகக் கொண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படத்தக்க விடயம் அல்ல.

மற்றும் யெகோவா சாட்கள் வெளியீடும் நூல்களில் ஆசிரியரின் பெயர் வெளியிடப்படுவதில்லை. ரஸல் எழுதிய நூல்களின் கூட அவரின் பெயர் இடம்பெறுவதில்லை. இம்முறையை நீக்கிய உங்கள் இன்னொரு தலைவராகிய Nathan Homer Knorr (1905-1977) தான். 1942 இலிருந்து இந்த முறையை அறிமுகப்படுத்தினார். (Source : R.M. Bowman , Jehovah's Witnesses , p11)

சகோ. சில்சாம் உங்களுக்கு மிக்க நன்றி. நான் சொல்லவந்த கருத்துக்களை பெரும்பலானவற்றை நீங்கள் சொல்லிவிட்டீர்கள்.

நான் பதிக்கும் கட்டுரையாசியர் இவரை ரொம்பவே இடஞ்சல் பண்ணுகிறார் போல். நான் கூட இவ்வளவு தடவை ஆசிரியரின் பெயரை உச்சரித்ததில்லை. எங்காவது எழுதியுள்ளேனா பாருங்கள். ஆசிரியர் எழுதி உள்ள நூல் என்றால் கண்டிப்பாக அவரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். இது நாகரீகம் அதன்போது மட்டுமே பாவித்துள்ளேன். மற்றது Refernece பகுதியில் யெகோவா சாட்சிகளின் வெளியீடுகளும் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் எங்கிருந்து கருத்துக்களை எடுத்தாரோ Reference பகுதியில் ஆசிரியர்களின் பெயர் விபரங்கள், பக்க இலக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. யாரும் இதனை சோதனையிட்டுப் பார்க்கலாம். இது ஒன்றும் அவரின் ஆராய்ச்சி அல்ல. ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட ஆராய்ச்சிகளை தான் ஆசிரியர் மீண்டுமாக எடுத்து கையாண்டு எழுதியுள்ளார். நூலகவியலில் அடிப்படை அறிவு இல்லாவர்கள் இப்படி கொஞ்சமும் அறிவில்லாமல் பேசிக்கொண்டேதான் இருப்பார்கள்.  பல்கலைக்கழகத்திற்கு ஆய்வுக்கட்டுரைகளை சமர்பிக்க வேண்டியிருந்தால் எந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும்? வேதபுரட்டர்களுக்கு இது புரிவதில்லை. ஏனென்றால் ரஸலின் நூல்கள்தான் இவர்களுக்கு வேதப்புத்தகம். வேதமோ இவர்களுக்கு இரண்டாம் பட்சம்.


-- Edited by colvin on Thursday 3rd of March 2011 11:14:39 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • "பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.
  • அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.
  • அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்.
  • சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
  • இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.
  • மேலும் நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாயிருக்கிறாய், இந்தக்கல்லின் மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை."(மத்தேயு. 16:13 -18)
// யூதனூடைய குலதெய்வாம் தான் யெகோவா தேவன் என்றும் அப்படி என்றால் அவர்கள் சொல்லுவதை பார்த்தால் கிறிஸ்துவை கூட அவர்கள் உபயோகித்த வார்த்தைக்கு ஆளாக்குகிறார்கள் போல்!! இயேசு கிறிஸ்து யூதனாக பிறந்து யூத முறைபடி வாழ்ந்து, ஆனால் பேதுருவின் விசுவாச அறிக்கையின் மேல் சபையை நிறுவியவர்!! //

மாம்சத்தில் வெளிப்படும் முன்னர் பிதாவின் வார்த்தையாக இருந்த தேவனை யூதர்கள் தொழவில்லை என்பதை உங்களால் நிரூபிக்க முடியுமா? பிதா ஒருபோதும் தனிமையாக இருந்ததில்லை;அவர் ஆவியாகவும் வார்த்தையாகவுமே இருந்தார் என்கிறது வேதம்; ஆவியான தேவனுடைய பயங்கரத்தை தரிசித்த யூதர்கள் வார்த்தையால் அவர் பேசியதையும் கேட்டார்கள்;வார்த்தையாகிய தேவன் என்பவரே கட்டளையாகக் கொடுக்கப்பட்டார்;கட்டளை மீறப்பட்ட போது மீறுதலின் கொடூரத்தை ஏற்பதற்காகவே அவர் மாம்சத்தில் இறங்கி வந்தார் என்கிறது வேதம்;மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனுக்கு இயேசு என்ற பெயர் வைக்கப்பட்டதே தவிர அவர் பிதாவின் வார்த்தை என்ற நிலையில் அவரும் யெகோவா அதாவது மாறாத பிதாவின் வார்த்தையானவர் ஆவார்;யெகோவா என்பது தனிப்பட்ட பெயரல்ல;அது அவரது தன்மையைக் குறிக்கும் காரணப் பெயர் மாத்திரமே;அது இயேசுவுக்கும் சாலப் பொருந்தும்;இயேசு என்பதும் தனிப்பட்ட பெயரல்ல;அதுவும் ஒரு காரணப்பெயரே;அதுவே யோசுவாவுக்கும் ஓசியாவுக்கும் வழங்கப்பட்டது;இரட்சிப்பவர்களெல்லாம் இரட்சகர்களே;ஆனால் பாவத்திலிருந்து இரட்சிக்க வந்தவர் இயேசு மாத்திரமே;அவர் மாத்திரமே இம்மானுவேல் எனும் சிறப்புப் பெயரால் வழங்கப்பட்டார்;சாவாமையுள்ளவர் எனும் யெகோவா தேவனுக்குரிய சிறப்புப் பெயருக்கும் மாம்சத்தில் வெளிப்படும் முன்னரே தகுதியானவர் இயேசுவானவரே;அவர் மாத்திரமே இயேசுவாகவும் கிறித்துவாகவும் வெளிப்பட்டவர்;அவர் மாத்திரமே மனிதராய்ப் பிறந்தவர்களில் பிதாவின் நாமத்தை சுதந்தரித்துக்கொண்ட ஒரே மனிதன்;மனிதர்களில் மனிதர்;தேவர்களின் தேவன்;இப்படியாக அவரைக் குறித்து அறிகிற அறிவு உங்கள் கூட்டத்தாருக்கு மறுக்கப்பட்டதன் காரணமாகவே நீங்கள் பொறம்போக்குகளாகத் திரிகிறீர்கள்;சபைகளை சிதறிடித்து விசுவாசத்துக்கு இடறலாக இருக்கும் உங்கள் மீது தேவ கோபம் வெளிப்பட்டிருக்கிறது என்று எச்சரிக்கிறேன்..!
  • "இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்." (எபிரெயர்.1:4)
இயேசுவானவர் சுதந்தரித்துக்கொண்ட விசேஷித்த நாமம் எது என்பதைக் கொஞ்சம் விளக்குவீர்க்களா,கனவான்களே..?

// பேதுரு சொன்ன அந்த விசுவாசப்பிரமானமே, நீர் (இயேசு கிறிஸ்து) ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்பது தான்!! இதை விசுவசிப்பவர்களே சபையாக கிறிஸ்துவின் சரீரமாக இருப்பவர்களாகிறார்கள்!! ஆனால் கிறிஸ்துவின் பிதாவாகிய யெகோவா தேவனை தன் தேவன் என்று சொல்லுபவன் பொறம்போக்கு என்று சொல்லிக்கொண்டு கிறிஸ்துவை பிதா என்று அறிக்கை செய்யும் ஒரு கூட்டனி பேதுரு சொன்ன அதே விசுவாசத்தை நாங்கள் சொல்வதை என்னி என்னி பரிகாசம் செய்கிறார்கள் //

அது சரி, அந்த விசுவாசப் பிரமாணம் என்னவானது? அது மறுதலித்ததோடு  அவன் இயேசுவை முடிந்துபோனதே? பிறகு உயிர்த்தெழுந்த இயேசுவை தேவனாக பேதுரு தரிசித்த பிறகு தானே அவ
ன் மேய்ப்பனாக உயர்த்தப்பட்டான்? தேவனுடைய-(Father God) குமாரனாகிய-(Begoten Son) கிறித்து-(Holy Spirit)=Trinity(?) என்பது பேதுருவின் அறிக்கை;இதில் உள்ள விசேஷம் என்ன? இதுவே முழுமையான அறிக்கையா? இதற்கு மேல் அப்போஸ்தலர்கள் அவரைப் புகழ்ந்ததே இல்லையா? மேசியாவைக் குறித்து மாத்திரமே கேள்விபட்டிருந்த அவர்களுக்கு சர்வ வல்ல தேவனே மேசியாவாக வருவார் என்பதைக் குறித்த ஞானம் இருந்ததா? அது அவர்கள் கற்பனைக்கு எட்டாத தேவ இரகசியமாகவே இருந்தது;எனவே இயேசுவைக் குறித்த சீடர்களின் அபிப்ராயம் ஒவ்வொரு கட்டத்திலும் மாறிக்கொண்டே இருந்தது; அவர்களால் இயேசுவானவர் விதம் விதமாக விளங்கிக் கொள்ளப்பட்டார்; அவர் ஒன்றையும் புறக்கணிக்கவில்லை;ஏனெனில் அவர்களுக்கு எந்த அளவுக்குத் தம்மை வெளிப்படுத்த சித்தமாயிருந்தாரோ அதற்கு மேல் அவர் தம்மை தமது சீடர்களுக்கே வெளிப்படுத்தவில்லை;இயேசுவானவர் தம்மை வெளிப்படுத்தியதிலேயே உச்சக்கட்ட அனுபவத்தைப் பெற்றவர் அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான் மாத்திரமே;

வாசகர்களின் கவனத்தை ஈர்க்கவே இத்தனை நிதானமாக எழுதுகிறேன்;மற்றபடி வேதப் புரட்டர்களிடம் நான் எப்போதுமே நிதானமாக‌ விளக்கிக் கொண்டிருப்பதில்லை;அவர்களுக்கு தான் "எல்லாம்" தெரியுமே..! இயேசுவானவரும்
இவர்களைப் போன்ற அறிவுஜீவிகளிடம் அதிக நேரத்தை செலவிடவில்லை;அவன் கேட்கிற கேள்வியையே திருப்பி கேட்டுவிட்டு அவர் பாட்டுக்கு போய்க்கொண்டே இருப்பார்;ஆனால் ஆர்வத்துடன் கேட்பவனுக்கு இரவெல்லாம் அமர்ந்திருந்து போதித்தார்;

பேதுருவின் அறிக்கையுடன் எல்லாம் நிறைவேறியிருந்தால் மத்தேயுவின் சுவிசேஷத்தில் 16ம் அதிகாரம் 18ம் வசனத்துடன் புதிய ஏற்பாடே முடிந்திருக்கும்; இந்த மடையர்களுக்கு இதைச் சொல்லக்கூட எனக்குப் பிரியமில்லை;இவ்வளவு திமிராக எல்லாம் அறிந்தவனைப் போலப் பேசுவோர் அறியாமலே இருப்பது தான் நல்லது;எங்காவது முட்டி மோதி எப்படியாவது வந்துசேரட்டும்;எத்தனை கலகம்...எவ்வளவு குழப்பம்...இந்த பாவிகளால்..! நான் வேற்று மத நம்பிக்கையாளர்களிடம்  செய்யவேண்டிய பணிகள் ஏராளம் இருக்க பிசாசின் ஆவியினால் பீடிக்கப்பட்ட‌ இந்த மிருகங்களுடன் போராடுவதைக் குறித்து அதிகமாக வருந்துகிறேன்;

"நீர் தேவனுடைய குமாரனாகிய கிறித்து " என்ற பேதுருவின் அறிக்கையைக் காட்டிலும் சிறந்த பகுதிகள் அதன் பின்னரே வரப்போகிறது; பேதுருவின் அறிக்கையானது அனைத்துக்கும் ஒரு ஆரம்பமே;அதிலும் பேதுருவினால் உறுதியாக நிற்க முடியவில்லையே;அடுத்த சில வசனங்களிலேயே பிசாசின் வசனத்தைப் பேசி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டான் அல்லவா? அதே நிலையில் தான் கோவை வெறியனும் இருக்கிறான்..!

இயேசுவானவர் மகிமையடைந்து பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் மேன்மையைக் குறித்தெல்லாம் இன்னும் பேதுரு அறியாத ஆரம்ப நிலையையே தேர்ந்த போதகரான இயேசுவானவர் "வெல்டன்" என்று பாராட்டுகிறார்;அப்புறம் அவரை யார், யார் என்னவெல்லாம் சொல்லிப் புகழ்ந்தார்களோ ஒன்றையும் அவர் மறுக்கவில்லை;ஏனென்றால் அவர் இன்னும் மகிமையடையவில்லை என்று வேதம் கூறுகிறது.

  • "அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்." (யோவான் 14:6)
  • "என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;"(யோவான் 6:44)
// கிறிஸ்து யெகோவா தேவனை தன் பிதா என்றும் நம் பிதா என்றும் சொல்லியிருப்பது அந்த கூட்டத்தார் நினைவில் கொள்ளட்டும்... கிறிஸ்துவே அந்த காணக்கூடாத பிதாவிடத்திற்கு கூட்டி செல்லும் வழி என்பதை என்னுடைய எந்த பதிவும் மறுத்ததோ, மறைத்ததோ கிடையாது!! வசந்தகுமாரை நம்புவோரை காட்டிலும் வேதத்தை நம்பும் எனக்கு கிறிஸ்து தான் பிதாவிடத்தில் என்னை சேர்ப்பவர் என்பது எனக்கு தெரியும்!! ஆனால் கிறிஸ்துவிடத்திற்கு வர காரணமே நீங்கள் யூதர்களின் குலதெய்வம் என்று சொல்லும் யெகோவா தேவன் தான் என்பதை இவர்கள் வசந்தகுமார் சொல்லி தரவில்லை போல..//

அடேய் மாக்கான்...அவர் வழி என்பது சரி தான்...அது மாத்திரமா? சத்தியமும் ஜீவனும் அவர் தானே? அதை எப்படி விளக்குவீர்கள்? அதோ குந்திக்கினு கீறாரு பாரு அவரு தான் என்று கைக்காட்டும் டூரிஸ்டு கைடு என்று என் இரட்சகரை நினைத்துக்கொண்டீர்களோ? நாசமா போச்சு...இப்படி தான் இவ்வளவு நாளா பைபிளை வாசிக்கிறீங்களா?

இதுல வேத மாணவர் என்று வேறு ஒரு விளங்காத பேர்..! நாங்கள் வசந்தகுமார் அவர்களை வேத ஆராய்ச்சியாளர் என்ற அளவிலேயே வைத்திருக்கிறோம்;அவரை வைத்து நாங்கள் சபைகளை உடைக்கவில்லை; ஆனால் இரஸ்ஸல் எனும் படுபாவியால் விளைந்த தீமைகள் ஒன்றா, இரண்டா? அவனிடமிருந்து தன்னை வேறுபடுத்தி காட்டவே அவனை விட இன்னும் தீவிரமான கொள்கைகளை இன்னொருத்தன் வந்து புகுத்தினான்? அப்படியானால் யெகோவா சாட்சிக்காரன் உருவாக யார் காரணமாக இருந்தான் என்று விளங்கவில்லையா? வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவன், தன்னை போதகன் என்றும் பாஸ்டர் என்றும் கொல்லிக் கொள்ளலாம்;சொத்து வாங்கலாம்;பொண்டாட்டிக்குத் தெரியாமல் வேலைக்கார  சிறுமியைப் பிடித்து கொஞ்சலாம், சிறுவனுடன் ஹோமோ செக்ஸ் பண்ணலாம்; அதையெல்லாம் கேட்கமாட்டீங்க;ஆனால் நாங்க இங்கே யாரோ ஒரு முகந்தெரியாத ஒரு மனுஷன் எழுதியதை வேத வார்த்தையுடன் ஒப்பிட்டு யோசித்தாலே மாபாவமோ? நல்லா இருக்கப்பு உங்க நாயம்..!


// இவர்கள் சந்தடிசாக்கில் யாரை பொறம்போக்கு என்று சொல்லுகிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை, யாரை அவமாக்குகிறார்கள் என்றும் இவர்களுக்கு புரியவில்லை.. ரஸ்ஸலை ஒரு போதும் பின்பற்றுகிறோம் என்கிற ஒரு வார்த்தையையும் சொல்லாமல் இருந்தாலும், வசந்தகுமாரின் சீஷனாக இருக்கும் ஒருவருக்கு அப்படி என்ன தான் ரஸ்ஸலின் மேல் பாசமோ, விட்டு கொடுக்காமல் எழுதுவதை அவர் பதிவுகளை பார்ப்பவர்களுக்கு தெரியும்!! //

யார் பொறம்போக்கு என்பதைக் குறித்து தெளிவாக எழுதியும் காமாலைக் கண்ணனைப் போல எதையோ பிதற்றிக் கொண்டிருக்கிறார், "கோவை வெறியன்". இந்த போர் என்றைக்கும் முடியுமோ? எல்லோருக்கும் ஆயிரம் வருட அரசாட்சியில் பங்கு கிடைக்குமென்றால் அப்படியே விட்டு போங்களேன்; ஏன் ஓயாம மாரடிக்கிறீங்க? எங்களுக்கு தான் அவசரம் உங்களுக்கு என்ன? இந்த உலகத்தையே ஏதேனாக மாற்ற உங்கள் பிரபஞ்சத்தின் தேவன் வரப்போகிறார் அல்லவா,பிறகு எதற்கு டென்ஷன்?

யார் பொறம்போக்கு தெரியுமா? "தள்ளி நில்லுபா" என்று சொல்லிவிட்டு மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனையே புறக்கணித்துவிட்டு நேரடியாக பிதாவை பிடித்து கொஞ்சுவேன் என்ற மனப்பால் குடிப்பவனே பொறம்போக்கு;என்னைக் கண்டவன் என் பிதாவைக் கண்டான் என்ற இயேசுவை சாதாரண சிருஷ்டி என்று இகழ்வன் பொறம்போக்கு?

இரஸ்ஸல் என்பவனும் கூட பாஸ்டர் இரஸல் என்றே செல்லமாக அழைக்கப்பட்டான்;ஒருவன் செய்த காரியத்தை மற்றொருவன் தொடர்ந்து செய்யும்போது இயல்பாகவே மற்றவர்கள் முந்தினவனுடன் இணைத்து யோசிப்பது இயல்பு;உதாரணமாக முகமதுவை ஏன் எதிர்க்கிறோம்;ஏன் குரானை ஏற்கிறதில்லை;அது ஏற்கனவே எழுதப்பட்ட வேதத்தைத் தழுவியும் அதை மறுத்தும் திரித்தும் எழுதப்பட்டுள்ளது;

அதுபோலவே இரஸ்ஸல் எழுதியவற்றுக்கும் உங்கள் போதனைக்கும் எந்த வித்தியாசமும் இல்லாதிருப்பதாலேயே உங்கள் இரஸ்ஸலின் சீடர்கள் என்றும் அவனுடைய மாணவர்கள் என்றும் சொல்லுகிறோம்;அவனுக்கு நியமிக்கப்பட்ட காரிருளே உங்களுக்கும் நியமிக்கப்பட்டிருக்கிறது;ஏனெனில் அவன் செய்த கிரியைகளையே நீங்களும் செய்கிறீர்களே..!

நீங்கள் இரஸ்ஸலின் போதனைகளை விட்டு வெளியே வாருங்கள்;நாங்களும் உங்களை இரஸ்ஸலின் சீடர்கள் என்று கூறுவதை நிறுத்திக் கொள்ளுகிறோம்; சகோ.கொல்வின் அவர்கள்  இன்னொருவருடைய கருத்தை திருடாமல் இதனை நான் இவருடைய புத்தகத்திலிருந்து எடுத்து பயன்படுத்துகிறேன் என்று தைரியமாக அறிவிக்கிறார்;ஆனால் நீரோ சற்றும் மனசாட்சியில்லாமல் பேடியைப் போல நீர் எழுதும் கருத்துக்களுக்கு எந்தவொரு பின்னணி ஆதாரத்தையும் தராததே நீர் ஒரு மோசடியாளன் என்பதற்கு நிரூபணமாகும்; ஏனெனில் அதை இன்னானிடத்தில் கற்றாய் என்பதை அறிவித்தால் உன் மானம் கப்பல் ஏறிவிடும்;ஏண்டா பாவி உனக்கு சொந்தமா யோசிக்கத் தெரியாதா?' என்று சமுதாயம் உன்னை இகழுமே என்ற அச்சத்தால் ஒளித்து மறைத்து எழுதுகிறீர்கள்; காரணம் உன் தலைவனே ஒரு பொறம்போக்கு என்பதை நண்பர் கொல்வின் அவர்கள் அழகாக இங்கே குறிப்பிட்டுள்ளார்; அனானிமஸ் என்றால் அர்த்தம், பொறம்போக்கு என்று தானே அர்த்தம்..?

இரஸ்ஸல் காலத்துக்குப் பிறகு கிடைத்த மூலப்பிரதிகளையும் மொழியியல் அறிஞர்களின் அரும்பெரும்பணியால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் கருத்தில் கொள்ளாமல் இன்னும் இரஸ்ஸல் பாடிய‌ பழைய பாட்டையே பாடிக்கொண்டிருக்கும் நீங்கள் சீக்கிரத்திலேயே வெட்கப்படுவீர்கள்...அலறித் துடிப்பீர்கள்...யூதாஸைப் போல நான்று கொண்டு சாகும் நிலைக்குத் தள்ளப்படும் முன்பாக திரும்பினால் உங்கள் சந்ததிக்கு வர இருக்கும் கொடுமையான சாபத்தை தவிர்க்கலாம் அல்லவா..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒரு முக்கிய அறிவிப்பு

இங்கே யாரையும் தனிப்பட்ட முறையில் பொறம்போக்கு என்றோ விபச்சாரி என்றோ வேசியின் மகன் என்றோ பரதேசி என்றோ திருடன் என்றோ துருபதேசவாதி என்றோ அல்லது வேறெந்த தூஷணமான வார்த்தைகளினாலோ மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிடவில்லை என்பதை உளத் தூய்மையுடன் அறிவிக்கிறேன்.

ஆனால் எங்களை அதுபோல தூஷிப்பவர்களை இயேசுவானவர் காட்டிச் சென்ற மாதிரியின்படி மன்னித்து ஏற்றுக்கொள்ள எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

இந்த அறிவிப்புக்குப் பிறகும் மேற்கண்ட தூஷணமான வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட யாராவது இருப்பாரானால் அவர் இந்த வார்த்தைகள் தன்னைக் குறித்தே எழுதப்பட்டது என்று அதற்கு உரிமை கோருவாரானால் அதற்கு இவற்றை எழுதிய சில்சாம் ஆகிய நானோ யௌவன ஜனம் தளமோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://www.rickross.com/reference/jw/jw5.html

இரஸ்ஸலின் கதை அங்கே சிரிப்பா சிரிக்குது..அதை விட்டுட்டு...இங்க வந்து அலம்பல் பண்றாங்களே...எல்லா துருபதேசவாதியும் தன் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் குற்றங்களிலும் போதைகளிலும் சிக்கியவனாகவே இருக்கிறான் என்பதற்கு இரஸ்ஸலும் ஒரு உதாரணம்.

அந்த ஆள் துவங்கி வைத்த இந்த வேதாகம மாணவர் (bible Student and Jw's) இயக்கத்திலிருந்து நம்முடைய தோழர்களை விடுவிக்க முடிகிறதோ இல்லையோ அவர்களுடைய செயல்பாடுகள் காரணமாக புதியவர்கள் தடுமாறாதிருக்க நாம் ஆரோக்கிய உபதேசத்தைக் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் நியாயமான நேர்மையுடன் கூடிய நிலையிலிருந்து இடைவிடாது முயற்சிக்க வேண்டும்.

இவர்கள் பரிசுத்த வேதாகமத்தை ஒரு கேடயம் போல வைத்துக்கொண்டு பல அக்கிரமங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்;ஒவ்வொரு சிதறடிக்கப்பட்ட ஆத்துமாவும் "நான் அவங்கள சார்ந்தவன் இல்லை " என்று சொல்லி சொல்லி, பிரிந்துப் பிரிந்து செல்வதோடு இன்னும் பலரையும் பிரிக்கவே பிரிந்து செல்லுகிறது.

ஊழியர்கள் செய்யும் மோசடிகள் என்பது வேறு; உபதேசத்தில் கோளாறுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவது வேறு; இரண்டுமே ஆபத்தானது; இரண்டையும் கண்டிக்கவேண்டும்; இரண்டுக்கும் எதிராகவும் போராடிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு ஊழியர் செய்யும் மோசடியைக் காட்டி நீ செய்யும் துருபதேசத்தை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது;இரண்டையும் போட்டு குழப்பாதே என்று எச்சரிக்கிறேன்..!

உபதேசத்தைக் குறித்து பேசினால் அதைக் குறித்து மட்டுமே பேசு; தீர்வை எட்டமுடியாமற் போனால், இஸ்லாமியர்களைப் போல, "இதையே நாங்கள் நம்புகிறோம்,இது எங்கள் தீர்க்கதரிசி சொல்லிச் சென்றது"  என்பதை நேர்மையுடன் அறிவித்துவிட்டு அமைதியாயிரு; ஏனெனில் உன் போதகனை குறித்தும் பாஸ்டர் (Pastor) மற்றும் ப்ராஃபெட் (Prophet) என்றே குறிப்பிடப்படுகிறது; அதைவிட்டு உன் நொள்ளைக் கண்ணை வைத்துக்கொண்டு பார்த்ததையெல்லாம் வேதம் இதையே கூறுகிறது என்று அறிவிக்காதே; காரணம் நீ நான் எல்லாருமே திருடர்கள் தான்; இந்த வேதத்துக்கு உண்மையான உரிமையாளர்களான யூதரிடமிருந்து இதனைத் திருடி சொந்தங் கொண்டாடி பேசிக்கொண்டிருக்கிறோம்; இதைக் குறித்த எந்தவொரு ஐயத்துக்கும் நீ முதலாவது அவனையே விசாரித்திருக்கவேண்டும்; யூதனை மீறி அவனுடைய வேதத்துக்கு நீ வியாக்கியானம் செய்வது அக்கிரமம் அல்லவா? உன்னையும் என்னையும் பார்த்து யூதன் சிரித்துக்கொண்டிருக்கிறான்.

அவனுடைய குல தெய்வமான யெகோவா தேவனை பொறம்போக்கான நீ எப்படி உன் தெய்வம் என்று சொல்லமுடியும் என்று கேட்கிறேன்..!

பொறம்போக்கு என்ற கடுமையான சொல்லுக்காக வாசகர்கள் மன்னிக்கவும்; அது கெட்டவார்த்தையல்ல, புறசாதியினர் என்று வேதம் சொல்லும் சாதாரண வார்த்தையின் கொச்சையான பதமே; மேலும் பொறம்போக்கு என்றால் கேட்பார்,மேய்ப்பார் இல்லாத பரதேசி என்றும் பொருளாகும்; இயேசு இல்லாமலே நான் பிதாவை அறிந்துகொண்டேன்,என்பவனை கடிந்துகொள்ள பொறம்போக்கு என்ற அழகான தமிழ்ச் சொல்லைப் போன்றதொரு சொல் வேறு இருக்கமுடியாது என்ற காரணத்தினாலேயே அவ்வாறு குறிப்பிடுகிறேன்; இன்னும் இதுபோன்ற துரோகிகளுக்காக இயேசுவானவரே பாளயத்துக்குப் புறம்பே பாடுபட்டார் என்றும் வேதம் சொல்லுகிறது; யாருக்கும் அடங்காத பொறம்போக்குகளைத் தேடி அவரும் பொறம்போக்கைப் போல பாளையத்துக்குப் புறம்பே பொறம்போக்குகள் இருக்குமிடத்துக்கே வந்தார்;ஆனாலும் அவரில்லாமலே நாங்கள் தேவனிடம் ஏறிப் போவோம் என்று கூவும் பிசாசுகளை இவர்களுடைய ஆஸ்தான தூதனாகிய மிகாவேல் தூதனே எத்திவிடுவான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ரஸலின் மனிதப் போதனைகளை பின்பற்றுபவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். மனிதப் போதனைத்தான் இவர்களுக்கு முக்கியம். வேதம் முக்கியமல்ல.

தேவதூதர்களுக்கு கால் இல்லை. எனவே இயேசுவை பணிந்து கொண்டிருக்க முடியாது

இது சாட்சாத் மனிதப் போதனையின்றி வேறு என்ன?


பபிலோனிய பாரம்பரிய கதைகளில்தான் இப்படிப்பட்ட விடயங்களை அவதானிக்கலாம்.

பரிசேயர்களுக்கு புரியும் உண்மை கூட இவர்களுக்குப் புரிவதில்லை. ஏனென்றால் ரசலின் மனிதப் போதனைகளை பின்பற்றுபவர்கள்


யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ்சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.(John 10:33)

இதற்கு என்ன அர்த்தம்?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!
Permalink  
 


ஒரு பெரிய தேவன் இன்னொரு தேவனை (Demi god) படைத்து அந்த Demi god மூலமாய் காரியங்களை நடத்துவது...இது என்ன மதம்?

__________________
«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard