//எடுத்துக்காட்டாக, தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்றால் அதன் பின்னும் அவரில் இருக்கும் அன்பை தான் அவர் எங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்!!//
இப்ப டெல்லியில் குண்டு வெடித்தது. இதில் என்ன நன்மையை, தேவ அன்பைப் பார்க்கிறீர்கள்?
பிசாசு இன்னும் பூமியில் கிரியை செய்யும்படி அனுமதித்திருக்கிறார். அதற்காக பிசாசு செய்யும் தீமைகளையெல்லாம் ஏன் ஆண்டவரே செய்கிறார் என்பது போல் சொல்கிறீர்கள்?
அவர் நியாயத்தீர்ப்புகளை(பஞ்சம், பட்டயம், கொள்ளை நோய்) அனுப்பும் தேவன் என்பது தெரிந்த விஷயம்தானே!
இன்னொருத்தன் இருக்கிறான்.திருடன். திருடவும், கொல்லவும், அழிக்கவுமேயன்றி வேறு எதற்கும் வரான்.பொல்லாத ஆவிகள் இருக்கிறது. அவை மனிதர்களை வ்ருத்தப்படுத்துகின்றது. அப்படிப்பட்ட வசனங்கள் எல்லாம் கண்ணில் பட வில்லையா? இதான் உங்க பிரச்சினை. எந்த விஷயத்திலும் வேதத்தை முழுமையாக பார்ப்பதில்லை. ரே ஸ்மித் சொன்ன 4 வசனத்தை மட்டுமே வைத்துக் கொண்டு குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறீர்கள்!
சத்தியத்தைத் தேடிக்கொண்டிருப்போர் தளத்திலிருந்து நான் பேடியைப் போல எனது பதிவுகளையெல்லாம் நீக்கிவிட்டு ஓடியதாக என்னைப் பரியாசம் செய்தார்கள்; நான் விலகுவதற்குக் காரணமாக இருந்த விவாதப்பகுதியை மீண்டும் காணும் வாய்ப்பை திரு.அன்பு அவர்களால் இன்று பெற்றேன்; அந்த விவாதத்தின் போது நானும் சுந்தரும் (raaj) இணக்கமாக இருக்கிறோம்; எங்கள் இருவரையுமே (மேசியாவின்) எதிரிகள் ஒருசேர தாக்குகிறார்கள்; பிறிதொரு சமயத்தில் அவருக்கு ஆதரவு தருவதுபோல மாயம் செய்து என்னையும் அவரையும் பிரிக்கிறார்கள்;
இன்றும் அதேபோன்ற சூழ்நிலையை யௌவன ஜனம் தளத்தில் உருவாக்கியிருக்கிறார்கள்; நமது அருமை நண்பர் கோல்வின் அவர்களை உச்சி நுகர்ந்து ஆரத்தி எடுத்து வாழ்த்தி மகிழுவதெல்லாம் உள்நோக்கத்துடன் கூடியதாகும்; எனது காயங்களைக் கிளறும் பதிவை என்னுடைய கவனத்துக்குக் கொண்டு வந்தமைக்காக திரு.அன்பு அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.
சத்தியத்தை தேடிக்கொண்டிருப்போர் தளத்திலிருந்து எடுத்து பதிக்கப்பட்டுள்ள இந்த திரியிலிருந்து நீக்கப்பட்ட என்னுடைய பதிவுகள் இங்கே நம்முடைய யௌவன ஜனம் தளத்தில் ஒருவரி கூட மாற்றப்படாமல் அப்படியே இருப்பதைக் காணலாம்.
"... மனுப்புத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார்." பிர 1:13
"... ஒரு பாத்திரத்தை கனவீனமான காரியத்துக்குப் பண்ணுகிறதற்கு அவனுக்கு அதிகாரமில்லையோ?" ரோம 9:18 முதல் 25
"... நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகாசங்காரத்தையும் வரப்பண்ணுவேன்." எரே 4:6
"... நான் அவர்கள் மேல் ... தீங்கை வரப்பண்ணுவேன்." எரே 6:19
" ... அப்பொழுது அது(பொய்யின் ஆவி), நான் போய் அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்(கர்த்தர்):... போய் அப்படிச் செய் என்றார்." 1இராஜா 22:22
"... இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்..." எரே18:11
"கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் ப்யப்படாதபடிக்கு கடினப்படுத்துவானேன்?..." ஏசா 63:17
"...இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்...." யோசு 23:16
"... கர்த்தருடைய செயல் இல்லமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?" ஆமோஸ் 3:6
" சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்.... இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்த்ரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் .... கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு15:2,3.
நடக்கின்ற காரியங்களுக்கு தேவன் பொறுப்பல்ல என்று வாதிடுவதும் துருபதேசம்தான். ஆனால் தேவன் இவற்றையெல்லாம் செய்வது ஒரு உன்னத நோக்கத்துக்குத்தான் என்று அறியவேண்டும்!
உலகத்தில் நடக்கும் காரியங்களுக்கு தேவன் பொறுப்பல்ல, சாத்தானே தேவனை மிஞ்சி அவருக்கு எதிராக தீமையைக் கொண்டுவந்து தேவனுடைய திட்டங்களை அவமாக்குகிறான் என்று போதிக்கும் துர் உபதேசக்காரர்கள் இந்தத் திரியைக் குறித்து வாயடைத்துப்போயிருப்பது ஏனோ? இருபுறமும் கருக்குள்ள வசனங்கள் உருவக்குத்துகிறதோ?
தேவனை இந்தக் 'கெட்டபெயரில்' இருந்து காப்பாற்ற முயலும் ஊழியர்கள் மறைமுகமாக தேவனை உலகில் நடக்கும் தீமைகளைப் பார்த்து வேதனைப் படுபவராக சித்தரிக்கிறார்கள். இந்த எல்லாத் தீமைகளுக்கும் முடிவாக பூரணமாக நீதி வாசம் செய்யும் ஒரு உலகத்தை அவர் வாக்களித்திருக்கிறார். அது அவருடைய பொறுப்பு. அதை அவர் நிச்சயம் நிறைவேற்றுவார்.
ஒருவரும் கெட்டுப்போவது (செத்துப்போவது) அவருடைய சித்தமல்ல.
தனியே தளம் நடத்தும் பரிசுத்தர்கள் இந்த பகுதியை மட்டும் கண்டும் காணாம்லும் இருப்பதேனோ? அடிக்கடி இவர்களோடு உறவாடும் இவர்களது 'தேவன்' இந்த வசனங்களைக் குறித்து ஏன் ஒன்றுமே வெளிப்படுத்துவதில்லை?
இந்த வசனங்கள் பொய்யா?
இடைச்செருகலா?
அல்லது தேவனே 'தெரியாமல்' சொல்லிவிட்டாரா? தேவதிட்டத்தின் மகத்துவமறியாத மரமண்டைகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகிறது.....
இந்த பகுதியை மாத்திரமா!? மரணத்தை குறித்து தெளிவாக இருக்கும் பகுதியை கூட விவாதிப்பதில்லையே!! தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்று தெரிந்தால் பிறர் என்ன சொல்லுவார்களோ என்று இவர்கள் தேவனுக்கு நல்ல பெயர் சம்பதித்துக்கொடுக்கிறவர்கள் என்று தங்களை நினைத்துக்கொண்டிருக்கிரார்கள் போல்!! இத்துனை தெளிவான வசனங்கள் இருந்தாலும், இதை எல்லாம் வாசித்திருந்தாலும், தேவன் தீமையை அனுமதிக்க மாட்டார், அல்லது தீமையை உண்டுப்பண்ணமாட்டார் என்று விவாதிப்பது முட்டாள்த்தனம். இருக்கும் வசனங்களை விட்டுவிட்டு, இடைச்செருகலை நம்பி ஊழியத்தை (பிழைப்பை) நடத்திக்கொண்டிருக்கும் கூட்டத்தாருக்கு இந்த வசனங்கள் எல்லாம் புரியாது. அவர்கள் தங்களுக்குள் இருக்கும் யோசனைகளையும், யோசனைகளால் வரும் கணவுகளை தான் தேவ ஆலோசனை என்றும் தேவ வெளிப்பாடு என்றும் பிதற்றுகிறார்கள், என்ன செய்வது!!
அடுத்தவன் "அந்த" நிலைக்கு ஏறிவர எத்தனை மாதங்களாகும் என்றே தெரியவில்லையே? பிப்ரவரி 4ம் தேதி பதித்த பதிவு. 6 மாதங்களாகிவிட்டது இன்னும் ஒரு ஊழியனுக்கும் பதிலளிக்கத் துப்பில்லை.
இவர்கள்தான் கடவுளையே 'கெட்ட' பெயரிலிருந்து காப்பாற்ற முயற்சிப்பவர்களாயிற்றே! வசனத்திற்கு பதில் வசனம் மாத்திரமே.
அவதூறுகளுக்கு அஞ்சியல்ல, சரக்கு இல்லை என்று ஒதுங்குகிறார்கள்.
சகோதரரே நாங்கள் எதை சொன்னாலும் ஏற்றுக்கொள்ள போவது இல்லை! உங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறீர்கள் நல்லது. இப்படி ஒருவரை எழுப்பியிருப்பதும் ஒருவேளை தேவனின் சித்தமாக இருக்கலாம்!
ஆகினும் தங்களின் வார்த்தைகள் "பன்றிகள் வந்த மூக்கை நுழைக்கிறது" போன்ற மிக மோசமானதும் தெருவில் அலையும் ஒரு சாதாரண மனிதன் பேசுவது போலவும் இருக்கும் பட்சத்தில் இங்கு முதலில் மூக்கை நுழைப்பதே ஒரு தவறான செயல் ஆகும்.
ஆகினும் சகோதரர் சில்சாம் சொல்வதுபோல் தயவுசெய்து கொக்கரிக்க வேண்டாம் அது ஆபத்தானது என்பதை கருத்தில் கொள்க.
தீமை என்பது ஒருவேளை தேவனால் உண்டாயிருந்தாலும் தீமைகளுக்கு பொறுப்புதாரி தேவனல்ல என்பதை, கீழ்க்கண்ட தொடுப்பில் எனக்குதெரிந்தவரை உதாரணத்துடன் எழுதி யுள்ளேன் விரும்பினால் படித்து பாருங்கள்.
வேத வசனத்திற்கு விளக்கமளிக்காமல் ஏதேதோ பிதற்றுவதால் நீங்கள் சொல்வது நிரூபணமாகாது. வசனத்துக்கு விளககம் தேவை. மூக்கை நுழைக்க நாங்கள் சொல்லவில்லை. ஆயிரம் முறை துரத்தியடித்தாலும் மீண்டும் மீண்டும் எங்கள் கேள்விகளுக்கு உங்கள் தளங்களில் பதிலளிக்க முயன்று தோற்றுக்கொண்டிருப்பது வாசகர் அறிந்ததே!
தேவனைக் காப்பாற்றும் தங்களது முயற்சி எத்ததை அபத்தமானது என்று வாசகர்கள் உணருவார்கள்.
சாத்தானை தேவனைவிட பராக்கிரம சாலியாக, கோடானு கோடி பேரை நரகத்துக்கு அழைத்துச்செல்லும் அவனுடைய குறிகோளை நிறைவேற்றும் வெற்றி வீரனாக சித்தரித்தும், அனைத்தும் அறிந்த தேவனை, எல்லாம் கூடும் என்ற தேவனை ஜனங்களைக் காப்பாற்ற முடியாத ஒரு கோழையாக சித்தரிக்கும் நீங்கள்தான் தேவதூஷணம் செய்கிறீர்கள் என்பதை தளத்துக்குவரும் சிறு பிள்ளை கூட புரிந்து கொள்ளும். அதைவிட மஹா பயங்கரமான கேலிக்கூத்து இந்த ஜனங்களை ரட்ச்சிக்க தேவன் உங்களைப் போன்ற அரைநேர, முழுநேர காமெடியன்களைப் பயன்படுத்துகிறார் என்று நம்பவைக்கும் முயற்சிதான்.
"இவனே பரலோகம் போவது சந்தேகமாம் இதில் இவன் மூலமாய் அனேகரை தேவன் பரலோகத்துக்கு தகுதியாக்குகிறாராம்"
மரணம் பற்றி தெளிவாக விளக்கமுடியாத ஜென்மங்கள் நித்திய ஜீவன் பற்றி வாதாட தகுதியில்லாத தறுதலைகளே.
இந்தத் தளத்தில் உங்களுக்கு வேலையில்லை; உங்களை நம்பும் முட்டாள்களுக்குத்தான் தனியே தளம் நடத்தி உங்கள் "பரிசுத்தத்துவத்தை" காண்பிக்கிறீர்களே.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.....
-- Edited by soulsolution on Wednesday 4th of August 2010 10:47:01 PM
//வசனத்துக்கு விளக்கம் உண்டு;விதண்டாவாதத்துக்கு விளக்கமில்லை. பன்றிக்கு முன் முத்தைப் போடுவதும் பிள்ளைகளின் அப்பத்தை நாய்களுக்குப் போடுவதும் எங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை//
வசனத்துக்குத்தான் விளக்கம் கேட்கிறோமே தவிர இங்கு எந்த ஒரு விதண்டாவாதமுமில்லை. நான் பதித்த ஒரு வசனத்துக்காவது உங்களிடம் பதில் உள்ளதா?
முட்டாள்தனமாக திசைதிருப்ப வேண்டாம். இந்தப் பதிவில் தெளிவாக பதித்துள்ள வசனங்கள் உங்களுக்குப் புரியவில்லையா? அல்லது புரியாதது போல பாசாங்கு செய்கிறீர்களா என்றே தெரியவில்லை.
இந்தத் தளத்தில் வசனத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கப்படும். வசனத்தைப் புரட்டி சொந்த ஆதாயம் தேட முயலும் எவனையும் சும்மா விட்டு வைக்க மாட்டோம்: வேத வசனமில்லாமல் அறிவுகெட்டதனமாக ஏதேதோ பிதற்றி உங்களை தலைசிறந்த முட்டாள்கள் என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டாம்.
பைபிளை ஆராய் தலைவா? சும்மா சரக்கில்லாமல் கோபித்து எந்த பிரயோஜனமுமில்லை. உன் சொந்த சரக்கெல்லாம் வேதம் அறியாத, உன்னை நம்பும் அப்பாவி 'சாதாரண விசுவாசிகளிடத்தில்' வைத்து, அவர்களை வைத்து பிழைப்பு நடத்து. இந்தத் தளத்தில் ஆர்வம் காட்டும் எவரும் வேதத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளும் நோக்கத்தில் இருப்பதால் உன் போன்ற 'புரூடா' பார்டிகளை துச்சமாக எண்ணுவார்கள்!
வசனம் நைனா, வசனம் பதி!
சும்மா பொலம்பி பிரயோஜனமில்லை!!!
வசனத்துக்கு வசனத்தின் மூலம் பதிலளித்து நீ பன்றியில்லை என்று நிரூபி!!!
-- Edited by soulsolution on Wednesday 4th of August 2010 10:41:11 PM
__________________
soulsolution wrote:
மரணம் பற்றி தெளிவாக விளக்கமுடியாத ஜென்மங்கள் நித்திய ஜீவன் பற்றி வாதாட தகுதியில்லாத தறுதலைகளே.
இந்தத் தளத்தில் உங்களுக்கு வேலையில்லை; உங்களை நம்பும் முட்டாள்களுக்குத்தான் தனியே தளம் நடத்தி உங்கள் "பரிசுத்தத்துவத்தை" காண்பிக்கிறீர்களே.
சகோதரரே உம்முடைய வார்த்தைகள் ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்று சிந்திக்க தோன்றினாலும், உங்களில் எக்காள பேச்சும் அன்பற்ற நிலையும் அடுத்தவரை கேலியாகவும் அசிக்கமாகவும் விமர்சிக்கும் நிலையே, நீங்கள் தேவனின் அன்பையும், தேவனையும் அறியவேண்டிய விதத்தில் அறியவில்லை என்பதை பறை சாற்றுகிறது.
I யோவான் 4:8அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன்அன்பாகவே இருக்கிறார்.
இயேசு ஒரு தேவகுமாரன் அவர் பரிசேயரை சாடினார்! அனால் மனிதர்களாகிய நாம் எந்த சூழ்நிலையிலும் பிறரோடு அன்பாகவே இருக்க வாஞ்சிக்க வேண்டும்.
யோவான் 5:42உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
நிச்சயம் எனக்கு இங்கே வேலை இல்லை, மேலும் நான் சகோ. இளங்கோவுக்காகத்தான் இங்கு பதிவுகளை தந்தேநேயன்றி உம்போன்ற ஆட்கள் இங்கு இருப்பார்கள் என்று அறிந்திருந்தால் ஒரு பதிவைகூட தந்திருக்க மாட்டேன்.
எனக்கு தெரிந்து நாய் திருடர்களை பார்த்து தான் குரைக்கும்!! நாங்கள் அப்படி பட்ட நாய்களாபக இருக்க தான் நினைக்கிறோம். உங்களையே (சுந்தரையும் சேர்த்துக்கிடீங்க போல!!) மலையாக என்னுவதை பாராட்டுகிறோம், ஆனால் உங்கள் ஊர் நாய்கள் உங்களை பார்க்த்து குரைக்கிறது என்பது வருத்தம் அளிக்கிறது!! நாங்கள் நாய்களாகவே இருந்து விட்டும் போகிறோம், தொடர்ந்து திருடர்களை பார்த்து குரைக்கும் வேலையை தொடர்வோமே!! எங்கள் தளத்தில் இப்பவும் என்னிக்கை என்பது முக்கியம் இல்லை, இயேசு கிறிச்து 12 சீஷர்களை மாத்திரம் தான் வைத்திருந்தார்!!. அன்பை குறித்து சுந்தர் பேசுவது சற்று ஆச்சரியமாக தான் இருக்கிறது! தேவன் அநேகரை நித்தியத்திற்கும் அவியாத அக்கினியில் போட்டு விடுவார் என்று தாய் திருச்சபை (கத்தோலிக்கர்கள்) சொல்லிக்கொடுத்ததை சினிமா சாயம் பூசி பேசி வருகிறவர்கள் அன்பை குறித்து பேசவே தகுதி இல்லை. தேவ அன்பு உள்ளவன் வெளி வேஷக்காரனாக இருக்க முடியாது. ஐயோ எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது எனக்கு விருப்பம் தான், ஆனால் தேவன் அப்படி இல்லை என்பவன் தேவ தூஷனம் செய்கிறவன். அதை தான் சகோ சுந்தர் செய்து வருகிறார்!! மாற்று மார்க்கத்தார் நிச்சயமாக இந்த தளத்தில் வந்தால் அவர்கள் மனம் புன்படும்படி எதுவும் நாங்கள் எழுதுவது இல்லை என்பது அவர்கள் புரிந்துக்கொள்வார்கள், அது எங்கள் நோக்கமும் இல்லை. இந்த தளத்தில் நோக்கம், தேவன் தரும் இலவச இரட்சிப்பு அனைவருக்கும் என்பதை சொல்லவும், தேவன் அன்புள்ளவர் என்று சொல்லவும், கிறிஸ்துவ மதத்தில் "மதம்" பிடித்திருக்கும் ஓநாய்களை வெளிப்படுத்தவும், கள்ள உபதேசத்தை விதைக்கும் திருடர்களையும் அதினால் வரும் களைகளை சுட்டி காண்பிப்பதே! யாவரும் இரட்சிக்கப்படவேண்டும் என்பது தேவ சித்த்மாக இருப்பதை போல தான் எங்கள் சுவிசேஷம். வேதத்தில் உள்ள வார்த்தைகலையே நம்பாதவர்கள் நாங்கள் சொல்லுவதையா நம்புவார்கள்!! ஆளாளுக்கு ஒரு தேவனை வைத்துக்கொண்டு பேசி வருபவர்களிடம் எப்படி சொன்னால் என்ன, புரியவ போகிறது!!
வசனத்திற்கு விளக்கம்தராமல் டாபிக்கை மாற்றி தளத்தைவிட்டே கோபித்துக்கொண்டு ஓடுவதுபோன்ற 'சீன்' காட்டினால் வாசகர்களுக்குப் புரியாதென்று எண்ண வேண்டாம். யாரும் உங்களைப் போன்ற அறிவாளிகளை வருந்தி தளத்துக்கு அழைக்கவில்லை. போய் உங்கள் பித்தலாட்ட 'ஊழியத்தை' தொடருங்கள். முடிவு வரை மாய்மாலத்தில் இருந்து மற்றவர்களையும் உங்கள் பரிசுத்த வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.
வசனத்துக்கு விள்க்கமளிக்க வக்கில்லை வாய் மட்டும் காதளவு நீளுகிறது. கோபம் கொப்பளிக்கிறது. சத்திய வசனம் இப்படித்தான் ஊடுருவிக் கிழிக்கும். பிசாசின் பிள்ளைகள், பேய்த்தனத்துக்கு அடுத்தவைக்ளின் மேல்தான் வாஞ்சை கொள்வார்க்ள்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....
இனித் தவறியும் கூட இத்தளத்துக்கு வரவேண்டாம். நீ பிசாசின் பிள்ளை இல்லை என்று நிரூபிக்க வேண்டுமென்றால் வசனத்துக்கு வசனத்தின் மூலம் பதில் பதி. அதை மட்டும் விட்டுவிட்டு என்ன ஒரு ஆக்டிங். வசனத்தை மதிக்காத எவனுக்கும் நாங்கள் மதிப்பு கொடுப்பதில்லை. வீண்பேச்சு வேண்டாம்.
போய் உங்கள் சுரண்டித்தின்னும் வேலையைத் தொடருங்கள். Solution என்ற வார்த்தைக்கு "தீர்வு" என்ற ஒரு அர்த்தம் உண்டு என்பதைக்கூட அறியாத முட்டாள் போதகனிடம் மாட்டிக்கொண்ட ஆடுகளை நினைத்துத்தான் கவலையாக உள்ளது.
உம்மை ஆரம்பத்தில் எடைபோடத்தவறியதாலும், உம்முடைய காமெடிகள் எங்கள் தளத்துக்கு கொஞ்சம் 'என்டர்டெயின்மென்ட்' ஆக இருக்குமென்பதாலும்தான் நீர் 165 பதிவுகள் செய்ய நேர்ந்தது. உம்முடைய அபத்த பதிவுகளையும், அறிவுகெட்ட அனுபவங்களையும் அங்கீகரிக்கவில்லை என்பதை அறிக. இவற்றையெல்லாம் உம் முழுநேர காமெடி தளமான இறைவன் தளத்தில் வைத்துக்கொள்ளவும். கடைசி பதிவு பதித்து எங்கள் வயிற்றில் பால் வார்த்ததற்கு நன்றி.
உம்முடைய 165 பதிவுகளும் உமது முட்டாள்தனத்தை எங்களுக்கு இன்ஸ்டால்மென்டில் அறிவித்தன, அவ்வளவே. திருட்டுத்தனமாய் இத்தளத்தை நீர் விஸிட் அடிப்பீர். உமது தளத்தில் எங்களைப் பற்றி கேவலமாக எழுதுவீர் என்பதெல்லாம் நாங்கள் அறிவோம். கவலையே இல்லை. உம்முடைய முட்டாள்தனங்களின் அகல, ஆழ, உயரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி!
இந்தப்பதிவுக்கு விளக்கமளிக்கத் துப்பில்லாமல் இரண்டு ஊழியக்காரர்கள் துண்டைக் காணோம் துணியைக்காணோம் என்று ஓடியே போய்விட்டார்கள் என்பது இப்பகுதியை முழுவதும் படித்தவர்கள் அறிந்து கொள்வார்கள். வசனத்துக்கு பதிலளிக்காமல் விதண்டாவாதம் செய்பவர்களுக்கு சாட்டையடியாக சற்றுக் காரமாக வார்த்தைகளை உபயோகிப்பதில் தவறில்லை என்றே எண்ணுகிறேன். மாயக்காரனே, பிசாசின் மகனே, விரியன் பாம்புக்குட்டிகளெ என்று வேதத்திலும் அவ்வப்போது வசனத்தைப் புரட்டி பிழைப்பு நடத்தும் கூட்டத்தாரைக்குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
நடக்கும் எல்லா சம்பவங்களும் தேவனால் அனுமதிக்கப்பட்டவையே; அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று புற மார்க்கத்தார் இதைத் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது தேவனுடைய சித்தமில்லாமல் உலகில் ஏதாவது ஒரு காரியம் நடந்தால் அவர் தேவன் என்ற தகுதியை உடனே இழந்து விடுவார். சகலமும் தேவ சித்தம் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
பூமிக்கு வரப்போகும் கிறிஸ்துவின் ஆட்சியில் ஒருவர்கூட விடுபடாமல்(ஒருவனும் கெட்டுப்போகாமல்) நித்திய ஜீவனை அனுபவிக்கப்போகும் தேவதிட்டம் தேவ அன்பை வெளிப்படுத்துகிறதா அல்லது ஏதோ ஒரு சிறிய கூட்டத்தை பரலோகத்துக்கும் விட்டுப்போன கோடானு கோடி ஜனங்களை நரகம் என்று சொல்லக்கூடிய ஒரு கொடூரமான வேதனைக்கு ஒப்புக்கொடுக்கும் ஒரு மாபெரும் தோல்வியாளனாகச் சித்தரிக்கும் துர் உபதேசம் தேவ அன்பை விளக்குகிறதா என்பது தேவ அன்பில் இருக்கும் அனைவருக்கும் புரியும்.
-- Edited by soulsolution on Saturday 30th of April 2011 09:24:16 AM
இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதக் குழந்தையையும், தேவன் நேரடியாகப் படைத்தார் என்பது தவறான கொள்கையாகும். எப்படியெனில் வேதாகமம் மறுக்கிற கருத்தை இவர்கள் ஆதரிக்கின்றனர். அப்படி ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்ப்து உண்மையானால், பாவம், குழப்பம், அபூரணம் இவற்றுக்கெல்லாம் அவரே நேரடிக் காரணராகிவிடுவார். மாறாக "அவருடைய கிரியை உத்தமமானது" என்று வேதாகமம் விளம்புகிறது. (உபா 32:4). மனரீதியாகவும், உடல், ஒழுக்கரீதியாக குறைவுள்ள அங்ககீனங்களோ, பலவீனமோ, குறைபாடுள்ள எந்தப் பிறவியும் தேவனால் படைக்கப்பட்டதாய் இருக்க முடியாது. இவர்கள் பூரணமான ஆதாமின் விழுகைக்குப் பின்னால் பல காலமும், பல பாவங்களின் தொகுப்பினாலும் விபத்துகள் போல வந்து நேர்ந்த விபரீதப்பிறப்புகள். பரிபூரணமாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமை மட்டுமே தேவன் தனது பொறுப்பில் படைத்தார். தேவனே ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் பொறுப்பாளி என்பவர்கள், ஒவ்வொரு பிறவிக்கோளாருக்கும், அங்ககீனத்திற்கும், பைத்தியத்திற்கும் தேவனையே பொறுப்பாளியாக்குகிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து அங்கக் குறைபாடுகளையோ, புண்ணியமோ, பழியோ, கெட்ட பழக்கங்களையோ, நற்குணங்களையோ, திறமைகளையோ சுதந்தரித்துக் கொள்கிறார்கள் என்று வேதாகமும் அறிவியலும் சரியாக எடுத்துரைக்கின்றது.
இதை முன் கூட்டியே எதிர்பார்த்தேன். சந்தோஷ் சகோதரருக்கு வாழ்த்துகள். இது வேதத்தை புரிந்துகொள்ளும் முன்னேற்றத்தைச் சார்ந்த விஷயம். மேலும் சகலமும் தேவ சித்தம் என்ற வேதத்தின் நிலைப்பாட்டிற்கு இப்பதிவு எதிராக இருப்பதால் அப்போதைய இந்தப் பதிவு தவறென்று பொறுப்பேற்கிறேன். சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து அங்கக் குறைபாடுகளையோ, புண்ணியமோ, பழியோ, கெட்ட பழக்கங்களையோ, நற்குணங்களையோ, திறமைகளையோ சுதந்தரித்துக் கொள்கிறார்கள் என்று வேதாகமும் அறிவியலும் சரியாக எடுத்துரைக்கின்றது. என்றாலும் இவையனைத்தும் தேவனால் தீர்மானிக்கப்பட்டவையாகும்.
இதைப் புரிந்து கொள்ள அதிக நேரமும் வேத ஆராய்ச்சியும் தேவைப்பட்டது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தனியே தளம் நடத்தும் பரிசுத்தர்கள் இந்த பகுதியை மட்டும் கண்டும் காணாம்லும் இருப்பதேனோ? அடிக்கடி இவர்களோடு உறவாடும் இவர்களது 'தேவன்' இந்த வசனங்களைக் குறித்து ஏன் ஒன்றுமே வெளிப்படுத்துவதில்லை?
இந்த வசனங்கள் பொய்யா?
இடைச்செருகலா?
அல்லது தேவனே 'தெரியாமல்' சொல்லிவிட்டாரா? தேவதிட்டத்தின் மகத்துவமறியாத மரமண்டைகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்கப்போகிறது.....
உனக்குத் தெரிந்தால் உன் மட்டிலிரு; அடுத்தவன் அந்த நிலைக்கு முன்னேறி வரும் வரை பொறுத்திரு; அவசர குடுக்கையைப் போல உடுக்கையை ஆட்டாதே..!
// வசனத்திற்கு விளக்கம் இல்லை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி!//
வசனத்துக்கு விளக்கம் உண்டு;விதண்டாவாதத்துக்கு விளக்கமில்லை. பன்றிக்கு முன் முத்தைப் போடுவதும் பிள்ளைகளின் அப்பத்தை நாய்களுக்குப் போடுவதும் எங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை;
சாத்தானானவன் தான் செய்யும் துஷ்டத்தனங்களுக்கு ஆண்டவரைக் குற்றவாளியாக்குவதும் தேவஜனம் அவரை தூஷித்து விலகுவதும் ஆபத்தானதா அல்லது சாத்தான் எதையும் செய்ய இயலாதவன்;தேவனே தீமைகளையும் வரவிடுகிறார் என்று போதிப்பதால் வரும் தேவதூஷணம் ஆபத்தானதா..?
எது சத்தியம் என்று தங்களுக்கு அருளப்பட்ட வெளிச்சத்திலேயே தேடுங்கள்;ஒரு வேளை அடையமுடியாவிட்டால் காத்திருங்கள்..!
கோலியாத்தைப் போல கொக்கரிக்கவேண்டாம்..!
நண்பர் சுந்தர் அவர்களே, இளங்கோவுக்கும் ஆத்தும பசை(soulsolution)க்கும் வித்தியாசமிருப்பது போலத் தெரியவில்லை;
தாங்கள் மட்டுமே இந்த தளத்தில் 165 பதிவுகளைத் தந்திருக்கிறீர்கள்;ஒரு மூத்த உறுப்பினர் என்ற மரியாதை கூட இல்லாமல் தன்னை யாரும் பார்க்கவில்லை எதுவும் செய்யமுடியாது என்ற மமதையில் கண்டபடி சேற்றை அள்ளிவீசும் இவர்களுடன் சேர்ந்து எதையும் செய்யமுடியாது;
பிச்சைக்காரன்கூட இப்படித்தான் தாழ்மையாகக் கேட்பான், இல்லையென்றதும் தூஷிப்பான்;அவனுக்கும் இவனுக்கும் எந்த வித்தியாசமுமில்லை; 'யாகாவாராயினும் நாகாக்க' என்பதை பள்ளியில்தானே கற்றுத்தருவார்கள்; இவன் அங்கேயும் ஒழுங்காக இருந்திருக்கமாட்டான்;
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஓரவஞ்சனையுடன் செயல்படும் இளங்கோவுக்காக நான் பரிதாபப்படுகிறேன்;தன்னுடைய கருத்தை ஏற்காதவனை இப்படித்தான் தூஷிப்பேன் என்பவன் மஞ்சள் பத்திரிகையும் நீலப்படங்களையும் வெளியிட்டு சுய (இன்பம்..?) திருப்தியடைபவனைக் காட்டிலும் கொடூரமானவன்..!
விடுங்க நண்பரே... மலையப் பாத்து நாய் குரைக்குது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)