Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம் என்றால் என்ன?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
திரித்துவம் என்றால் என்ன?
Permalink  
 


யோவான் 5:22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.

யோவான் 5:23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.

 

 

தேவனை எப்படி கனம் பண்ணமுடியும்? தொழுது கொள்வதின் மூலமாகத்தான்! அப்போ பிதாவை கனம் பண்ணுகிறதுபோல குமாரனை கனம்பண்ண வேண்டும் என்றால் என்ன அர்த்தம்?

 



-- Edited by John on Monday 9th of May 2011 06:23:34 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// மேசியாவின் எதிரிகள் யார் என்றால் இயேசு கிறிஸ்து காண்பித்து கொடுத்த பிதாவை கனம் பண்ணாதவர்களே!! //

அடப்பாவிகளா...பேரை வெச்சவந்தானே வெளக்கமும் கொடுக்கணும்.... (மேசியாவின்) எதிரி என்றால் பிதாவினால் அடையாளங் காட்டப்பட்ட குமாரனை வணங்க மறுப்பவனே..! இதனால் ஒரே நேரத்தில் சர்வ லோகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கவந்த குமாரனையும் அவரை அனுப்பிய பிதாவையும் புறக்கணித்து உங்கள் தலையின் அக்கினியை வருவித்துக்கொள்ளுகிறீர்கள்...இதுவும் விரைவில் வெளிப்படும்..!

உன்னை நான் எவ்வளவு தூஷித்தாலும் உன் கொள்கையின்படி எனக்கும் இராஜ்யத்தில் ஒரு இடம் உண்டு;ஆனால் நீ செய்துகொண்டிருக்கும் துணிகரமான காரியத்துக்கு நான் கற்று ஏற்றுக்கொண்ட உபதேசத்தின்படி இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்பே கிடையாது தெரியுமா,அதுவும் அந்த சாபம் உன்னோடு மட்டும் போகிறதில்லை,உன் சந்ததியையும் பற்றிப் பிடிக்கும், கோபப்படாதே...எச்சரிப்பாகவே சொல்லுகிறேன்..!

ஏனெனில் நீ பலரையும் தடுமாறச் செய்துகொண்டிருக்கிறாய்...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இனியும், 1 தீமோ 3:16-ஐ வாசிக்கும் போது, "தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்பதை "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்று வாசித்தால் தான் சரியாக இருக்க முடியும்!! மேலும் கிறிஸ்து தான் மாம்சத்தில் வந்தார் என்பதற்கு இனை வசனங்கள் இருக்கிறது!! //

விடிய விடிய எதைப் படித்தார்களோ அதையே இடிப்பார்களாம்...விடிய விடிய ராமாயணம் கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பா என்பார்களாம்...

இவையெல்லாம் மந்த புத்தியுள்ளவர்களுக்காகச் சொல்லப்படும் பழமொழிகளாகும்;அதுபோல ஆட்டை கடித்து மாட்டை கடித்து மனுஷன கடிக்கப் புறப்படுவது போல குறிப்பிட்டதொரு வேத வசனத்தையே திருத்தி வாசிக்கச் சொல்லும் (மேசியாவின்) எதிரிகளின் சூழ்ச்சியைப் பாரீர்... இதுபோலவே வேதமாண‌வர் என்ற பெயரில் வேதம் முழுவதையும் திருத்தி வாசிக்கச் செய்து சபைகளில் குழப்பம் விளைவிக்கின்றனர், (VNK) இரஸலியன் கூட்டத்தார்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// எங்கள் குடும்பம் முழுவதும் ஒன்றாக இருக்கிறோம் என்பதை நாங்கள் 7 பேர் என்றால் 7 பேர் அல்ல, அந்த 7 பேரும் சேர்ந்து ஒருவரே என்பது அபத்தமான புரிந்துக்கொள்ளுதலாகும்!! ஒன்றாக இருக்கிறோம் என்றால் சேர்ந்திருப்பது, ஒருவராக இருப்பது அல்லவே!! //

அதை தானே நாங்களும் மாஞ்சு மாஞ்சு சொல்லிண்டிருக்கோம்...ஒருவர் என்பது ஒருவர் மட்டுமல்ல, என்பதாக‌...! கொஞ்சம் ரிவர்ஸில் யோசித்தால் குறைஞ்சா போயிடுவீங்கோ..?

Tag:VNK:திரித்துவம் - ஒரு கேள்வி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// சகோ.ஜோசப்ஸ்னேகாவிடம் திருத்துவத்தைக் குறித்த விளக்கம் கேட்டு 4 நாட்கள் ஆகிவிட்டன; இன்னமும் பதில் தரவில்லை. திரித்துவத்தைக் குறித்த விளக்கத்தை யார் வேண்டுமானாலும் கூறலாம் எனச் சொல்லி 5 நாட்கள் ஆகிவிட்டன; யாரும் இதுவரை பதில் தரவிலை.இவர்களுக்குப் பதில் சொல்ல மனமில்லையா, அல்லது பதில் தெரியவில்லையா? ஒருவேளை இத்தளத்தில் பதில் தர மனமில்லையெனில், தங்களுக்குப் பிடித்தமான தளங்களில் சொல்லலாமே! //

பெரியவர் அன்பு மேற்கண்ட கோரிக்கையை தனது தளத்தில் முன்வைத்துள்ளார்;அவர் கவனிக்கவில்லையோ என்னவோ நம்முடைய யௌவன ஜனம் தளத்திலும் அதே தலைப்பில் -அதாவது "திரித்துவம் என்றால் என்ன?" என்ற தலைப்பின்கீழ் இந்த தளத்தின் நண்பர்கள் தங்களாலியன்ற வண்ணமாக கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள். திரித்துவம் என்றால் என்ன என்று நீங்கள் கேட்கும் நோக்கத்துக்குரிய பதில் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும்.

நாங்கள் இங்கே செய்யும் முயற்சிகளால் நீங்கள் திருப்தியடையப் போவதில்லை எங்களுக்குத் தெரியும்; நீங்கள் ஏற்கனவே இறுதி செய்து வைத்திருக்கும் தீர்மானத்துக்கு நாங்கள் வரப்போவதுமில்லை, அதை ஏற்கும்வரை நீங்கள் சமாதானமடையப் போவதுமில்லை; எனவே எப்படியிருந்தாலும் எங்களுக்கு வசை சொற்களும் தூஷணங்களும் ஏற்கனவே ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது தெரிந்ததே.

ஆனாலும் ஏன் இந்த போராட்டம்? ஆதியில் தேவன் எப்படி இரண்டு காரியங்களை மனிதன் முன்பாக அவனுடைய சுயாதீனமான தெரிந்தெடுப்புக்காக வைத்திருந்தாரோ அதுபோலவே இங்கே வருவோர் முன்பாக மாறுபாடான போதனைக்குரிய சரியான பதிலை பதிவுசெய்து வருகிறோம்;ஏற்றுக்கொள்ளுகிறவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும்; ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிப்போர் உலகத் தோற்றமுதல் தங்களுக்காகவும் தங்கள் சந்ததியாருக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டிருக்கும் பங்கைப் பெற்றுக்கொள்ளட்டும்.

திரித்துவம் குறித்து இத்தனை ஆர்வமாகக் கேட்கும் உங்களிடம் அடியேன் முன்வைத்த ஒரு கேள்வியை கவனிக்கவில்லை போலும்;அதாவது திரித்துவத்தைக் குறித்து நாங்கள் சொல்லும் ஒரு விளக்கம் ஒருபுறம் இருக்கட்டும்; நீங்கள் சொல்லும் இருத்துவம் எப்படிப்பட்டது? ஏனெனில் இயேசு தேவனும் இல்லை, மனுஷனும் இல்லை; ஆனால் தேவனைப் போலவே செயல்படுகிறார்; இது எப்படியிருக்கிறதென்றால் இஸ்லாமியர்கள் சொல்லுவது போலவே இருக்கிறது; ஏனெனில் இன்றுவரை இஸ்லாத்தில் எனக்குப் பிடிபடாத ஒரு காரியம் என்னவென்றால் அல்லா,ஜின்கள், மலக்குகள்,மனிதர்கள்,மற்றும் இறைவாக்கினராக செயல்பட்ட நபிமார் நபித்தோழர் இன்னும் ரசூல் அது இது என்று இருக்கும் ஏகப்பட்ட பிரிவுகளில் நீங்கள் இயேசுவை யாரென்று சொல்லுகிறீர்கள்? நீங்கள் இஸ்லாமியருக்குப் புரியும் வண்ணமாக அவர்கள் பாஷையில் சொன்னாலும் சரி..!

தேவன் எனும் சொல்லாட்சியை சூழ்ச்சியான மொழி விளக்கத்தை நோக்கி திருப்பாமல் குறிப்பிட்ட வசனம் சொல்லப்பட்ட இடத்தில் எந்த நோக்கத்தில் சொல்லப்பட்டதோ அதற்கு மட்டும் பொருளைக் கூறவும்;அதனை தியோஸ் என்றும் ஹோ தியோஸ் என்றும் பிரபஞ்சத்தின் தேவன் எனும் வார்த்தைக்கு ஈடாகவும் திரிக்கவேண்டாம்; ஏனெனில் நீங்கள் பெரிதாகப் பேசும் யெகோவா என்ற நாமமும் மற்றும் ஏல், ஏலோகிம் போன்ற நாமங்களும் யெகோவா தேவனைக் குறிக்க மட்டுமே வழங்கப்படவில்லை என்பதையும் சற்று கவனிக்கவும். இதனால் நாம் அறிவது யாதெனில் சூழலுக்கு ஏற்பவே அந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்கவேண்டும்; மேலும் யெகோவா என்பது விசேஷித்த நாமமாக இருந்திருந்தால் புதிய ஏற்பாட்டிலும் அந்த நாமமே வழங்கப்பட்டிருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவும்;உதாரணத்துக்கு அல்லா என்ற பெயருக்கு இணையாக உலகின் எந்த மொழியிலும் ஒரு வார்த்தை கூட இல்லையாம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. தினாவிற்கு எனது பதில்
http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=41531298

உங்களது இந்த பதில் எங்குமே தேவன் கிறிஸ்துவை சிருஷ்டித்தாக நேரடி வசனமோ மறைமுக வசனமோ எதுமே இல்லை. சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறானவர் என்ற கட்டுரையை இத்தளத்தில் பதிந்துள்ளேன். படித்துப் பாருங்கள். எனக்கு சரியாக மறுப்பு எழுத வேண்டும். கிரேக எபிரேய மொழி உங்களுக்குத் தெரியுமா? அப்படி தெரியாத பட்சத்தில் கடைபிடிக்க கூடிய ஒழுங்குமுறைகளை கடைபிடிக்கவும்.

\\இந்த அவர்தான் கடவுளுடைய ஒரே பேரான குமாரன் என்ற பதிவுக்கு அர்த்தம் என்ன? இயேசு ஒருவரே கடவுளால் நேரடியாக படைக்கப் பட்டவர் என்று அர்த்தம். அத்தோடு, மற்ற எல்லாவற்றையும் படைப்பதற்கு கடவுள் பயன்படுத்திய ஒரே நபர் இயேசு தான் என்றும் அர்த்தம். கொலேசெய 1 :16 இவ்வாறு சொல்கின்றது. \\

இந்த வசனம் அப்படி படைக்கப்பட்டதாக சொல்லவில்லையே! ஒரே பேறான குமாரன் பாவிக்கப்பட்டுள்ள வேதத்தின் இதர  வசனங்களையும் கொஞ்சம் பார்ப்போம்.

ஈசாக்கு ஆபிரகாமின் ஓரே பேறான குமாரன் என்று குறிப்பிட்டிருந்தாலும் அவன் ஒரே பேறான குமாரன் இல்லை. அவனுக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள். (ஆதி 16:11, 25:1-6) .இப்பதம் ஒப்பற்ற தன்மையை குறிப்பதற்காக இங்கு உபயோகிக்கப்பட்டுள்ளது

அதுபோல் வேதாகமத்தில் ஒருவருக்கு பிறக்காத பிள்ளைகளும் அவருடைய பிள்ளைகளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதை நாம் அவதானிக்கலாம்.
சாமுவேலை ஏலி “என் மகனே“ என்று குறிப்பிட்டார். (1சாமு 3.16) சவுல் தாவீதைத் தன் குமாரன் என்று அழைத்துள்ளார். (1 சாமு 26.17)
அதேபோல் ஆசிரியர் தன் மாணாக்கரை தன் மகனே என அழைப்பதை (நீதி 7.1) இல் காணலாம்.

இதேபோல் இயேசுவை தாவீதின் குமாரன் என்று குறிப்பிடுவதை (மத் 1.1)
எனவே இயேசு தாவீதின்  மகனா?

குமாரன் எனும் பதம் பதம் உருவகமாக பல இடங்களில் வருகிறது.
சான்றாக சங். 89.22 இல் தீமையான மனிதனை நியாக்கேட்டின் மகன் குறிப்பிடப்படுவதை காணலாம். இது உருவகமாக உபயோகிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பர்னபா ஆறுதலின் மகன் (அப். 4.36)

ஒரே பேறான குமாரன் அவரின் தெய்வீகத்தன்மையையும் ஒப்பற்றத்தன்மையையும் சுட்டிக் காட்டவே உபயோகிக்கப்பட்டுள்ளது.
(Source : J.Macdowell, Jesus: A. Biblical Defence of Hits Deity p,75)



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// திரித்துவம் என்பது ஒரு கிறிஸ்தவ கோட்பாடு, இது கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆதாரம், இதன்படி பிதா குமாரன், பரிசுத்த ஆவி என்கிற மூவர் ஒருவரே, ஒரே தெய்வீகத்தன்மையுடையோர் என்றும் ஒரே இறைமை உடையோர் என்பது!! இந்த கோட்பாட்டின்படி, தேவன் மூன்றாக இருக்கிறார், ஆனாலும் தேவன் ஒருவரே, அதாவது, குமாரனான தேவன், பரிசுத்த ஆவியான தேவன் இருவரும் பிதாவான தேவனின் அதே தன்மையிலும் நிலையிலும், எல்லா விதத்திலும் இருப்பது!! பிதாவாகிய தேவனுக்கு இருக்கும் குனாதிசியங்களும் வல்லமையும் குமாரனான தேவனுக்கும், பரிசுத்த ஆவியான தேவனுக்கும் இருப்பதாகும்!! அதாவது பிதாவாகிய தேவனை போலவே குமாரனாகிய தேவனும், பரிசுத்த ஆவியான தேவனும், அவரை போலவே நித்தியமானவர்கள், எங்கும்நிறைந்தவர்கள், சர்வவல்லமையுள்ளவர்கள், முடிவில்லா ஞானம் நிறைந்தவர்கள், முடிவில்லா பரிசுத்தமானவர்கள், முடிவில்லா அன்பு நிறைந்தவர்கள் ஆவார்கள்!!

இந்த கோட்பாடானது வேதத்தின் மத் 28:19ஐ கொண்டு உருவாகி, இப்பொழுது இருக்கும் தன்மைக்கு வந்தது 4ம் நூற்றாண்டின் முடிவில் தான்!! தேவனுக்கு உண்டான "ஆளத்துவம்", "குணாதிசயம்", "சாரம்" மற்றும் "சாராம்சம்" கிறிஸ்துவிற்கும் பொருந்தும் என்று எழும்பிய சர்ச்சையின் முடிவில் இந்த கோட்பாடு உருவானது!! // தொடர்ந்து வாசியுங்கள்

அடே முக்காலுக்கும் மூணு வீசைக்கும் நடுவுல பொறந்த பன்னாடைகளே உங்கள திட்றதுக்கு இதுக்கு மேல வார்த்தைய உருவாக்கி தான் போடணும் போல;வேதத்தில இருந்து மட்டுமே பேசணும்'னு அடம்பிடிச்சி எங்கள் நண்பர்களையெல்லாம் கீழ்த்தரமா தூஷித்த நீங்க மட்டும் எப்படி விக்கிபீடியா உதாரணத்தைக் கொடுக்கலாம்? கொஞ்சமாவது அறிவிருக்கா? எங்களுக்கு தான் வேறு வழியில்லாம தேர்ந்த ஆராய்ச்சியாளர் வசந்தகுமாரையும் அவருடைய ஆராய்ச்சி குறிப்புகளையும் வெச்சு போராடிகிட்டிருக்கோம்..உங்களுக்கென்ன கேடு இரஸல் துணையுடன் அவருடைய ஆறு வேதபாடத்தையே இன்னும் ஒழுங்கா படிச்சு முடிக்கலயே அதுக்குள்ள ஏன் வெளியே வந்துட்டீங்க‌...இரஸல் என்ன சொல்லியிருக்காரு யாருடனும் வாதாடவே கூடாது'ன்னு சொல்லல‌..? அதையே முதலில் கடைபிடிக்க முடியாதவங்க எப்படி அவருடைய போதனையை மட்டும் எடுத்து பேசிண்டிருக்கீங்க‌..? உங்களுக்கு சொந்தமா யோசிக்கத் தெரியாதா? இரஸல் சாப்பிட்ட வண்டுருட்டும் பழத்தை சாப்பிட்டு சாப்பிட்டு உங்களுக்கு புத்தி மழுங்கி போயிருச்சா..?

நீங்கள் பெரிதாகப் பேசிக் கொண்டிருக்கும் நாமமான யெகோவா எனும் நாமத்தைக் குறித்த அதிர்ச்சிகரமானதொரு தகவலை இங்கே கொடுத்துள்ளேன்;உங்கள் தலையை எதற்குள் கொண்டு சென்று சொருகிக் கொள்ள வேண்டுமோ அது உங்கள் விருப்பம்..!

Yahweh: The Pagan God of Mythology
BY RYAN HICKS
© 1996-1999 Ryan Hicks


I am well aware that modern scholars and a lot of Jews teach that Yahweh is the way you pronounce the Hebrew JHWH or as they put it YHWH, but this is not true and is based on the speculation of modern men.

According to modern "scholars" and many unknowing Christians the Massoretic text incorrectly borrowed the vowels from the Hebrew word for "Lord." Thus, the tetragrammaton (JHWH) would be pronounced as "Jehovah." Yet, the modern scholars theorize that the Massorite's were incorrect in the pronunciation of the tetragrammaton and that there was no "J" sound in the Hebrew. Thus, they deduced "Yehovah." After this they were still unsatisfied and decided that since the "V" should sound like the "W" sound in Hebrew they also deduced that it should sound like "Yehowah." Eventually after much playing with the tetragrammaton they came up with what is the almost universally accepted way to pronounce the tetragrammaton, "Yahweh" (pronounced "yah-whey").

1 Corinthians 10:19-20
19 What say I then? that the idol is any thing, or that which is offered in sacrifice to idols is any thing?
20 But I say, that the things which the Gentiles sacrifice, they sacrifice to devils, and not to God: and I would not that ye should have fellowship with devils.

The Gentiles sacrifice to devils, and not to God. The Greek's had named their chief of devils Zeus. Many people are familiar with Greek mythology and the stories about Zeus. He was the mythological king of the gods (devils) and the husband of Hera. The Romans called him the Latin "Jupiter" for he was "the chief Roman god, husband of Juno, and god of light, of the sky and weather, and of the state and its welfare and its laws." Jupiter was also given the Latin name "Jove." (All of the above information can be found in any good dictionary.)

In the Latin language there is no "J" sound. The Latin "J" is pronounced as the English "Y" is. The Latin short "O" sound sounds like the English "AH." The Latin "V" sounds like the English "W" because there is no "V" sound in Latin. The Latin "E" sounds like the English's short "EH" sound. THUS:

JOVE SOUNDED OUT

J = Y
O = AH
V = W
E = EH

JOVE = YAHWEH


The Latin "Jove" would be pronounced almost identical to the modern scholars YAHWEH! Thus, they have relegated the Almighty Jehovah of the Bible to be nothing more than the pagan Roman and Greek god (devil) Zeus, Jupiter, or Jove (whichever you want to call him)!

It is amazing that so many Christians have fallen for the Jehovah to Yahweh switch. The devil pulled a huge deception of the majority of people in this regard and many will argue night and day that God's name is Yahweh although they have no proof and are speaking of Zeus and not the Lord, Jehovah God. As with all things, if it goes against the word of God, the King James Bible, let us just forget it. It does not matter how many scholars claim something to be so, if it is against the word of God it is not so!

It should come as no surprise to Bible believers that this major push to change God's name from Jehovah to Yahweh has come during a time of immense apostasy and modern scholars churning out hundreds of new bibles that add to and take away from the word of God. Yet, for those of you that believe the word of God over man's theories and are willing to be correct according to the Bible please do some study on the Bible's usage of the Lord's true name, Jehovah, see Exodus 6:3; Psalms 83:18; Isaiah 12:2; and Isaiah 26:4 (It will be a blessing).

http://members.fortunecity.com/faithofgod/yahweh.htm

இது உங்க ஆள் ஆங்கிலத்தில ஊதினது தான்...ஆனாலும் இதிலிருந்தும் உங்க தலைமேல தான இடிவிழப் போகுது...ஆனானப்பட்ட யூதருக்கே தங்கள் குலதெய்வத்தின் பெயரை உச்சரிக்கத் தெரியாதாம்;எபிரேய மொழியிலும் "J" எனும் எழுத்து கிடையாது; சர்வ வல்லவருடைய நாமத்தை உச்சரிக்க எபிரேயத்தில் உயிரெழுத்தும் (vowels) கிடையாது;அப்படியானால்  தற்காலத்தில் சொல்லுவது போல ஜெஹோவா என்று நீங்கள் உச்சரிப்பதே டுபாக்கூர் தானே? இதுல என்ன கத்தோலிக்கர்களையும் யூதரையும் விட நீங்கள் ஒசத்தியாகி விட்டீர்கள் என்று அறியவிரும்புகிறேன்..! நீ "ஜெகோவா'னு சொன்னாலும் சரி, யெகோவா'னு சொன்னாலும் சரி அல்லது யா என்றோ யாவே என்றோ எப்படியாக சர்வ வல்லவருடைய திருநாமத்தை உச்சரிக்க முயற்சித்தாலும் சரி அது கேலிக்கூத்தாகவே இருக்கும்; விருந்தாளிக்கு பொறந்தவன் கிட்ட அப்பன் பேரு கேட்ட‌ கதையாக' என்று உங்க கிராமத்துல சொல்லுவாங்களே அதுபோல சர்வ வல்லவருடைய நாமத்தைக் குறித்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு, ஒன்றான மெய்த் தேவனால் அனுப்பப்பட்ட அவருடைய குமாரனான இயேசுகிறித்துவின் நாமத்தின் மேன்மையைக் குறித்து ஆராய்ச்சி செய்து அவருடைய கோபத்திலிருந்து தப்பிக்க வேண்டுகிறேன்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் கொல்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;தாங்கள் கத்தோலிக்க பாரம்பரியத்தைச் சார்ந்தவர் என்ற முறையில் மற்றுமொரு வேண்டுகோளை தங்கள் முன்பாக வைக்க யோசிக்கிறேன்; அதாவது என்னைப் பொருத்தவரையிலும் திரித்துவம் எனும் கொள்கையை கத்தோலிக்க மார்க்க ஸ்தாபகர்கள் அங்கீகரித்தார்களே தவிர தோற்றுவிக்கவில்லை;இது என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம் ஆகும்; இதனை நிரூபிக்கும் தகவல்கள் தங்களிடம் இருக்குமானாலும் தயவுசெய்து கொடுத்து உதவவும்;ஏனெனில் திரித்துவம் என்பது கத்தோலிக்கத்தால் திணிக்கப்பட்ட கொள்கை என்பது (மேசியாவின்) எதிரிகளின் கூற்றாகும்; இஸ்லாமியர்கள் இன்னும் ஒருபடி மேலே சென்று அதனை பவுலடிகளே திணித்தார் என்றும் கூறுவதுண்டு.அதனை அடித்து நொறுக்கிய உமர் அவர்களின் கட்டுரையை ஏற்கனவே நம்முடைய தளத்தில் பதித்துள்ளேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//...நமக்கோ தேவன் தன்னையும் தன் குமாரனையும் யார் என்று காண்பித்து இருக்கிறார், அவர்களுக்கு அந்த கொடுப்பினை இல்லை!! சரி அவர்களுக்கும் இதை குறித்து தெரிந்துக்கொள்ள நாட்கள் வருகிறது!! //

நமது அருமை நண்பர் ஜாண் குறிப்பிட்டது போல பிரபஞ்சத்தின் தேவனுக்கு மகா தேவனாகிய யெகோவா நாமத்தை சூட்டி அழகு பார்த்து அவருடைய ஒரேபேறான குமாரனை பிரபஞ்சத்தின் தேவனுக்குக் கீழ்ப்பட்டவரைப் போல சித்தரித்து காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது சில ஜந்துக்கள்; இதனை நான் இத்தனை தீர்மானமாகக் கூறக் காரணம் அந்த ஆட்களின் வரிகளிலேயே  இருக்கிறது; அதாவது "தேவன் தம்முடைய", "தமது" என்பதே நாம் தேவனை உயர்த்திக் குறிப்பிட பயன்படுத்தும் முறையாகும்;ஆனால் அந்த ஆள் போட்டிருப்பது என்ன‌,"தேவன் தன்னையும் தன் குமாரனையும்..." என்பதாக; இது ஏதோ தற்செயலான தவறு அல்ல,இது தேவச் செயலான தவறாகும்.

  • "சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்."( ஆபகூக் 2:14 )
// இதில் கர்த்தர் என்பது யெகோவா தேவன் என்கிறது வேதம்; இவர்கள் அதற்குள் அவசரப்பட்டு அதான் கர்த்தர் என்று போட்டிருக்கிறதே, அப்படி என்றால் ஒரே கர்த்தர் கிறிஸ்து என்று சொல்லி வசனத்தையே புரட்டி போடுவார்கள்.//

வசனத்தைப் புரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, நைனா;தெய்வத்துவத்தை நாங்கள் கூறுபோடவில்லை; நீங்களே அவரைக் கூறுபோட்டு கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்;பிதாவாகிய தேவன் ஏதோ பெலவீனப்பட்டதைப் போலவும் கையாலாகாத அவர் இன்னொருவரை உருவாக்கி அவர்மூலம் உலகத்தை சிருஷ்டித்தது போலவும் கதைபண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்;ஆனால் அவர் இந்த அண்டத்தைப் படைக்க யாருடைய உதவியையும் நாடவில்லை என்று வேதம் சொல்லுகிறது; அவரே இந்த உலகை நிர்மாணித்து தமது பொற்கரங்களால் மனிதனையும் பிசைந்து உருவாக்கினார் என்கிறது வேதம்;இந்த காலங்களில் அவர் குமாரனாக வெளிப்படவில்லை;ஏனெனில் பிதாவின் வார்த்தையே குமாரன் என்னப்பட்டார்; கேடுகெட்ட கேப்மாரி புத்திகொண்ட உங்க ஆட்கள் சிருஷ்டிகரையே சிருஷ்டியாக்கிப் பார்க்கும் மாபாவத்தைப் புரிந்து ஒரே நேரத்தில் பிதாவையும் குமாரனையும் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்;உன்னுடைய "ப்ளூ" பிரிண்ட்டை பிளாட்பாரத்தில் கூவிகூவி விற்றுக்கொள்;விடலைப் பசங்க ஓடிவந்து வாங்கிண்டு போவாங்க‌..! பிதாவையும் குமாரனையும் வெவ்வேறாகப் பிரித்து "இருத்துவம்" பேசும் உங்களைவிட திரித்துவம் பேசும் நாங்கள் மோசமா, திருட்டு நாய்களே..!

பொய்யை விசுவாசிக்கும் வஞ்சகம் என்றாலே என்ன என்று தெரியாதா நீயா தேவன் என்பதற்கான பொருளை எங்களுக்குப் போதிப்பது? நேரத்தோட சாப்பிட்டு விட்டு  போ
ய், கவுந்தடிச்சு படுத்துகிட்டு யோசனை பண்ணு... ஏதாவது தெரிய வாய்ப்புண்டு; யெகோவா என்றால் இருக்கிறவராக இருக்கிறவர் என்று அர்த்தம்;அதற்கு மேல் கர்த்தருடைய நாமத்தில் தெரிந்துகொள்ள ஒன்றுமில்லை;ஆம், அவர் இருக்கிறவர் தானே? பழைய ஏற்பாட்டில் பிதாவின் வார்த்தையாக இருந்தார், புதிய ஏற்பாட்டில் தேவனுடைய தற்சொரூபியாக வாழ்ந்து பிதாவை மகிமைப்படுத்தி அவரை இந்த உலகுக்கு வெளிப்படுத்தினார்; உங்களைப் போலவே அவரோடு இருந்தவர்களும் அவரை அறியவில்லை என்று வேதம் சொல்லுகிறது;சர்வ வல்லவர் தம்மை எப்படியும் வெளிப்படுத்த அவருக்கு அதிகாரமில்லையா? ஏன் உன்னைப் போன்ற துரோகிகளுக்காக சாவாமையுள்ளவரான அவர் மரணத்தையே ருசிபார்த்தாரையா..?
  • "...தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்."(எபிரெயர். 2:9)
  • "எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? "(அப்போஸ்தலர்.13:10)
// இப்போ அறியாமையில் இருக்கும் இவர்கள் தேவனின் ராஜியத்தில் யெகோவா தேவனை அறிகிற அறிவினால் நிறம்புவார்கள், அந்த அறிவை கொடுக்க போவது, கிறிஸ்துவும் அவரின் சபையும் தான் என்பது இவர்கள் தாங்கி கொள்ள முடியாத விஷயமாக இருக்கும். //

(மேசியாவின்) எதிரிகளின் இந்த வரிகளை வாசிக்கையில் உடனே தோன்றியது இதுதான்;நீங்களெல்லாம் "இலவு காத்த கிளிகள்" நிலைக்கு ஆளாகப்போகிறீர்கள்; யார் அறியாமையில் இருக்கிறோம்,யார் கைவிடப்படப் போகிறோம், என்பதையெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளுவோம்;உங்கள் போதனையின்படி பாவிகள் என்று யாரும் இல்லை,எனவே நரகமும் பாதாளமும் இல்லை என்றால் ச்சும்மா சந்தோஷமாக லைஃப் என்ஜாய் பண்ணிகிட்டிருக்கலாமே ஏன் எங்களைவிட அதிகமாக டென்ஸன் ஆகறீங்க‌..? உங்களுக்கு என்ன கொள்ளை போகிறது?

உதாரணமாக முமு அம்மு அவர்கள் ஆட்சிகாலத்தில் திடீரென ஒரு சட்டம் போட்டார்கள்;"மழைநீர்
சேகரிப்பு திட்டத்துக்காக". அப்போது எப்படியெல்லாம் வதந்தி பரப்பப்பட்டது? குறிப்பிட்ட நாளுக்குள் இதனை அமைக்காவிட்டால் வீட்டு மின்சாரம் துண்டிக்கப்படும் என்பது பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டது;ஆனாலும் ஒன்றுகூட அதிகாரபூர்வமான அறிவிப்பு கிடையாது;அதற்கு பயந்து பலரும் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தங்கள் வீடுகளில் நிறைவேற்றினர்;ஆனாலும் அதனை நிறைவேற்றாத ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை;அதற்குள் ஆட்சியும் மாறிப்போனது;இது வரலாறு.

அதைப் போலவே முதல் பெண்டாட்டியின் பிள்ளைகளான இவர்கள் ஈசாக்கைப் போல சிறப்பு தகுதியுடன் அதுவும் குறிப்பிட்ட தொகையினர் (1,44,000 பேர் என்று நினைக்கிறேன்..அதிலும் பலத்த போட்டி இருக்கும் என்று நம்பப்படுகிறது;ஏனெனில் வெண்ணுடை தரி
த்து சீயோனுக்கான ஸ்பெஷல் "காட்டகரி" யில் ரெடியாகும் மற்றொரு "க்ரூப்"பான பெந்தெகொஸ்தே கூட்டத்தினரும் இருக்கின்றனர்;) சேர்க்கப்பட அடுத்த குழுவான ஆகாரின் வழிவந்தோர் சில சலுகைகளுடன், அதாவது சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டும் விசுவாசியாதவர்கள், சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்;

அதற்கு அடுத்து ஓப்பன் செலக்ஷனில் ஆபிரகாமின் மூன்றாவது ஏகப்பட்ட மறுமனையாட்டிகளின் சந்ததிக்கு ஒப்பாக உலகத்தார் அனைவரும் இராஜ்யத்துக்குள் வருவார்கள்;அதுவே மேசியாவின் ஆயிரம் வருட அரசாட்சி எனப்படுகிறது;சுவிசேஷம் இத்தனை எளிமையாக இருப்பதால் சுவிசேஷமோ பாவமன்னிப்போ தண்டனையோ பாதாளமோ நரகமோ கிடையவே கிடையாது;வாழ்க்கைய அனுபவிச்சுட்டு செத்துப்போறோம்'லே அதுதான் ஆதாமுக்கு ஏதேனில் கொடுக்கப்பட்ட தண்டனை அதிலிருந்து மீட்கவே மிகாவேல் தூதனாகிய இயேசு வந்து பாவக்கிரயம் செலுத்தினார்;எனவே செய்த பாவம் செய்யப்போகும் பாவம் அனைத்துக்கும் அந்த ஒரே பலியே போதும்;என்ன, பாவத்தை விட்டு நீதியாக வாழ முயற்சித்தால் மொத பொண்டாட்டி காட்டகரியில் சேர்ந்து கொள்ளலாம்;மற்றபடி எல்லாம் அவரவர் சாய்ஸ்... என்பதே யெகோவா சாட்சியினர் மற்றும் வேதாகம (ஃபெயிலான மக்கு) மாணவர்களின் பொதுவான போதனையாகும்;என்ன அங்க டர்.ர்..ர்'னு சத்தம் கேட்குது...ஓஹோ (மேசியாவின்) எதிரி மண்டைய பிச்சுக்கிறானா..? வேற வழி...சில்சாம் இருக்கற வரைக்கும் உன் பப்பு வேவாது கண்ணா..!


யெகோவா(வின் பொய்) சாட்சிகள் மற்றும் வேத(த்துக்கு அடங்காத ) மாணவர்களைக் குறித்து மற்றுமொரு நேரடி அனுபவத்தைக் குறித்து அறிய தொடுப்பைத் தொடரவும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41249303&p=3


உனக்கும் எங்களுக்கும் போதனையில் எவ்வளவு வித்தியாசம் பார்த்தாயா..? நீ எதை வேண்டுமானாலும் எழுதி குவித்துக்கொள்;அதைக் குறித்து எமக்கு கவலையில்லை;ஆனால் எங்களைக் குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்தினால் உனக்கு நல்லது;மற்றபடி நீ கூட்டம் நடத்தும் இடத்திலேயே வந்து உன் காதைப் பிடிச்சி திருகுவதற்கு ஆள் போட்டிருக்கிறோம்;எச்சரிக்கை..!

பாவிகள் என்று யாருமில்லை என்றால், நரகம் என்பது இல்லை;
நரகம் என்பது என்றால் உங்கள் போதனைக்கும் அவசியமில்லை;தளத்தை மூடிவிட்டு வேறு வேலை பார்க்கப் போங்க ஸார்...நாங்க என்ன அநியாயம் செய்தாலும் எங்களுக்கும் கடைசியில பங்கு உண்டு தானே? பெறகு உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சினை?

போதாக்குறைக்கு திரித்துவம் என்ற வார்த்தை பைபிளில் இல்லை, ஏமாத்துறாய்ங்க, என்று கூப்பாடு போடுவது யார்? எதுவாயிருந்தாலும் கடைசியில பாத்துக்க தான போகிறோம்?  "மூளை" என்ற  வார்த்தை கூட பைபிளில் இல்லையாம்;அதுக்காக 'உன் தலைல மூளை இல்லே'னு சொன்னா ஒப்புக்குவியா? பைபிளில் இல்லாத மூளை உனக்கு இருப்பது உண்மையானால் பைபிளில் இல்லாத திரித்துவமும் உணர்வின்படி இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளலாமே.?

கிறித்தவ விசுவாசத்தில் மார்க்கபேதத்தைத் தோற்றுவிக்க (மேசியாவின்) எதிரிகள் பிரதானமாக எடுத்தாளும் உபதேசம் திரித்துவத்தைக் குறித்ததாகும்; திரித்துவம் என்பதை திருத்துவம் என்றும் அவர்களையறியாமல் குறிப்பிட்டதும் உண்டு; திரித்துவமோ திருத்துவமோ அதனை சர்ச்சைக்குரியதாக்குவோர் யாராக இருக்கமுடியும்? நிச்சயமாகவே சாத்தானின் ஆவியினால் நடத்தப்படுபவர்களே..!

அவர்களுக்கு நான் மரியாதை கொடுக்கிறதில்லை;தாயைப் பழிப்பவனுக்கு இந்த சமுதாயத்தில் என்ன மரியாதை கொடுக்கப்படுமோ அதைவிட கீழான நிலையிலிருந்து தேவத்துவத்தைக் குறித்து இடைவிடாமல் தூஷிக்கும் இவர்களை இந்த தலைமுறையிலேயே அழித்து ஒழிக்கவேண்டும்; மலேரியா, போலியோ போன்ற நோய் உண்டாக்கும் கிருமிகளை எப்படி திட்டமிட்டு ஒழிக்கிறார்களோ அதுபோலவே இவர்களையும் நாம் ஒழித்தாக வேண்டும்; நானும் அவனுக்கு மரியாதை கொடுக்கமாட்டேன்;அவன் மரியாதையும் எனக்குத் தேவையில்லை;அவன் ஆட்கள் எனது வீட்டு வாசலுக்கு வந்தால் அவனை வரவேற்கவோ வாழ்த்துக் சொல்லவோ மாட்டேன்;இது அன்பின் அப்போஸ்தலனாகிய யோவான் எனக்கு இட்டுள்ள கட்டளையாகும்.

  • "ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக் கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
  • அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க் கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். "(2.யோவான்.1:10,11)

பிதா குமாரன் பரிசுத்தாவியானவராம்
திரித்துவ தேவனைத் துதித்திடுவோம்

நித்தியத்தின் மகிமை பிரகாசத்தில்
சேரக்கூடாத ஒளிதனில்
மூன்றில் ஒன்றாய் ஜொலித்திடும்
பரமபிதாவை ஸ்தோத்தரிப்போம்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

  • //அதேவிதமாகத்தான் 1 கொரி. 8:6-ல் இயேசுவை நம் “ஒரே kurios” என பவுல் அறிமுகப்படுத்துகிறார். அதாவது தேவனுக்கும் நமக்கும் இருக்கக்கூடிய ஒரே மத்தியஸ்தரான kurios இயேசுகிறிஸ்து மட்டுமே என்ற அர்த்தத்தில் பவுல் அவ்வாறு கூறுகிறார். இதனால் தேவன் ஒரு kurios என்ற உண்மை மாறப்போவதுமில்லை, தேவனும் இயேசுவும் ஒருவராக ஆகிவிடப் போவதுமில்லை.

    இத்தனைதான் விளக்கம் கொடுத்தாலும், கொக்குப் புத்தி உள்ள சிலருக்கு இவ்விளக்கம் மண்டையில் ஏறாது.//

     பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
    (1 கொரிந்தியர் 8:6)

    "Upto the Point" இல்லாமல் பேசுவது என்பது இவர்களுக்கு கைவந்த கலையோ? மேற்கண்ட வசனத்தை காண்பித்து பிதா ஒருவர் மட்டுமே தேவன் என்று நண்பர் அன்பு சாதித்தார். நான் சொன்னேன் அப்படியென்றால் இயேசு மட்டுமே கர்த்தர் என்று எடுத்துக்கொள்ளலாமா என்று. நீண்ட மௌனத்திற்கு பின்பு இப்போது ஒரு சம்பந்தம் இல்லாத பெரிய விளக்கம் எல்லாம் கொடுத்து கர்த்தர் என்பது "Context" ஐ பொருத்து மற்றவர்களுக்கும் "applicable" ஆகும் என்று நிருபித்து இருக்கிறார். அதே போல தேவன் என்பதும் "Context" ஐ பொருத்து இயேசுவுக்கும் "applicable" ஆகும் ஆக 1 கொரிந்தியர் 8:6 ஐ வைத்து இவர் என்ன சொல்லவருகிறார் என்று தெரியவில்லை.

    பிறகு அவர்களுடைய "வழக்கப்படி" கொக்குப் புத்தி என்று திட்டியிருக்கிறார்


-- Edited by John on Friday 25th of February 2011 07:34:30 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=41186644&page=3&sort=oldestFirst

//அக்கேள்விக்கு நான் இதுவரை பதில் தரவில்லையென்றதும், அவர் ஏதோ வாதத்தில் வென்றுவிட்டதைப் போல, அவரும் அவரது கூட்டாளிகளும் ஆர்ப்பரிக்கின்றனர்//


யாரும் அப்படி ஆர்ப்பரித்ததாக எனக்கு நினைவில்லை. உங்கள் சகோதரர் பெரியன்ஸ் அவர்கள் நான் ஓடிவிட்டதாக ஒரு பொய்யை பரப்பிக்கொண்டு இருந்தார் நான் உண்மையை விளக்கினேன் அதில் கூட நிங்கள் ஓடிவிட்டதாக சொல்லவில்லை.

//ஒரே தேவனுக்கு 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு எனச் சொல்லி, அதையடுத்து, அந்த ஒரே தேவன் பிதாதான் என நிரூபித்தால், (ஒரே தேவனாகிய அந்த) பிதாவுக்கு 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு என்பதை ஜான் அறியாரா, அல்லது அறியாதவர்போல் நடிக்கிறாரா?
//

ஒரே தேவன் பிதா மட்டுமே என்று நீங்கள் இன்னும் நிரூபிக்கவில்லை. பிதாவுக்கு (One personality of God) 3 ஆள்த்தத்துவங்கள் உண்டு என்பது ஒரு உளறல்

//Laws of Logic (Law of Identity , Law of Non-Contradiction, Law of the excluded middle) பேசுகிற ஜான், Law of equation படி, If X has 3 personalities and if Y=X then Y also has 3 personalities என்பதை அறியாரா, அல்லது அறியாதவர்போல் நடிக்கிறாரா?//


முதலில் "Law of equation" என்று ஒன்று கிடையாது. இதுவும் "Law of Non-Contradiction" என்பதன் கிழேதான் வரும். நான் ஆரம்பத்திலே தெளிவாய் சொன்னேன் "God in essence is One but God in personality is 3" இதை இன்னும் ஒரு உதாரணத்தோடு சொல்லவேண்டும் என்றால்

Who are You? என்கிற கேள்விக்கு 3 விடை Person Of God அதாவது "God the Father", "God the Son" and "God the Holy Spirit"

What are You? என்கிற கேள்விக்கு ஒரே விடை "God"  இது  "God the Father", "God the Son" and "God the Holy Spirit" ஆகிய மூவருக்கும் பொருந்தும்.

சரி நீங்கள் சொன்ன equation க்கு வருவோம்  X has 3 personalities and if Y=X  STOP இது நான் சொல்லாத ஒரு சமன்பாடு. If X has 3 personalities then there is no Y with three personalities (God is One)
 if X is a person then there is Y but each person doesn't have 3 personalities within them.


 



-- Edited by John on Friday 25th of February 2011 06:09:13 AM

-- Edited by John on Friday 25th of February 2011 06:11:00 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard