Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வலை மலர் பதிவு


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: வலை மலர் பதிவு
Permalink  
 


// எங்கள் பகுதியில் ஒரு "பெந்தாகோஷ்தே" சபை புதிதாக ஆரம்பிக்கப்பட்டது //

சிலருக்கு பிழைதிருத்தினாலோ குறைசொன்னாலோ அது ஏற்புடையதாக இல்லை;மாறாக ' எது சரி ' என்று சொல்லவேண்டும் என்கிறார்கள்;எந்த மடையனும் காரணமில்லாமல் புலம்பமாட்டான்;' கேட்டால் சொல்லலாமே ' என்று சிலநேரமும், ' சொன்னாலும் கேட்கவா போகிறார்கள் ' என்று சிலநேரம் சலிப்பிலும் இருக்கக்கூடும்;நல்லவர்கள் நாலும் அறிந்தவர்கள் சிறியோர் தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டு நல்லபுத்தி சொல்லித்தரலாமே..!

இதோ மேற்கண்ட வாக்கியமானது ஒரு முன்னணி வலை பதிவர் கிறித்தவத்துக்கென தனி திரட்டி உருவாக்க கடுமையாக உழைப்பவர் பதித்தது;அதில் "பெந்தெகொஸ்தே" எனும் வேத வார்த்தையை எப்படி குத்திக் கிழித்திருக்கிறார் என்று பாருங்கள்; இதற்குக் காரணம் அசிரத்தை மட்டுமே; சற்று முயற்சித்தால் இந்த பிழைகளைத் தவிர்க்கமுடியும்;

இதோ இன்னொரு அர்த்தப்பிழை; எழுத்துப்பிழையானது அர்த்தப் பிழையானால் பிரளயமே வரும் என்பது புரியாத இவர்களெல்லாம் தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பில் கோளாறு என்று சொல்ல என்ன தகுதியிருக்கும்? இதனைச் சுட்டிக்காட்டினால் தமிழ் பண்டிதர் என கிண்டல் அடிப்பார்கள்;

தவறு: இதை  கெட்ட எனக்கு ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்ட பரிசேயன் ஆயக்காரன் உவமைதான் நியாபகத்துக்கு வந்தது.

சரி: இதை கேட்ட எனக்கு ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்ட பரிசேயன் ஆயக்காரன் உவமை தான் ஞாபகத்துக்கு வந்தது.

"எது பெருமை" எனும் தலைப்பிலுள்ள இந்த எழுத்துப் பிழையை சுட்டிக்காட்டியதால் நானும் பெருமைக்குரியவன் ஆகிவிட்டேன்..!

அடுத்து "மூல" வியாதி முற்றிய நிலையிலுள்ள மற்றொரு தளத்தில் வரும் எழுத்துப் பிழைகளுக்கு அளவே இல்லை; கேட்டால், 'எனக்கு தமிழே தெரியாது ' என்பார்; தமிழே தெரியாத ஆளுக்கு தமிழ் வேதாகமத்தில் குறைகண்டுபிடிப்பது தான் பொழுதுபோக்கு... நல்ல கூத்து..!

// சாவாமையுள்ள தேவன் சிலுவை தூக்கி மரித்தார் என்கிற ஒரு பெரிய வஞ்சகத்தை சாத்தான் கொண்டு வந்திருக்கிறான், குழப்பத்தை கொண்டு வராத தேவனை பார்த்து குழம்பி நிற்கிறது ஒரு பெரிய "திரித்துவ" கும்பள்!! //


இயேசுவானவர் தேவகுமாரனாகவோ தேவனாகவோ மரிக்கவில்லை;அவர் சாதாரண மனிதனே என்பதைச் சொல்லும் மேற்கண்ட வரிகளில் "கும்பல்" என்பதை "கும்பள்" என்று எழுதியிருக்கிறார்.

எழுத்துப் பிழையைத் தவிர்க்க ஒரு எளிமையான ஆலோசனை, எழுதியதை மீண்டும் ஒருமுறை வாசித்துப் பார்க்கவேண்டும்; எழுத்து
ப் பிழைகளை சிரமம் பாராது உடனுக்குடன் திருத்தவேண்டும்; எழுத்துப் பிழையும் அறியப்படாவிட்டால் வாசிப்பில் பிழையிருக்கும்;அதையும் நிதானமான பயிற்சியின் மூலம் சரிசெய்வது மிகவும் எளிது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஆலோசனைக்கு நன்றிகள்,நண்பரே;ஆனாலும் அதில் நமது தளத்தினை இணைத்து சில நாட்களாகிறது;இதோ அந்த தொடுப்பு.
http://cthiratti.blogspot.com/p/chillsam.html


எல்லாம் சரி, தங்களைக் குறித்த அறிமுகத்தை இன்னும் பதிவுசெய்ய மறுக்கிறீர்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன்; எனக்கு தனிமடலாகக் கூட அதனைத் தெரிவிக்கலாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

அன்புள்ள தள நிர்வாகி அவர்களுக்கு,

தமிழ் கிருஸ்டியன்ஸ் தளத்திலிருந்து

//சிறு வேண்டுகோள் அன்பு சகோதரர் சில்சாம், சுந்தர் ஆகியோரது வலைமலர்கள் மிக நல்ல பதிவுகளைக் கொண்டு இருந்தன, அவைகளை அதிவிரைவுத் திரட்டி பகுதியில் இனைக்க அந்த வலை மலர்களைத் தேடிய போது அவைகள் கிடைக்கப் பெறவில்லை தயவு செய்து அந்த வலைமலர்களின் நிரலியைத் தருவார்களானால் அவற்றையும் இனைக்க வாஞ்சையாய் இருக்கிறேன்.//

உங்கள் வலை மலரை இதில் பதிவு செய்யலாமே. அதிகம் பேர் இந்த வலை மலரை பார்க்க. கருத்துக்களை தெரிவிக்க கூடுமே.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard