Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெகோவா சாட்சிகளுடன் ஒரு நேரடி சந்திப்பு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யெகோவா சாட்சிகளுடன் ஒரு நேரடி சந்திப்பு..!
Permalink  
 


நண்பர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நம்முடைய தளத்துக்கு வந்து தனது குறிப்பிட்ட அனுபவத்தைப் பதித்திருக்கிறார். அதன் முக்கியத்துவம் கருதி நாம் ஏற்கனவே அதனை அவர் தொடர்புள்ள மற்றொரு திரியில் பதித்துள்ளோம். அதன் தொடுப்பு பின்வருமாறு...

http://yauwanajanam.activeboard.com/t48708376/topic-48708376/



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 134
Date:
Permalink  
 

நேற்று மாலை சுமார் 3 மணியளவில் புகைபடத்தில் காணப்படும் இருவரும் என் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வந்து நின்ற தோரணையை கண்டவுடனே எனக்குப் புரிந்தது... இவர்கள் இருவரும் எதற்காக வந்திருக்கின்றனர் என்பது.

அன்புடன் வரவேற்று வீட்டில் அமரச்செய்தேன். என் மனைவி, இவர்கள் யாரென்றே புரியாமல் அவளது வழக்கம்போல் காபி கொடுத்தாள்.

வந்தவர்கள், தாங்கள் எந்த இடத்திலிருந்து வருகிறோம் என்று மட்டும் அறிமுகம் செய்துகொண்டனர். இவர்கள் யாரென்று எனக்குப் புரிந்ததால் நான் எதுவும் இவர்களிடம் வினவவில்லை.

வந்தவர்கள் வேத வசனங்கள் பற்றி பேச ஆரம்பித்தனர். தற்காலத்தில் எண்ணப்படாமல் போய்விட்ட தேவனுடைய நாமமாகிய யெகோவா என்ற நாமத்தின் முக்கியத்தைக்குறித்தும், மனிதனை நல்லவர்களாக்க பிறந்த இயேசுக்கிறிஸ்துவைக் குறித்தும் பேச ஆரம்பித்தனர். நானும் வசனங்களில் அதிக பழக்கமில்லாத கிறிஸ்தவனைபோல இவர்கள் சொல்வதை ஆமோதிப்பதும், logic க்கு பொருந்தாத வார்த்தைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்பதுமாக இருந்தேன்.

நன்றாக பேசினார்கள். பின்பு ஆண்டவர் எந்த ஜாதி என்றும் எந்த மதம் என்றும் பார்ப்பதில்லையென்றும், எல்லோரும் அவருக்கு ஒன்றுபோல் தான் என்றெல்லாம் பேசினார்கள். ஆண்டவருடைய இராஜ்யம் இந்த பூமியில்தான் நிலைநிறுத்தப்படும் என்று கூறினார்கள்.

உலகில் இதுவரை தோன்றிய அனைவரும், உயிரோடு வந்தால் இந்த பூமி தாங்குமா என்ற கேள்விக்கு பதிலாக ஆண்டவரின் வல்லமை மிகப்பெரியது என்றார்கள். அப்படிப்பட்ட வல்லமை படைத்த ஆண்டவர், நான் போய் உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தப் போகிறேன், நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன் என்று கூறியிருகிறாரே என்ற கேள்விக்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட சிறு கூட்டத்துக்கே அந்த பாக்கியம் உண்டு எனவும், மற்றவர்கள் அனைவரும் இந்த உலகிலேயே வாழ்வார்கள் எனவும் கூறினர்.

நீதிமான்கள் பூமியை சுதந்தரிப்பார்கள் என்ற சங்கீத வசனத்தையும் எடுத்துக்காட்டினர். புதிய ஏற்பாட்டிலிருந்து வசனம் கொடுங்களேன் என்று கேட்டேன். மேலும் ரோமர் 3ம் அதிகாரத்தின்படி இயேசுக்கிறிஸ்துவின் இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தில் மாத்திரமே மனிதன் நீதிமானாகிறான் என்றும் வேதம் சொல்கிறதே என்று கூறியவுடன் மெதுவாக எழுந்துகொண்டார்கள்.

அவர்களை அமரக்கூறினேன். உங்களிடம் இன்னும் பேசவேண்டும் என்று கூறியவுடன், நாங்கள் இன்னும் அதிகமான வீடுகளுக்குச் செல்லவேண்டியுள்ளதால் இனியொருமுறை வருகிறோம் என்றனர். இல்லை... என் வீடு தேடிவந்து, என் ஆர்வத்தைத் தூண்டிவிட்டீர்கள், என் கேள்விக்கு பதில் தராமல் கழண்டுகொள்ளப் பார்க்கிறீர்களே என்று கூறி அவர்களை நிறுத்த முயன்றேன். ஆனால் ஓடிவிடுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

என் வீட்டிலிருந்து வெளியேறி என் தம்பியின் வீட்டில் பிரவேசிக்க எத்தனித்தனர். என் கேள்விக்கு பதில்தராமல் அங்கு செல்ல இயலது என கூறினேன். உடனே, உங்கள் வீட்டை மட்டும் பாருங்கள் என்று என்மீது சீறினர். ஆனால் நான் அனுமதிக்கவில்லை. என் வீட்டைச் சுற்றிலும், என் சகோதரர்கள், ஒன்றுவிட்ட, இரண்டுவிட்ட சகோதரர் வீடுகளே உள்ளன, எனவே இந்த பகுதியில் எங்கும் நீங்கள் எனக்கு பதிலளிக்காமல் பிரவேசிக்க இயலாது என்று கூறினேன். உடனே வேகமாக எங்கள் பகுதியிலிருந்து வெளியேறி main road க்கு வந்தனர். நானும் பைக் எடுத்துக்கொண்டு அவர்களை பின்தொடர்ந்தேன். சுமார் 1 கிமீ தூரத்துக்கு (பைக்கை வைத்துவிட்டு) நடந்து வந்திருக்கிறார்கள். அவ்வளவு தூரமும் அவர்களோடு சென்று அவர்கள் சந்தித்துவந்த ஒவ்வொரு வீடுகளிலும் இவர்களைப்பற்றி எடுத்துக்கூறினேன் (ஏறத்தாழ அனைவரும் உறவினரே).

இவர்கள் என் செயலைப்பார்த்து.... பார்த்தீர்களா... உங்களிடம் அமைதல் இல்லை.... என்று என்னை குற்றம் சாட்ட ஆரம்பித்தனர். நான் அவர்களுக்கு பதிலாக பவுல் கூட கடிந்துகொண்டு கண்டனம் பண்ணி புத்தி சொல்லவே கூறியிருக்கிறார் என்று கூறினே.

அப்புறமாக அவர்களை, நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் உபதேசம் குறித்து எடுத்துச்சொல்ல உங்கள் பின்னால் வருவேன் என்று கூறி அனுப்பினேன்.

யெகோவாவின் சாட்சிகளாகிய இவர்கள் மிக அதிகமாக உழைக்கிறார்கள். எவ்வளவு பாடுபட்டு அவர்களது வஞ்சக உபதேசத்தை பரப்புகிறார்கள். கிறிஸ்தவர்களாகிய நாம் மிகக் கவனமாக இருக்கவேண்டும். எல்லோரும் மீட்கப்படுவார்கள் என்று கூறும் இவர்கள் எதற்காக இவ்வளவு உழைக்கவேண்டும் என்று நாம் சிந்தித்தாலே இவர்களது வஞ்சகத்தை இனம்கண்டு கொள்ளலாம்.

இவர்கள் பேசிய அனைத்தையும் record செய்து வைத்துள்ளேன். நீண்ட பகுதியாக இருப்பதால் தேவையற்றவற்றை edit செய்யவேண்டும் எனவே இங்கு பதிக்க இயலவில்லை.



Attachments
__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

BIBLE STUDY."haviyin kani"-1 anbu.21-6-12at 7:30pm."marurupa halam" 28.2nd street. ramalinga puram, kamaraj nagar,avadi. Ch-71. (bro."Sathiyathin vazhi" amos)

இது நேற்று முன் தினம் எனக்கு குறுஞ்செய்தி மூலம் வந்த அழைப்பாகும். (மேசியாவின்) எதிரிகள் ஆவியின் கனி குறித்து பாடம் நடத்தும் அளவுக்கு வளர்ந்திருப்பதைப் பார்த்து அழுவதா, சிரிப்பதா அல்லது துக்கப்படுவதா, சந்தோஷப்படுவதா என்றே புரியவில்லை. நேற்று இந்த கூட்டத்துக்கு நேரில் சென்று நேரடி ரிப்போர்ட் எடுக்க முயற்சித்தேன்.ஆனாலும் ஒருவித சோர்வின் காரணமாக செல்லவில்லை. என் மனதில் எழுந்த ஒரே கேள்வி என்னவென்றால் இயேசுவைக் குறித்த மூல உபதேசத்திலேயே தெளிவில்லாத இவர்களால் எப்படி ஆவியின் கனி குறித்து போதிக்கமுடியும், என்பதே. இவர்கள் வேத ஆராய்ச்சி என்று நம்மை அழைத்தாலும் அங்கே குழு ஆராய்ச்சியோ கேள்வி கேட்கும் உரிமையோ கிடையாது. எல்லா மேடைகளைப் போலவே இங்கேயும் பிரசங்கம் தான்.எனவே இதை வேத ஆராய்ச்சி என்பதைவிட பேத போதனை என்று கூறுவதே சரியா இருக்கும்.ஏனெனில் இவர்கள் வேதத்தைப் போதிக்கவில்லை, பேதத்தையே போதிக்கிறார்கள். நம்மைப் போன்று கேள்வி கேட்பவர்களை உள்ளே விடுவதும் இல்லை.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இவர் பிசாசின் போதனையை அவனது சகல தந்திரோபாயத்துடன் செய்யும் இந்த ஆள் தன்னை “சத்தியத்தின் வழி” ஆமோஸ் என்று குறிப்பிட்டுக்கொள்ளுகிறார். இயேசுதானே சத்தியத்தின் வழியானவர் ? பெரியவர் ஞானப்பிரகாசம் மற்றும் இக்னீஷியன் ஆகியோர் விளக்கட்டுமே..!

http://yauwanajanam.activeboard.com/t41249303/topic-41249303/?page=1#lastPostAnchor

இவர்களுக்கு தேவையில்லாமல் நாம் விளம்பரம் தருவதாக சில நண்பர்கள் வருத்தப்படுவதுண்டு.இது நல்லதா, கெட்டதா, சரியானதா, தவறானதா என்றெல்லாம் நாம் யோசிக்கும் நிலையிலில்லை. நம்முடைய ஒரே நோக்கம் இவர்களைக் குறித்து கிறிஸ்தவ சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்பதே. அது நிறைவேறினாலே போதும். மற்றபடி நாம் இவர்களைக் குறித்து இத்தனை எச்சரித்தும் இவர்களால் யாராவது வஞ்சிக்கப்பட்டால் அந்த ஆத்துமா கிறிஸ்துவில் வேர்கொள்ளாததாகவே இருக்கும்.அதுகுறித்து நாம் கவலைகொள்ளவேண்டாம்.

ஆத்துமா என்றதும் நினைவுக்கு வருகிறது, இந்த கூட்டத்தார், பிதாவை நோக்கி இயேசுவின் நாமத்தில் ஜெபிப்பார்கள். ஆனாலும் முடிவில் பொதுவாக கிறிஸ்தவர்கள் சொல்லும் சங்கீதம்.103:1,2 -ஐ சொல்லமாட்டார்கள். அதுவே போதும் இவர்களை அடையாளங் காண. ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கை (?) யின்படி ”ஆத்துமா” என்ற ஒன்று இல்லை. ஏனெனில் அவர்களுக்கு மனிதனில் ”திரித்துவம்” இல்லை. அது இருக்கிறது என்றால் தேவனின் திரித்துவத்தையும் ஏற்கவேண்டுமே என்பதால் ”ஆவி, ஆத்துமா, சரீரம்” என்பதற்கு வேறு விளக்கம் வைத்திருக்கிறார்கள்.

இதோ நாம் இங்கே அவர்களுடைய அடையாளமாக,அவர்கள் ஜெபம் செய்து முடித்து “என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்தரி...” சொல்லமாட்டார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறோம் அல்லவா, எனவே இப்போது சுதாரித்துக்கொண்டு, போனால் போகிறது என்று அதையும் செய்ய ஆயத்தமாக இருப்பார்கள். அப்போதுதானே நமக்குள் ஊடுறுவ முடியும்?

உஙக்ள் வீட்டுக்கு ”சத்தியத்தின் வழி” எனும் மாதப் பத்திரிகை வருமானால் அதனை நிதானமாக வாசித்து ஆவியானவருடைய துணையுடன் யோசித்து நல்லதொரு முடிவுக்கு வாருங்கள்.அந்த முடிவு அந்த பத்திரிகை கொளுத்துவதாக இருக்கட்டும்.

எச்சரிக்கை...எச்சரிக்கை...எச்சரிக்கை..!


இதே கூட்டத்தைச் சேர்ந்த இன்னொரு (மேசியாவின்) எதிரியான ஞானப்பிரகாசம் என்பவரும் ஒரு பத்திரிகையை எழுதி வெளியிடுகிறார். அதையும் கொளுத்திவிடவேண்டும். இவையெல்லாம் காவற் கோபுரம் எனும் வஞ்சிக்கும் சர்ப்பத்தின் குட்டிகளே..!

https://www.facebook.com/profile.php?id=534304366



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:
amos wrote:

i m not a Jehovah witness, Your thinking Wrong. Pls Check My Life.

( Walk in wisdom toward them that are without, redeeming the time. colossians 4:5.)


அன்பு சகோதரர் ஆமோஸ் அவர்களை யௌவன ஜனம் தளத்துக்கு இன்முகத்துடன் வரவேற்கிறோம்; மனம்விட்டு வெளிப்படையாகவும் மரியாதையாகவும் பேசுவோம்; இதுவரை இந்த தளத்தில் உறுப்பினராகி விவாதித்தவர்களை கௌரவமாகவே நடத்தியுள்ளோம்;எனவே அச்சங் கொள்ளவேண்டாம்.

தயவுசெய்து நீங்களாவது எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்;அதற்காக உங்கள் கூடுகைக்கு (வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு) இரண்டு வருடம் வந்தால் ஓரளவுக்கு எல்லாம் புரியும் என்று தயவுசெய்து சொல்லிவிடவேண்டாம்;ஏனெனில் உங்கள் கூடுகைக்கு வந்திருந்தபோது உங்கள் சகோதரர்களிடம் கேட்டதற்கு என்னையே பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள்; உங்கள் விசுவாசம் என்ன,என்றும் உங்கள் உபதேசம் என்ன என்றும் அதாவது டாக்ட்ரீன் என்ன என்றும் விதம்விதமாக நான் ஆர்வத்துடன் கேட்டும் அதற்கு சரியான நேரடி பதிலைச் சொல்லாமல் அவர்கள் என்னை விசாரணை செய்வதிலேயே கவனமாக இருந்தார்களே ஒழிய தங்களிடம் அவர்கள் கற்றுக்கொண்டவற்றை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல அவர்களுக்கு தைரியமில்லை.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல‌ உங்கள் செய்தியை பொறுமையாகக் கேட்டு ஒரு குறிப்பிட்ட வசனத்தை நீங்கள் வியாக்கியானம் செய்ததைக் கொண்டே நீங்கள் "இன்னார்" என்று அறிந்துகொண்டேன்;

இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து அவர் தொழத்தக்கவரல்ல என்று உபதேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யெகோவா சாட்சிகளே;

நாங்களோ யெகோவா தேவனே சாட்சி கொடுத்தவரின் சாட்சிகளாகும்;

"டீல்" ஓகேவா..?

மூடி மறைத்து மர்மமாகவும் தந்திரமாகவும் போதிப்பதை விட்டுவிட்டு உங்களுக்கு தைரியமிருந்தால் இயேசு தொழத்தக்கவரல்ல என்பதிலிருந்து உங்கள் உபதேசத்தைச் செய்யுங்கள்;மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்..!


 இங்கு அடியேன் எச்சரித்துள்ள (மேசியாவின்) எதிரியான திரு.ஆமோஸ் என்பவர் அண்மையில் தனது (”சத்தியத்தின் வழி” எனும்) பத்திரிகையில் நரகம், பாவம், சுவிசேஷம் தொடர்பான காரியங்களில் அப்பட்டமாக துருபதேசத்தை எழுதியிருக்கிறார். இதுகுறித்து இன்று பத்திரிகையின் அச்சகத்தாரை தொடர்பு கொண்டு பேசினேன். ஐயா,ஆதாரத்துடன் சொல்லுங்கள் என்று சொன்னீர்களே, இந்த மாத பத்திரிகையை நீங்கள் வாசித்தாலே அனைத்தும் விளங்குகிறதே, அதில் அவர் எழுதியிருப்பவை உங்களுடைய விசுவாசத்துக்கு ஏற்புடையதாக இருக்கிறதா என்று வினவினேன். அவரோ பொத்தாம்பொதுவில்,” இப்படி நம்மிடையே ஒற்றுமையில்லாமல் இருந்தால் ஆண்டவரையறியாதோரை எப்படி சந்திப்போம், அவரும் இயேசுவை தொழுகிறார், நாமும் தொழுதுகொள்ளுகிறோம்...” என்று சலித்துக்கொண்டார். நான் அவசரமாக மறுத்து,இல்லைங்க, அவர்கள் இயேசுவானவரை தொழத்தக்க தெய்வமாக ஏற்கிறதில்லை என்றேன். அதற்கு பதிலாக அவர் சொன்னது, முதலில் நீங்கள் விவரமாக எனக்கு எழுதுங்கள்,நான் அவருடன் ஒரு நேருக்கு நேர் விவாதத்தை ஏற்பாடு செய்கிறேன் என்றார்.சென்னை வட்டாரத்திலுள்ள நண்பர்களுக்கு இதில் ஆர்வமிருப்பின் தொடர்புகொள்ள பட்சமாய் வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

ரசலின் வேதத்தை நம்புபவர்கள் மற்றவர்களை பற்றி பேச வேண்டாம். உள்ளதை உள்ளபடி சொல்ற மாதிரி தெரியலயே, உங்களுக்கு தேவையானதை எல்லாம் எடுத்துக்கொண்டு அலர்ஜியான விஷயங்களை உவமை அது இது என திரிப்பது யார்? 

மத்தேயு 8:11,12 ஐ நல்லா வாசித்து பாருங்கள். ராஜ்யத்தின் புத்திரர் புறம்பான இருளில் (6 க்கு 4) தள்ளப்படுவார்கள், அழிந்து போகிற (!) அவர்களுக்கு எப்படி அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். இயேசுவின் ரத்தம் எல்லாரையும் ரட்சிக்க வல்லது தான் ஆனால் அந்த ரட்சிப்புக்கு பாத்திரமாக ஒருவன் அவரை விசுவாசிக்கவேண்டும், இப்படி அவனவன் அவனவன் போக்கிலேயே எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என அதை அவமதிப்பது நீங்கள் தான் 

யாருக்கு நித்திய ஜீவன் (யோவான் 3:16 ல் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கே)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

"தென்னை மரத்திலே தேள்கொட்டினால் பனைமரத்திலே நெறி கட்டுமாம்.." என்பார்களே அதுபோல வாளாதிருந்த நம்மை வம்பை இழுக்கிறான்,முவிப தலைவன்..!

// நம்மிடம் ஃபிலிம் காட்ட இனி ஒன்றும் இல்லாததால், ஒன்றும் பேசாத ஆமோஸிடம் படம் எடுக்குது சர்ப்பம்!! ஏன் உம் சகோதரிகள் முக்காடு போடுவதில்லையோ!! முக்காடு போடுவது என்ன அவிக சபையின் காப்பிரைட்டா!!?? முக்காடு போடுவது, முக்காடு போடாமல் இருப்பது, வெள்ளை ஜிப்பா போடுவது, போடாமல் இருப்பது தான் புதிய மார்க்கத்தானின் சிந்தனையாக‌ இருக்கிறது!! அப்படி என்றால் நீயே கத்தோலிக்க சபையை வேசி சபையென்று ஒப்புக்கொண்டாயே!! பரவாயில்லையே, இத்துனை சீக்கிரம் நீயும் அவர்களுக்கு எதிரியாவாய் என்று எதிர்ப்பார்க்கவில்லை!!


நீ புதிய மார்க்கத்தின் ஸ்தாபகர்!! உனக்கும் கிறிஸ்தவத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது!! ஏனென்றால் நீ போதிக்கும் இயேசு சுவாமியால் எல்லா மனிதர்களையும் இரட்சிக்க முடியாதாம்ல!! ஆமோஸ் போதிக்கும் கிறிஸ்து, நாங்க போதிக்கும் கிறிஸ்து தந்த ஈடு பலி முழு மனித குலத்தையே இரட்சிக்க தான் என்கிற இயேசு கிறிஸ்துவை போதிக்கும் நாங்களே மெய்யான கிறிஸ்தவர்கள்!! கிறிஸ்தவத்தை குறித்தோ அதன் கோட்பாடுகளை குறித்தோ பேச உனக்கு தகுதியே கிடையாது!! நீ தொழுதுக்கொள்ளும் தெய்வம் எல்லாரையும் இரட்சிக்க வல்லமையில்லாதது என்று நீயும் உன் தளமும் பல முறை சொல்லியிருக்குது!!

ஒவ்வொரு ஊழியக்காரனும் வெளியிடும் பத்திரிக்கைகள் தான் இன்று அந்த அந்த சபையாரின் வேதமாக இருக்கிறது!! வேதத்தில் எவ்வுளவு சேர்க்க வேண்டுமோ, அத்துனையும் சேர்த்து, சாக்கடையில் கிடப்போர் பரலோகம் போய் வந்ததாக கதை கட்டி விற்கப்படும் பத்திரிக்கைகள் தானே நீ படிக்கும் வேதம்!! உள்ளதை உள்ளபடியே சொல்லி கிறிஸ்து என்ன சொல்லிக்கொடுத்தாரோ, அதை போதிக்கும் ஒரு சிலரை பார்த்து நீ ஃபிலிம் எடுப்பது எல்லாம் வேஸ்ட்!! எங்களிடம் ஃபிலிம் எடுக்கும் நேரம் போய் உம் தெருவில் சிலரை ஆதாயப்படுத்திக்கொள்ள பார், கூட்டமாவது சேருமே!!

யெகோவா சாட்சிகளை குறித்து உனக்கு சொல்லிக்கொடுத்தவர்களின் வார்த்தையே கக்கிக்கொண்டு இருக்கிறாய்!! யாராவது யெகோவா சாட்சி வந்து தான் உனக்கு புத்தி சொல்லனும்!! //

தம்பி, நாங்க உனக்கு ஃபிலிம் காட்டல ராஸா, இது  டிஜிட்டல் யுகமல்லவா, உனக்கு புள்ளி வெச்சிருக்கோம்'டா, நீ காலி பெருங்காய டப்பா என்பதையும் கலப்பட சரக்கு விற்கும் கள்ளன் என்பதையும் தோலுரிப்பதே எனது முதல் பணியாகும்.அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுட மாட்டேன், கவலைப்படாதே; இன்னும் என்னைக் குறித்து அங்குமிங்கும் தேடியெடுத்து எழுதாவிட்டால் உனக்கு இண்டு இடுக்கெல்லாம் அரிக்கிறது என்பதையும் இதோ தெரிந்துகொண்டேன்; உன்னைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அந்த ஏக்கத்திலேயே செத்துடுவியோன்னு பரிதாபமாக இருக்குடா..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஆமோஸ் அவர்களின் யூட்யூப் தளத்தில் பதித்த பின்னூட்டம்...

திரு.ஆமோஸ் அவர்களே,

உங்கள் ஆட்கள் ஓயாமல் கிறித்தவ ஊழியர்களை காணிக்கை வாங்கி பிழைக்கிறார்கள் என்று சாடுகிறார்களே, நீங்கள் அவர்களுடைய போதனைகளையே உல்டா பண்ணி பேசி மோனோ ரெக்கார்டிங் பண்ணி சிடி போட்டு விற்று கொள்ளை லாபம் பார்க்கிறீர்களே..இது நியாயமா..?

மேலும் கத்தோலிக்கர்களைப் போலவே உங்கள் சகோதரிகளும் முக்காடு போட்டிருக்கிறார்களே..? அப்படியானால் நீங்கள் வேசி சபையின் வழக்கங்களை இன்னும் கைக்கொள்ளுவதாகத் தானே அர்த்தம்..?

வெளியேறினால் முழுவதுமாக வெளியேறி முகமதுவைப் போல கிறிஸ்தவத்தின் எந்த சாயலும் இல்லாமல் தனி வேதத்தை எழுதி பிழைக்கவேண்டும்;அதுவே நல்ல வீரனுக்கு அழகு..!

உன்னைப் போன்ற வேசியைவிட அந்த வேசியே வாசி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//சில்சாம் அண்ணே நம்ம தகுதிக்கு இது சரியோ , இது முறையோ ,இதுதருமம் தானோ?//
 
நிச்சயம் தகாது! சகோ. சில்சாம் உங்களுக்கு அந்த அச்சக உரிமையாளரை தெரியுமென்றால், அவர் உண்மையான கிறிஸ்தவர் என்றால் இது போன்ற கள்ள உபதேச கயவர்களை பற்றி நன்கு விளக்கி பத்திரிக்கை அச்சிடப்படுவதை தடை செய்யுங்கள் "ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள்" என்பது சகோதரர்களுக்குள் வேண்டுமானால் பொருந்தும் சாத்தானின் தூதர்களுக்கு அல்ல!


__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

முன்னால் விட்டு பின்னால் குத்தும் அன்பு சில்சாம்
Reply Quote Edit Post


 

 சில்சாம் தனது தளத்தில் சொன்னது 

////அன்பு சகோதரர் ஆமோஸ் அவர்களை யௌவன ஜனம் தளத்துக்கு இன்முகத்துடன் வரவேற்கிறோம்; மனம்விட்டு வெளிப்படையாகவும் மரியாதையாகவும் பேசுவோம்; இதுவரை இந்த தளத்தில் உறுப்பினராகி விவாதித்தவர்களை கௌரவமாகவே நடத்தியுள்ளோம்;எனவே அச்சங் கொள்ளவேண்டாம்.

தயவுசெய்து நீங்களாவது எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்;அதற்காக உங்கள் கூடுகைக்கு (வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு) இரண்டு வருடம் வந்தால் ஓரளவுக்கு எல்லாம் புரியும் என்று தயவுசெய்து சொல்லிவிடவேண்டாம்;ஏனெனில் உங்கள் கூடுகைக்கு வந்திருந்தபோது உங்கள் சகோதரர்களிடம் கேட்டதற்கு என்னையே பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள்; உங்கள் விசுவாசம் என்ன,என்றும் உங்கள் உபதேசம் என்ன என்றும் அதாவது டாக்ட்ரீன் என்ன என்றும் விதம்விதமாக நான் ஆர்வத்துடன் கேட்டும் அதற்கு சரியான நேரடி பதிலைச் சொல்லாமல் அவர்கள் என்னை விசாரணை செய்வதிலேயே கவனமாக இருந்தார்களே ஒழிய தங்களிடம் அவர்கள் கற்றுக்கொண்டவற்றை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல அவர்களுக்கு தைரியமில்லை.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல‌ உங்கள் செய்தியை பொறுமையாகக் கேட்டு ஒரு குறிப்பிட்ட வசனத்தை நீங்கள் வியாக்கியானம் செய்ததைக் கொண்டே நீங்கள் "இன்னார்" என்று அறிந்துகொண்டேன்;

இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து அவர் தொழத்தக்கவரல்ல என்று உபதேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யெகோவா சாட்சிகளே;

நாங்களோ யெகோவா தேவனே சாட்சி கொடுத்தவரின் சாட்சிகளாகும்;

"டீல்" ஓகேவா..?

மூடி மறைத்து மர்மமாகவும் தந்திரமாகவும் போதிப்பதை விட்டுவிட்டு உங்களுக்கு தைரியமிருந்தால்இயேசு தொழத்தக்கவரல்ல என்பதிலிருந்து உங்கள் உபதேசத்தைச் செய்யுங்கள்;மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்..!///////

 

 

-----------------------------------------------------------------------------------------------

 

இப்படி நல்லவன் போல் பேசிய நமது 

முன்னால் விட்டு பின்னால் குத்தும் அன்பு சில்சாம்

ஆனால் மறை முகமாக, மெய்பொருள் அச்சகத்தில் உங்களுகென்று தனி மரியாதை உள்ளது அதனால்    சத்தியத்தின் வழி மாத இதழை நீங்கள் அச்சடிக்க வேண்டாம், அது மாற்றுக்கருத்து உள்ளவர்களின் இதழ், என்று மேலும் பல சென்சார் செய்த வார்த்தைகளை உபயோகித்து உள்ளார்.


நெல்லெண்ணம் கொண்ட அந்த அச்சகத்தார் ஆமோஸ் சகோதரரிடம் சொல்ல மனிதன் மனமுடைந்து போனார் 

"ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசாதிருங்கள் " என்ற வசனத்தை நமது சகோதரர் மறந்திருப்பரோ ???

என்ன கொடுமை சார் இது?? 

இவர்ர்ல்லாம் போதகராம் , இவருக்கெல்லாம் ஒரு ௬ட்டமாம்


__________________



விசுவாசிகிறவனுக்கு எல்லாம் ௬டும் ...
----------------------------------------------------------____________________________------
சில்சாம் அண்ணே நம்ம தகுதிக்கு இது சரியோ , இது முறையோ ,இதுதருமம் தானோ?



__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

amos wrote:

i m not a Jehovah witness, Your thinking Wrong. Pls Check My Life.

( Walk in wisdom toward them that are without, redeeming the time. colossians 4:5.)


அன்பு சகோதரர் ஆமோஸ் அவர்களை யௌவன ஜனம் தளத்துக்கு இன்முகத்துடன் வரவேற்கிறோம்; மனம்விட்டு வெளிப்படையாகவும் மரியாதையாகவும் பேசுவோம்; இதுவரை இந்த தளத்தில் உறுப்பினராகி விவாதித்தவர்களை கௌரவமாகவே நடத்தியுள்ளோம்;எனவே அச்சங் கொள்ளவேண்டாம்.

தயவுசெய்து நீங்களாவது எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்;அதற்காக உங்கள் கூடுகைக்கு (வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு) இரண்டு வருடம் வந்தால் ஓரளவுக்கு எல்லாம் புரியும் என்று தயவுசெய்து சொல்லிவிடவேண்டாம்;ஏனெனில் உங்கள் கூடுகைக்கு வந்திருந்தபோது உங்கள் சகோதரர்களிடம் கேட்டதற்கு என்னையே பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள்; உங்கள் விசுவாசம் என்ன,என்றும் உங்கள் உபதேசம் என்ன என்றும் அதாவது டாக்ட்ரீன் என்ன என்றும் விதம்விதமாக நான் ஆர்வத்துடன் கேட்டும் அதற்கு சரியான நேரடி பதிலைச் சொல்லாமல் அவர்கள் என்னை விசாரணை செய்வதிலேயே கவனமாக இருந்தார்களே ஒழிய தங்களிடம் அவர்கள் கற்றுக்கொண்டவற்றை வெளிப்படையாக எடுத்துச்சொல்ல அவர்களுக்கு தைரியமில்லை.

பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல‌ உங்கள் செய்தியை பொறுமையாகக் கேட்டு ஒரு குறிப்பிட்ட வசனத்தை நீங்கள் வியாக்கியானம் செய்ததைக் கொண்டே நீங்கள் "இன்னார்" என்று அறிந்துகொண்டேன்;

இயேசுவின் தெய்வத்தன்மையை மறுத்து அவர் தொழத்தக்கவரல்ல என்று உபதேசிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் யெகோவா சாட்சிகளே;

நாங்களோ யெகோவா தேவனே சாட்சி கொடுத்தவரின் சாட்சிகளாகும்;

"டீல்" ஓகேவா..?

மூடி மறைத்து மர்மமாகவும் தந்திரமாகவும் போதிப்பதை விட்டுவிட்டு உங்களுக்கு தைரியமிருந்தால் இயேசு தொழத்தக்கவரல்ல என்பதிலிருந்து உங்கள் உபதேசத்தைச் செய்யுங்கள்;மற்றதையெல்லாம் பிறகு பார்த்துக்கொள்ளலாம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 3
Date:
Permalink  
 

i m not a Jehovah witness, Your thinking Wrong. Pls Check My Life.

( Walk in wisdom toward them that are without, redeeming the time. colossians 4:5.)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சென்னையின் பிரதானமான இடத்தில் கிறித்தவர்களில் கிறித்தவராக அத்தனை தந்திரமாகப் போதிக்கும் ஆமோஸ் மகேந்திரன் எனும் கள்ளனைக் குறித்து நேரடி ரிப்போர்ட் எடுத்து பதித்திருந்தேன்;அது பலருடைய கவனத்துக்குச் சென்று சேராதது போல் தெரிகிறது;எனவே இதனை மீண்டும் நண்பர்களின் கவனத்துக்குக் கொண்டு தருகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கடந்த பல மாதங்களாக எனக்கு ஒரு குறுஞ்செய்தி குறிப்பிட்ட வேத ஆராய்ச்சி கூட்டத்துக்கு வருமாறு அழைத்துக்கொண்டே இருந்தது;அதன் தலைப்பு ஆர்வத்தைத் தூண்டுவதாக இருந்தது;பலமுறை முயற்சித்தும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டவில்லை;அந்த குறுஞ்செய்தி இதுதான்...

// (BIBLE STUDY MEETING "Abraham's 3 wives and 3 covenants" (15-02-2011, 6.45pm) AT CSC CENTRE, new25,old 17,balfour rd, (OPP. BISHOP MANIKKAM HALL), KELLYS, CHENNAI. Pls come all. For : SATHIYATHIN VAZHI MAGAZINE Bro. AMOS) //

வேதபாட கூட்டம்:பொருள்:ஆபிரகாமின் 3 மனைவியரும் 3 உடன்படிக்கைகளும் என்பதே குறுஞ்செய்தியின் சாராம்சம்.இன்று (15.2.2011) மிகுந்த பிரயாசத்துடன் சென்று அந்த கூட்டத்தில் கலந்துகொண்டேன்;நான் சற்று தாமதமாகச் சென்றதாலும் இன்றைக்கு மூன்றாவது இறுதி பகுதியானதாலும் எனது மொபைல் காமிராவில் பதிவுசெய்துகொண்டதுடன் இந்த குழுவைக் குறித்த பின்னணியைக் குறித்து அறிய‌ அங்கிருந்த இரண்டு நபர்களிடம் பேச்சுகொடுத்தேன்;அவர்கள் கையில் கடந்த வாரங்களில் போதித்த "கிறித்தவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமா" என்ற செய்தி அடங்கிய சிடி இருந்தது;அதன் விலை ரூபாய்.25 முழுவேதமே நூறு ரூபாய் தானே என்று மனதில் புலம்பிக்கொண்டே, இந்த செய்தியின் தீர்ப்பு என்ன என்று கேட்டேன்;வயதில் சற்று மூத்தவர்களான அந்த நபர்கள் பிடிகொடுத்து பேசாமல் என்னைத் தவிர்ப்பது போலவே பேசினார்கள்;என் முகத்தைப் பார்த்தால் அவர்களுக்கு அப்பாவியாகத் தோன்றவில்லை போலும்;சற்று நெளிந்துகொண்டே கிறித்தவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கடைபிடிக்கவேண்டுமா என்ற கேள்விக்கு தேவையில்லை என்பதே தீர்ப்பு என்றார்கள்.

அடுத்து வயதில் மூத்தவரான பெரியவரிடம் ஐயா,நீங்கள் எந்த ஃபெல்லோஷிப் (fellowship) போறீங்க, என்று கேட்டவுடனே அதற்கு சரியான பதிலைச் சொல்லாமல் இருவரும் பிலுபிலுவென பிடித்துக்கொண்டார்கள்;எந்த சபையும் சரியில்லை;ஆண்டவர் என்ன சபையா கட்டச்சொன்னார்,ஏஜி சபையிலிருக்கும் ஒருவர் எங்கும் போய்விடாதபடி பார்த்துக்கொள்வதிலேயே கவனமாக இருக்கிறார்கள்;என்று மற்ற சபைகளைக் குறித்து புலம்பினாரே தவிர அவர் அந்த சபைக்கு தான் போகிறாராம்,ஆனால் வேதத்தை ஆராய இங்கு வருவாராம்;இங்கு கற்றுக்கொள்வதை மற்ற சிறிய சபைகளில் போதிக்க சென்று வருகிறாராம்;இங்கு என்ன போதிக்கிறார்கள் என்று கேட்டால் அது உடனே சொல்லமுடியாது நீங்கள் தொடர்ந்து வரணும் என்றார்;குறைந்தது ரெண்டு வருடம் வரவேண்டுமாம்;டாக்ட்ரின் என்பதே ஸ்தாபனத்தின் தவறான கொள்கையாம்;பைபிளுக்கென்று தியாலஜி இருக்கலாமே தவிர டாக்ட்ரீன் இருக்கமுடியாது என்றார்;எனக்கு ஒன்றும் புரியவில்லை;சரி உங்கள் நம்பிக்கையை ஒரு வரியில் சொல்லமுடியாதா என்றால் முடியாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார்கள்;சரி ரூட்டை மாற்றிப் போடுவோம் என்று நீங்கள் இயேசுவை தெய்வமாகத் தொழுவதை ஏற்கிறீர்களா என்று கேட்டால் அதே கேள்வியைத் திருப்பிக் கேட்டார்கள்;நான் எதுவும் சொல்லவில்லை என்பதால் அவர்களுக்குத் தொடர்ந்து பேசும் வாய்ப்பு இல்லாததுடன்
நான் தொடர்ந்து வந்தாலே அதுவும் இந்த அடிப்படை உபதேசம் எல்லாம் முடிந்தபிறகே கொஞ்சம் கொஞ்சமாகப் புரியும் என்றார்கள்;அந்த ரெண்டு பேரில் ஒருவரை என்னுடைய வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பேச்சுக்கொடுத்துக்கொண்டே வந்தேன்;எல்லாவற்றையும் தெளிவாகச் சொன்னார்.

இயேசு உலக இரட்சகர் என்பதால் உலக மக்கள் அனைவருடைய பாவத்தையும் ஒரேதரம் தம்முடைய பலியினால் பரிகரித்துவிட்டார்; மனிதனின் ஜென்ம பாவத்துக்கான தண்டனை என்பது மாம்ச மரணமே;நரகம் என்பதெல்லாம் கிடையாது;கல்லறைக்குழியே பாதாளம் எனப்படுகிறது;இறுதி நாளில் கிறித்துவைப் போலவே பரிசுத்தமாக வாழ்ந்தோருக்கான மீட்பில் முதல் கூட்டம் (ஈசாக்கின் ஒப்பீடான கிறித்தவர்) இடம்பெறும்;அவர்களே ஆட்சியாளர்கள்;அடுத்து கைவிடப்பட்டோருக்கு ( யூதர் அல்லது இஸ்ரவேலர்) ஒரு வாய்ப்பு;இறுதியில் ஆயிரம் வருட அரசாட்சியின்போது உலகத்தார் அனைவருமே ஒருசேர மீட்கப்பட இந்த உலகமே பரலோகமாக மாறும்.

இதுவே ஆபிரகாமின் மூன்று மனைவியரின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறும் பாடமாகும்;என்று கூறி தான் ஒரு மனிதனிடம் கற்ற பாடத்தை பொறுப்புடன் நல்லபிள்ளையாக ஒப்பித்தார்;இது தான் வேதபாடமாம்;

மூன்று மனைவிக்கும் மூன்று பொருந்தாத கதைகள்...

முதல் மனைவியான சாராளின் மகனான ஈசாக்கின் வாக்குதத்த சந்ததிக்கு கிறித்துவர்கள் ஒப்பீடாம்;இரண்டாம் மனைவி (?) யான ஆகாரின் சந்ததியார் கிறித்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களாம்:மூன்றாவது மனைவியான கேத்துராளின் சந்ததியார் ஒரு பாவமும் அறியாத உலகத்தாராம்;இந்த மூன்று கூட்டத்தையும் மூன்று வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு திட்டத்தின் மூலம் ஆண்டவர் மீட்டுக்கொண்டு இந்த உலகையே பரலோகமாக மாற்றிவிடுவாராம்;எத்தனை சிம்பிளாக நறுக்'கென இருக்கிறது,விஷய‌ம்,இதைவிட்டுவிட்டு நாம் ஏன் வீணாக பாவம், மன்னிப்பு, ஆக்கினை, தீர்ப்பு, நரகம் என்று வீணாகக் குழப்பிக்கொண்டிருக்கிறோம் என்று ஒரு கணம் திகைத்துப்போனேன்;

ஆண்டவர் செய்த மூன்று உடன்படிக்கையையும் மூணு பெண்களை வைத்து எத்தனை எளிமையாகச் சொல்லிவிட்டார் இந்த பெரியவர்..!


இந்த விஷ(ய)ம் முழுவதும் பதிவுசெய்யப்பட்டு உங்கள் கவனத்துக்காக சமர்ப்பிப்படுகிறது;இதிலுள்ள சூழ்ச்சியான போதகத்தைக் கண்டுபிடித்தோர் இங்கே உங்கள் விசுவாசத்தைப் பதிவுசெய்யக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் ஒன்றுமறியாதிருந்தாலும் உங்கள் ஐயங்களைக் கேட்கவும்; தயவுசெய்து வஞ்சிக்கப்பட்டு போகவேண்டாம்;ஏனெனில் அந்த கூட்டத்தார் எடுத்த எடுப்பிலேயே நாம் கலந்துகொள்ளும் சபை ஐக்கியத்தின் மீது நமக்கு நம்பிக்கை இழக்கும் வண்ணமாக நமது விசுவாசத்தைக் கேள்வி கேட்கிறார்கள்;பிறகு இப்படியெல்லாம் பிரிந்திருக்கிறவர்கள் எப்படி தங்களை கிறித்துவின் சபையார் என்று சொல்லிக்கொள்ளலாம் என்கிறார்கள்.



சபையுடன் நமக்கு இருக்கும் வருத்தம் என்பது வேறு; பொதுவான கிறித்தவம் சார்ந்த உபதேசம் என்பது வேறு; இவர்கள் வஞ்சகத்துடன் வாய்க்கு வாய் இயேசுவைக் குறித்து சொன்னாலும் அவருடைய தியாகத்தைக் கேலிக்குரியதாக்கும் வண்ணமாக போதிப்பதையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பைக் குறித்து தவறாக உபதேசிப்பதையும் கவனிக்கவேண்டும்.

110220117129.jpg

மேற்கண்டசுவரொட்டியானது அண்மையில் அவர்கள் நடத்திய கருத்தரங்கின்அறிவிப்பாகும்;இதில் அதிர்ச்சிகரமானதொரு செய்தி என்னவென்றால் இதில் துதிஆராதனை செய்தவர் புகழ்பெற்ற இசைவழி நற்செய்தியாளர்வியாசர் லாரன்ஸ்ஆவார்.

Vyasar%20Law.jpg

அவரும் இந்த துருபதேசக்குழுவில் ஒருவராக இருப்பது கிறித்தவ உலகையே ஆச்சரியப்பட வைக்கும்; ஏனெனில் அவருடைய பேச்சுகள் ஏதோ புரட்சிகரமாகவும் பாடல்கள் கொஞ்சம் இனிமையாக இருக்கிறதே என்று கிராம சபைகள் அவருடைய சுயரூபம் தெரியாமல் அவரைப் பயன்படுத்தியிருக்கிறது; இதில்வியாசர் லாரன்ஸ் அப்பாவியோ வெறும் பாடிவிட்டுச் செல்லும் விருந்தாளியோ அல்ல, அவர் அவர்களுடைய பத்திரிகையிலும் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.கிறித்தவ ஊழிய வட்டாரத்தில் பிரபலமான இவர் போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கி கைதானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போலி பாஸ்போர்ட், விசா தயாரித்து மோசடி: ஒருவர் கைது

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=46030&Print=1

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard