Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆதியாகமம் 6ல் வரும் தேவகுமாரர் யார்?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: ஆதியாகமம் 6ல் வரும் தேவகுமாரர் யார்?
Permalink  
 


// சகோ. சில்சாம் உங்கள் கருத்து ஆதங்கத்திற்கு மிக்க நன்றி. சகோ. அற்புதம் தவறாக அந்த விளக்கத்தைப் பதித்துள்ளார் என கருதுகிறேன். //

பயனுள்ள கருத்துக்கும் ஆதரவான நிலைப்பாட்டுக்கும் நன்றி,சகோதரனே;நமது அன்புக்குரிய சகோதரர் அற்புதம் அவர்கள் தவறான விளக்கத்தைக் கொடுத்தது மாத்திரமல்ல,அது அத்தனை முக்கியமல்ல,மூல உபதேசத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது எனக்கு ஏனோ சற்று சங்கடமாக இருக்கிறது.

ஏனெனில் அங்கே நகரமே பற்றி எரிகிற போது ஒரு மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம்;நம்ம ஊரு ஆளு ஒருத்தன் அந்த நெருப்பிலே பீடியைக் கொளுத்திக்கொண்டு போனானாம்.

அதுபோலவே நாம் ஓங்கி உரைக்கவேண்டிய சத்தியங்களை மென்மையாகச் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒரு பக்கம் யெகோவா சாட்சிகளும் மறுபுறம் ப்ரன்ஹாம் வழித்தோன்றல்களும் ஆரோக்கிய உபதேசத்தைக் கொண்டு செல்ல இடைஞ்சலாக இருக்கிறார்கள்.


ஒரு நாளில் நாம் சந்திக்கும் ஒருவராவது இந்த குழுக்களால் பாதிக்கப்பட்டவராகவே இருக்கிறார்;அவர்களிடம் நிதானமாகப் பழகி அவர்களை ஆரோக்கிய உபதேசத்தை நோக்கி திருப்புவதற்குள் போதும் போதும் என்றாகிறது.

இறுதியாக ஒர் வேண்டுகோள்: சகோதரர் அற்புதம்
அவர்கள் தன்னுடைய நிலைப்பாடு தவறு என்று உணர்வாரானால் தான் எழுதியதை அவர் நீக்கவேண்டும் அல்லது அதற்கு சரியான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும்;யூகமான பதில்களைத் தவிர்க்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

ஆண்டவராகிய இயேசு சொல்லும்போது "அவர்கள் தேவதூதர்களைப்போல திருமணம் செய்யாமல் (கொள்வனையும் கொடுப்பனையும் இன்றி) இருப்பார்கள்" என்று மாற்கு 12:25ல் குறிப்பிட்டுள்ளார்

என்ற வேத வாக்கியத்திற்கு முற்றிலும் எதிராக உள்ளது சகோ. அற்புதத்தின் விளக்கம்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. சில்சாம் உங்கள் கருத்து ஆதங்கத்திற்கு மிக்க நன்றி. சகோ. அற்புதம் தவறாக அந்த விளக்கத்தைப் பதித்துள்ளார் என கருதுகிறேன். சரியான விளக்கம் இங்கு உள்ளது பாருங்கள். அவர் கூறியது ஏன் தவறு என இங்கேயே உள்ளது 





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Brother Sekar:

சில்சாம் அண்ணே, எது தவறு எது சரி என்பது நீங்கள் உங்கள் கருத்தைச் சொன்னால்தால் சொல்லமுடியுங்கறேன்.


pgolda Wrote on 04-02-2011 14:34:33:

ஏதோ அவசரத்தில தெரியாம சொல்லிட்டாரு. யோசிக்க time கொடுங்க.

Chillsam:

இதிலே யோசிக்க என்ன இருக்கிறது, இதற்குப் பிறகு யோசித்து போலியான தள்ளுபடியாகமத்தையெல்லாம் பிணைத்து எதையாவது பிதற்றவேண்டிய அவசியம் எனக்கு இல்லை; அறிவிலிகள் சொல்லப்படும் அனைத்தையும் நம்புவார்கள், அதையே வேதமாக பரப்புவார்கள்;ஞானிகளோ சிந்தித்து உணர்ந்துகொள்ளுவார்கள்; நான் ஞானமடைய விரும்புகிறேன்..!

pgolda:

நண்பர் சில்சாம் அவர்களே, சீக்கிரம் ஞானமடைய வாழ்த்துக்கள் !!

Chillsam:

"ஞானிகளோ சிந்தித்து உணர்ந்துகொள்ளுவார்கள்" என்பதோடு நிறுத்தினால், நான் என்னைக் குறித்து பெருமையாக எழுதியதாக சர்ச்சையைக் கிளப்புவார்களே என்று என்னைத் தாழ்த்தி எழுதினால் அதற்கு இப்படியொரு திமிர்த்தனமான பதில்...இப்படியே பயனற்ற விவாதங்கள் நகர்ந்து எந்த தீர்வும் எட்டப்படாமல் அவரவர் பிரிந்துபோகிறோம்; சிலர் தங்கள் மௌனத்தையே நமக்கு பதிலாக்கி புறக்கணிக்கிறார்கள் என்றால் இப்படியும் சிலர்..!

அண்ணன் ராபின் அவர்களைப் போல கொஞ்சம் ஜோவியலாக எழுதினாலும் அதுவும் இராஜ்குமார் போன்ற நண்பர்களுக்கு கோபத்தையே வரவழைக்கிறது; இந்த திரியில் முக்கியமானதொரு திருப்பத்துக்குக் காரணமான அற்புதம் அவர்கள் தனது மௌனத்தைக் கலைத்துவிட்டு வெளியே வந்து சரியான விளக்கத்தைக் கொடுக்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இது தமிழ்க் கிறித்தவ தளத்தின் நிர்வாகியும் எனது அன்புக்குரிய நண்பருமான திரு.அற்புதராஜ் அவர்களின் கருத்து;எளிதில் தனது விசுவாசத்தையும் போதனையையும் சர்ச்சைக்குரிய காரியங்களில் தனது கருத்தையும் சொல்லும் பழக்கமில்லாத அருமை நண்பர் அவர்கள் கோல்டா என்பவருடைய இடைவிடாத தூண்டுதலால் சற்று உணர்ச்சிவயப்பட்டு தன்னையும் மீறி இவற்றை எழுதியிருப்பதாகவே எனக்குத்  தோன்றுகிறது;இதை குறித்த எனது கருத்தை தொடர்ந்து எழுதுவேன்.

arputham@Tcs on 03-02-2011
// ஆதியாகமம் 6ஆம் அதிகாரத்தின் முதல் நான்கு வசனங்களைக் குறித்த உங்கள் OBSERVATION நன்றாக இருக்கிறது. எனது விளக்கம் அல்லது (வெளிப்பாடு:) ) கருத்து என்னவெனில்,

தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள்...... அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.

மேலே கண்ட வசனத்தின் படி ஒரு கலப்பினம் பூமியில் தோன்றுகிறதை நாம் காண்கிறோம்.
இதில் தேவகுமாரர் என்பதற்கு பல விளக்கங்கள் வேத வல்லுநர்களால் ஏற்கனவே தரப்பட்டிருக்கிறது. இவர்கள் சேத்தின் வம்ச வழியில் வந்தவர்களும் காயீனின் வம்சத்தில் வந்தவர்களும் கலந்தபடியால் உண்டானவர்கள் என்று சிலர் கூறுகின்றனர்.
வேறு சிலர் (விழுந்து போன) தேவதூதர்கள்தாம் மனிதர்களோடே கலந்து விட்டார்கள் என்று கூறுகின்றனர்.
இவ்விரண்டு கருத்துக்களும் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்கிற கருத்தாக இருக்கிறது.

ஆனால் என்னைப் பொறுத்தவரையில் முதல் கருத்தை முற்றிலும் நிராகரிக்கிறேன். ஏனெனில் மனிதனுக்கும் மனுஷிக்கும் பிறக்கும் குழந்தை இவ்விரண்டு பேரைப் போலத்தான் இருக்கும். ஆகவே தேவகுமாரர்கள் என்பவர்கள் மனுஷ சந்ததி அல்ல. நாம் இங்கே இன்னொரு காரியத்தையும் கவனிக்க வேண்டும். தேவகுமாரர்களின் வருகை பூமியில் வந்த பின் தான் தேவன் பூமியை சிருஸ்டித்ததற்காக மனஸ்தாபப்படுகிறதைக் காண்கிறோம். உண்மையில் அவர்கள் தேவகுமாரர்களாக இருந்திருப்பார்கள் எனில் தேவன் ஏன் மனஸ்தாபப் படவேண்டும். அவர்கள் உருவத்தில் பெரிய்வர்களாகவும், சாதாரண மனிதர்களால் செய்ய முடியாதவைகளைச் செய்ததினாலும் அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் அவர்களை தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் அல்லது தேவகுமாரர் என்று கருதியிருப்பார்கள்.

இப்போது நம் முன் இருக்கும் கேள்வி என்னவெனில், அப்படியானால் இவர்கள் யார்? எங்கிருந்து வந்தார்கள்?

தேவ தூதர்கள் என்பவர்கள் தேவன் சொல்கிற வேளையைச் செய்கிறதற்காக மாத்திரமே பூமியில் வருகிறவர்கள். அவர்கள் எல்லாரும் வார்த்தையினால் உண்டாக்கப்பட்டவர்கள். பிறந்தவர்கள் அல்லர். அவர்களுக்கு மனித சரீரமும் கிடையாது. தேவதூதர்கள் பரலோகிலேயே வாழ்கின்றனர். அதேவேளையில் பரலோகில் வாழாத ஒரு தூதர்கள் கூட்டமும் உண்டு. அவர்கள் லூசிபரோடு கீழே தள்ளப்பட்டவர்கள். அவர்கள் ஆகாயத்தில் அல்லது வான மண்டலங்களில் வசிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வாசஸ்தலம் இல்லாமல் அந்தரத்தில் அலைந்து திரிகின்றனர்.

ஏற்கனவே ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் மனதைக் கெடுத்துப் போட்ட சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த கூட்டத்துக்கும் தேவன் கூறின “ஸ்திரீயின் வித்து” கதிகலக்குகிற விசயமாகவே இருந்து வந்தது. நாம் வேதாகமத்தை வாசிக்கையில் இயேசுகிறிஸ்துவின் வருகையை எந்தளவுக்கு தடுக்க முடியுமோ அந்தளவுக்கு தடுக்க அவன் முயற்சிசெய்து கொண்டே இருந்தான். ஏனெனில் ஸ்திரியின் வித்தாகிய இயேசு வெளிப்படும்போது சாத்தானின் சேனை அவர் காலால் நசுக்கப்பட்டு விடுமே!

அந்த பயத்தில்தான் ஆபேலை காயீனை வைத்துக் கொலை செய்தான். காயீனும் தேவனை விட்டு பிரிந்தான். காயீன் பிறந்த போது ஏவாள் சொன்னதைக் கவனியுங்கள், ”நான் கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் “ காயீன், ஆபேல் விஷயத்தில் சாதித்து விட்ட பிசாசால் சேத்தை ஒன்றும் பண்ண முடியவில்லை. சேத்துக்கு பிள்ளைகள் பிறந்த போது மனுஷர் கர்த்தரைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள் என்று வாசிக்கிறோம்.

இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் மனித சந்ததியில் கலப்பை உண்டாக்க பிசாசு நினைத்தான். நாம் ஏற்கனவே பார்த்தபடி தேவதூதர்கள் பூமியில் தங்குவதில்லை. ஆனால் விழுந்து போன தேவதூதர்கள் அப்படியல்ல அல்லவா, அவர்கள் மனிதருக்குள் புகுந்து அவர்கள் மூலமாக உண்டான கலப்பின ஜாதியே ஆதியாகமம் 6ல் நாம் பார்க்கும் இராட்சதர்களாக இருக்க முடியும். அவர்கள் உருவத்தில் பெரியவர்களாக இருந்ததால் அசாத்தியமான காரியங்களைச் செய்திருக்கலாம், ஆனால் விழுந்து போன தேவதூதர்களால் பிடிக்கப்பட்டவர்கள் மூலம் பிறந்தவர்களாக இருந்தபடியால் அவர்கள் தேவனுக்கு எதிராக கலகம் செய்தார்கள். அதனாலேயே தேவன் பூமியை அழிக்க சித்தங்கொண்டார் என்று கருதுகிறேன். (இப்படி மனுசரோடே கலந்த தூதர்களைத்தான் தேவன் சங்கிலிகளால் கட்டிவைத்திருக்கிறார் என யூதா நிருபம் குறீப்பிடுகிறது என்று கூறுவோரும் உண்டு)

நோவா காலத்துக்குப் பின்னும் கானான் தேசத்தில், பெலிஸ்தியரில் (கோலியாத் போன்ற) இராட்சத பிறவிகளைக் காண்கிறோம். இதுவும் பிசாசின் கலப்பு முயற்சியாலேயே வந்திருக்கும். ஆனால் இம்முறை அது வெற்றிபெறவில்லை. அந்த இராட்சதப் பிறவிகள் அனைவரும் இஸ்ரவேலர்களாலும், தாவீது இராஜாவாலும் முற்றிலும் அழிக்கப்பட்டனர்.

நோவாவின் நாட்களில் நடந்தது போல மனுஷ குமாரன் வரும் நாட்களில் நடக்கும் என்றால் என்ன தொடர்பு இருக்க முடியும் என நாம் நினைக்கலாம். நோவாவின் நாட்களில் தேவன் மனுஷ ஜாதியோடே பிசாசின் கூட்டம் கலந்து ஒரு கலப்பினம் உண்டாகி பூமி நாசம் உண்டானது போல இயேசுகிறிஸ்துவின் வருகைக் காலத்திலும் அனேக கள்ள ஆவிகள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களைப் பிடித்து அனேகரை வஞ்சிக்கும். அனேகர் விழுந்து போவார்கள். ஆகவே கள்ள ஆவிகள், கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள். தேவஜனங்களோடே கலந்து குழப்புவார்கள். நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாலாசீர் லாறி போன்ற பெரும் ஊழியர்கள் எல்லாம் இப்படி விழுந்து போனவர்களே. இப்போதும் சிலர் உண்டு. காலம் நமக்கு அவர்களை வெளிப்படுத்தும்.

Chillsam:

//தேவகுமாரர்களைக் குறித்த அற்புதம் அவர்களின் வெளிப்பாடும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது;நீங்கள் தவறான உபதேசத்தில் இருக்கிறீர்கள்,நண்பரே..!//


மேற்கண்ட நூதனமான விளக்கங்களையும் கடந்து அவற்றை முழுவதும் தள்ளிவிடாமலும் அல்லது ஏற்றுக்கொள்ள உத்தரவாதம் தராமலும் ஒரு ரெண்டுகெட்டான் மனநிலையுடன் நண்பர் அவர்கள் தொடர்ந்து எழுதுவது யாதெனில்,

arputham@Tcs on 03-02-2011

சகோ.சில்சாம் நான் சொல்வதுதான் 100 கரெக்ட் என்று சொன்னால் தான் நீங்கள் என்னைக் குறித்து தீர்க்க முடியும். நான் எனது புரிதலை எழுதியிருக்கிறேன். வேதம் பேசாத இடத்தில் அமைதியாயிருபதே எனது இயல்பு என்றாலும், இவ்விசயத்தில் பல குழப்பங்கள் இருப்பதால் என் கருத்து வெளிவந்தது. உங்களுடைய கருத்தையும் கூறுங்கள். நாம் அனைவரும் ஆராய்ந்து ஒரு பொதுவான கருத்துக்கு வருவோம். மேலும் இது அடிப்படை உபதேசத்திற்கு தொடர்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. இவை எல்லாம் Interesting things அவ்வளவே. கேட்பதற்கு நன்றாயிருக்கும். நமது தேவை வருகைக்கு ஆயத்தமாவதே!

Chillsam:

நண்பர் அற்புதம் அவர்களே, "நான் நினைச்சேன், நீங்க சொல்லிட்டீங்க" என்று ஒரு திரைப்படத்தில் வருமே, அதுபோல சகோதரி (?!) கோல்டா அவர்கள் உங்களைக் குறித்து கைக்கொட்டி சிரித்து மகிழப் போகிறார்கள், என்பது நிச்சயம், அவங்களுக்கும் உங்களுக்கும் ரொம்ப தூரமில்லை..!

நான் இப்பவே எல்லாவற்றையும் எழுதிவிட்டால் பிறகு சுவாரசியம் இருக்காது அல்லவா? கொஞ்சம் நேரம் கொடுங்களேன், தற்காலத்தில் எப்படி துருபதேசக்காரர்கள் ஒரு மாபெரும் திட்டத்துடன் உள்ளே நுழைந்து, "கண்ணுங்களா,செல்லங்களா" என்று இளித்து மக்களை வஞ்சிக்கிறார்களோ அவர்களைப் போலவே நானும் தந்திரமாகவும் நிதானமாகவும் செயல்பட முடிவெடுத்திருக்கிறேன்; நான் எனது போதனையாக இதுவரை எழுதாதற்கும் இதுவே காரணம்..!

நான் நண்பர் கொல்வின் அவர்களுடைய கருத்தை எதிர்நோக்கியிருக்கிறேன்,அதன்பிறகு என்னுடைய கருத்தை நிச்சயமாக சொல்லுவேன்..,என்னுடைய தள நண்பர்களை நான் ஒருபோதும் கடி(த்)ந்துபேசமாட்டேன்,நம்புங்கள்,சேகர்..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard