Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தீர்க்கதரிசனம் எப்படி உண்டாகிறது..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
தீர்க்கதரிசனம் எப்படி உண்டாகிறது..?
Permalink  
 


// வேதத்திலே தீர்கதரிசனங்கள்  ஒன்றும் சுயதோற்றம் உடையதாய் இராமல் தேவனுடைய ஊழியகார்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு தீர்கதரிசனங்கள் சொன்னார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதே.

நான் ஒரு விடுதலை நற்செய்தி கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அந்த கூட்டத்தின் இறுதியில் ஒரு ஊழியக்காரர் ஜெபிக்கும்போது அநேகருடைய பெயரை சொல்லி அனேக காரியங்களை சொன்னார். அனேக தரிசனங்களையும் சொன்னார்.

எனக்கு அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று இருந்தது ஒருவேளை நான் நான் கேட்பதை அவர் தவறாக புரிந்துகொண்டால் நான் பரியாசம் செய்கிறவனாய் தோன்றுமோ என்று எண்ணி கேட்கவில்லை எனக்கு ஏற்பட்ட இந்த சந்தேகத்தை இங்கே பதிவிட்டால் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறன்.

தள‌ சகோதர்கள் தங்களுக்கு தெரிந்த விளக்கத்தை வசன ஆதாரத்துடன் தந்தால் என்னை போன்ற அநேகருக்கு பயன்படும் என்று நினைக்கிறன்.

என்னுடைய சந்தேகம்

பெயர் சொல்லி அழைகிரார்களே..! இந்த பெயர்  எப்படி அவர்களுக்கு தெரியும் ..? அது அவர்களுக்கு முன்பாக எழுதபட்டு  இருக்குமோ ..! அல்லது தங்களை அறியாமலே தங்கள் நாவில் இருந்து வருமா...? அல்லது தேவன் அவர்களுக்கு சொல்லுவாரோ...?

நான் இப்போது இதை காண்கிறேன். என்று சொல்லுகிற காரியங்கள் சில உண்மையாகவும் இருக்கிறது சிலது பொய்யாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. இதை எப்படி இனம்கண்டுகொள்வது.

முக்கிய குறிப்பு :
நான் எந்த நோக்கதுடன் இதை பதிவிடுகிறேன் என்பதை கர்த்தர் அறிவர் (இருதயங்களை ஆராய்கிறவர்) பரியாசம் செய்வதற்காக இல்லை ..! குற்றம் சொல்ல்வதர்காகவும் இல்லை,..! எனக்கு நீண்ட நாட்களாக இதை பற்றி அறிந்து கொள்ள ஆவல் யாரிடதிலாகிலும் கேட்டால் நம்மை தவறாக புரிந்து கொள்வார்களோ என்று எண்ணி அமைதியாக இருந்து விட்டேன்.

ஆனால் இத்தளத்தில் பதிவிடும் சகோதர்கள் அனேக காரியங்களை மிக தெளிவாக அன்போடு சொல்லுகிரபடியல் நான் இங்கு ஏன் சந்தேகத்தை முன் வைக்கிறேன். பதிலுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். //

மேற்கண்ட செய்தியானது மற்றொரு தளத்தில் ஒரு நண்பர் கேட்டது; நாம் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்து அவர்களுடைய நிம்மதியைக் கெடுக்கவேண்டாமே என்று இங்கே அதற்கான பதிலைப் பதிக்கிறேன்; அந்த நண்பர் இங்கே வந்தால் படிக்கட்டும், தனது கருத்தைப் பதிக்கட்டும், விவரம் கேட்கட்டும்; நாம் நம்மிடம் விசாரித்து கேட்கும் யாருக்குமே பொறுமையாகவே பதிலளித்து வருகிறோம்; எனக்கு தான் எல்லாம் தெரியும் என்போருக்கு நம்மைக் கண்டால் ஆகாது; போகட்டும்.

மேற்கண்ட செய்தியிலுள்ள‌ முதல் வரிகள் கீழ்க்காணும் வேத வசனத்தின் பாதிப்பில் வந்தவை;அந்த வரிகளுக்கும் வசனத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை;

"வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.

தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள். " (2.பேதுரு.Pe 1:20,21)

"வேதத்திலுள்ள தீர்க்கதரிசனங்கள்" என்று 20 ம் வசனத்தில் தெளிவாக உள்ளதால் தற்காலத்தில் உரைக்கப்படும் தீர்க்கதரிசனங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது தெளிவு;அடுத்து தரிசனம் என்பது வேறு, தீர்க்கதரிசனம் என்பது வேறு என்று அறிவோம்;

அப்படியானால் தற்கால ஊழியர்கள் தீர்க்கதரிசனம் என்று எப்படி சொல்லுகிறார்கள்? அதிலும் பெயர் சொல்லி அழைக்கும் காரியம் என்ன என்பீர்களாகில்,

"மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். "
(1.கொரிந்தியர்.Co 2:11)

- எனும் பவுலடிகளின் கூற்றுப்படி தீர்க்கதரிசனம் உரைக்கும் ஊழியர்கள் விசேஷித்த சக்தி எதையும் பெற்றிருக்கவில்லை;அவர்களு
க்கு சாதகமானது தங்களைப் போன்றவர்களின் நாகரீகம் தான்; எதிர்த்து கேள்வி கேட்க ஆளில்லை என்ற தைரியமும் எதையாவது செய்தாலே இன்று புகழடைய முடியும் என்ற பதைப்புமே அனைத்துக்கும் காரணம்;

மற்றபடி தீர்க்கதரிசனம் உரைக்க ஒரு மனிதன் மீது மெய்யான கரிசனையுடனும் மனதுருக்கத்துடனும் கூடிய அக்கறையே போதுமானது; மற்றவற்றை ஆவியானவர் பார்த்துக்கொள்ளுவார்;இப்படி ஆவியானவரையே சார்ந்திருந்து மேடையில் தன்னை வெறுமையாக்கி நிற்பவருக்குள் ஆவியானவர் இறங்கி செயல்படுவார்;

அப்போது, 'நாம் இன்னாருக்கு போன் செய்யணும் ' என்றோ ' இன்ன இடத்துக்கு போகணும் ' என்றோ மனதின் எந்த இடத்திலிருந்து சிந்தித்து செயல்படுகிறோமோ அதற்கு சற்று மேற்புரத்திலிருந்து கட்டளைகள் வெளிப்படும்;

அந்த நேரம் ஊழியரின் கண்கள் மூடியிருக்கும்;
ஏறக்குறைய சுயநினைவிழந்தவரைப் போல இருப்பார்;
தொட‌ர்ந்து எச்சரிப்பாகவோ ஆலோசனையாகவோ ஆறுதலாகவோ சுகத்துக்காக சாத்தானின் கட்டுகளை சபித்தும் தொடர்ந்து தீர்க்கதரிசனம் வெளிப்படும்;தேவைப்பட்டால் சில பெயர்கள் உரைக்கப்படும்;

சம்பந்தப்பட்ட பெயருள்ளவர் அங்கே இல்லாமலும் இருக்கலாம்;இருந்தும் தன்னை மறைத்துக்கொண்டும் இருக்கலாம்;சொல்லப்படும் தீர்க்கதரிசனம் பெரும்பாலும் பொதுவானதாக அன்றாட வாழ்க்கை சம்பந்தமானதாக இருந்தால் அது பெரும்பாலும் ஊழியரின் சொந்த முயற்சியினால் தேவ பிரசன்னத்தில் உரைக்கப்பட்ட ஆலோசனையாக இருக்கும்;அது தவறல்ல;

ஏனெனில் அதனை உற்று நோக்கினால் கண்களைத் திறந்து பேசும் பிரசங்கம் போலவே இருக்கும்; கண்களை மூடி சொன்னால் தீர்க்கதரிசனம் என்றாகிறது; எந்த ஒரு செய்தியையுமே "கர்த்தர் சொல்லுகிறார்" என்ற அதிகாரத்துடன் சொல்வதும் தவறில்லை; ஏனெனில் சொல்லப்படும் அனைத்துமே வேத வார்த்தைகளே; அதிலிருந்து சொல்லாதது கர்த்தருடைய வார்த்தைகளே அல்ல‌;

(தொடரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard