Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மீண்டும் ஏதேன்!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
மீண்டும் ஏதேன்!
Permalink  
 


இயேசுவை தொழுது கொள்ளாதவனிடத்தில் நரகத்தை பற்றி பேச விருப்பம் இல்லை ஏனென்றால் கடைசிவரை இயேசுவை தொழுதுகொள்ளாமல் இருந்தால் நேராக அவன் பார்க்கப்போகிற இடத்தை எதற்கு அறிமூகப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஆனாலும் சில காரியங்களை விளக்குவது நலம் என்று நினைத்ததால் எழுதுகிறேன்

//நரகத்தை குறித்தான பதிவுகளை நாங்கள் இந்த தளத்தில் பதிந்திருக்கிறோமே!! மாம்சமான யாவரும் தேவனின் இரட்சிப்பை காண்பார்கள் என்றால் அதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை!! 400 வருடங்கள் என்ன 4000 முன்னே வாழ்ந்தவர்கள் கூட இன்று பிரபலமாக போதிக்கப்பட்டு மிரட்டப்படும் அந்த "நரகம்" என்கிற கற்பனையான இடத்திற்கு போக முடியாது,//

இது பிசாசின் போதனை தான். இது உண்மை என்றால் பின் லேடனும் , ஹிட்லரும் முடிவிலே ரட்சிக்கபடுவார்கள் நான் எதற்கு வெட்டியாக சுவிசேஷம் அறிவிக்க வேண்டும்? பிசாசு இதன் பின்னே இருப்பது தெளிவாய் தெரிகிறது.

  • அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினைஅடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும்போவார்கள் என்றார்.(மத்தேயு 25:46)

  • அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள் (மத்தேயு 25:41)

  • குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றார். (யோவான் 3:36)

நரகம் இல்லை என்றால் இரண்டாம் மரணம் எதற்கு?

  • பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (வெளி 21:8)

  • மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். (வெளி 20:10)

  • ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான். (வெளி 20:15)

ஆயிரம் வருட அரசாட்சியில் எல்லாருமா பங்கு பெறுவார்கள்?


  • அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:4-6)


//பாரம்பரியத்தை சற்றே ஒதுக்கி வைத்து, அடடா உலகமே இதை தானே நம்பிக்கொண்டு இருக்கிறது, நான் மட்டும் எப்படி வேறு பட்டு இருக்க முடியும் என்று யோசிக்காமல் வசனத்தை தேவன் எழுதியதால் தேவனின் பார்வையில், தேவனின் ஞானத்தில், தான் வாசித்து புரிந்துக்கொள்ள வேண்டுமே அன்றி மனிதர்களின் செவிக்கு தினவான வார்த்தைகளால் அல்ல‌!!  நன்றி!!//

உன்னை விட வேதத்தை கரைத்து குடித்த பண்டிதர்கள் கிறிஸ்தவத்தில் உண்டு (நீங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல). எல்லா வசனத்தையும் அவன் இப்படி எழுதினான்,  யோவான் 1:1 ல் தேவனுக்கு முன்பாக "ஒரு" போட வேண்டும் என்று
பாரம்பரியத்தை போதிப்பது நிங்கள் தான். ரசலுடைய பாரம்பரியத்தை போதிப்பதும் நீங்கள் தான். வேதத்தை நன்கு அறிந்திருந்த நிகொதேமுவை பார்த்து இயேசு சொன்னார் "நீ மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தை காணமாட்டாய்" அது உங்களுக்கும் பொருந்தும்.

குறிப்பு: இதற்க்கு பதில் சொல்ல ஏதாவது மனித (ரசல்) போதனை வைத்து இருப்பார்கள்


-- Edited by John on Friday 11th of March 2011 09:13:46 AM

-- Edited by John on Friday 11th of March 2011 09:16:11 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

நரகம் இல்லை, ஆவியானவர் இல்லை, இயேசு தெய்வீகமானவர் இல்லை, இப்படி இல்லை, இல்லை, இல்லைகள் தான் இவர்களிடம். தங்களது ஆதங்கம் புரிகிறது. இவர்களை போல நான் மூல பாஷைகளை தேடிக்கொண்டிருக்கவுமில்லை, எனது விசுவாசம் "இயேசு மிகப்பெரிய இரட்சகர், நான் ஒரு மிகப்பெரிய பாவி, என் பாவங்களுக்கான பரிகார பலியாக தன்னைத்தானே ஒப்புக்கொடுத்து மீட்டுக்கொண்டார்" என்பது. திரியேக தேவனிடம் எனக்கு முழு விசுவாசம் உண்டு. கவலைப்படாதீர்கள் நான் நிச்சயம் விலை போய்விட மாட்டேன்.
இதற்காக என் மீது நிச்சயம் இவர்கள் பாய்வார்கள், அது பற்றி எனக்கு கவலையில்லை. ஏனெனில் 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதி கிறிஸ்தவ சபையில் இது போன்ற வேத புரட்டுகள் உண்டு என்பதை அறிவோம், சத்தியத்தை புரட்டுவதில் சலியாமலும் ஓயாமலும் ஈடுபடும் இவர்களை தான் தேவன் கவிழ்த்துபோட்டிருக்கிறார், மெய்விசுவாசத்தை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவ சபை தான் இன்றைக்கு விருட்சமாக படர்ந்திருக்கிறது. உலகளவில் இந்த சத்திய புரட்டர்களின் எண்ணிக்கையை கவனித்தாலே தெரியும், தேவன் யாரை விட்டுவைத்திருக்கிறார் யாரை கவிழ்த்துப்போட்டிருக்கிறார் என‌.
இவர்களிடம் வாதம் புரிவதும் வீண் என தீர்மானித்துவிட்டேன், இனி இவர்களது தளங்களுக்கு செல்லப்போவதுமில்லை, பதில் அளிக்கப்போவதுமில்லை.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Kovai@
நரகத்தை குறித்தான பதிவுகளை நாங்கள் இந்த தளத்தில் பதிந்திருக்கிறோமே!! மாம்சமான யாவரும் தேவனின் இரட்சிப்பை காண்பார்கள் என்றால் அதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை!! 400 வருடங்கள் என்ன 4000 முன்னே வாழ்ந்தவர்கள் கூட இன்று பிரபலமாக போதிக்கப்பட்டு மிரட்டப்படும் அந்த "நரகம்" என்கிற கற்பனையான இடத்திற்கு போக முடியாது, அப்படி ஒரு இடத்தை நம்மவர்கள் இருப்பதாக தங்கள் கணவுகளிலும், காட்சிகளிலும் பார்த்து வந்து அங்கே தங்களின் பாட்டி, தாத்தா, போன்றோர் எரிந்து கத்திக்கொண்டு இருப்பதாக சொல்லும் இவர்கள் வேத புரட்டர்கள்!! உயிர்த்தெழுதல் நடக்காத போது இது போன்று தங்களின் தாத்தா பாட்டியை பார்த்து வந்தேன் என்று சொல்லுபவர்கள் உயிர்த்தெழுதல் நடந்தாகிவிட்டது என்று போதிப்பதகா தானே அர்த்தம்!!

நண்பர் ஜோஸப்ஸ்நேகா அவர்களே, நீங்கள் சொல்லியிருக்கும் 2000 வருடங்களில் இருண்ட காலம் என்று ஒன்று இருந்தது, சுமார் 1200 வருடங்கள் வேதம் இருந்து இல்லமால் இருந்த காலம் அது, மனித போதனைகளினால் ஒரு சபை நடந்துக்கொண்டு இருந்தது, அதன் வழியாக வந்த மற்ற சபையாரும் அதே பாரம்பரியங்களை கற்றுக்கொண்டு பிறகு அந்த பாரம்பரியங்களை வைத்து வேதத்தை வாசிப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக இருப்பது போன்று தோன்றினாலும் உண்மை அப்படி அல்ல‌!!

பாரம்பரியத்தை சற்றே ஒதுக்கி வைத்து, அடடா உலகமே இதை தானே நம்பிக்கொண்டு இருக்கிறது, நான் மட்டும் எப்படி வேறு பட்டு இருக்க முடியும் என்று யோசிக்காமல் வசனத்தை தேவன் எழுதியதால் தேவனின் பார்வையில், தேவனின் ஞானத்தில், தான் வாசித்து புரிந்துக்கொள்ள வேண்டுமே அன்றி மனிதர்களின் செவிக்கு தினவான வார்த்தைகளால் அல்ல‌!!  நன்றி!!

Chillsam:-இதனை வாசிக்கும் தள நண்பர்களின் மனதில் இது தங்கள் விசுவாசத்துக்கு விரோதமானதாகத் தோன்றும் பட்சத்தில் உடனே இதைக் குறித்த தங்கள் கருத்தை இங்கே பதிக்கவேண்டுகிறேன்.

இதற்கு மேலும், 'நாம் கண்டும் காணாமல் விட்டுவிட்டால் தானே அடங்கிவிடும்' என்று நினைத்துக்கொண்டு ஒதுங்கிப்போனால் இன்றைக்கு நம்முடைய அருமை
நண்பர் ஜோசப் ஸ்னேகாவை வளைத்துப்போட பதிவிருப்பதைப் போலவே நம் ஒவ்வொருவரையும் நரித்தனமாகப் பழகிப் பாழாக்கிப் போடுவார்கள்.

இப்படியே நம்முடைய
திருச்சபை மூலஉபதேசத்தின் ஒவ்வொரு ஷரத்துக்கும் விரோதமாக திருச்சபையின்  ஆரோக்கியத்தைக் கெடுக்கும் விஷக்கிருமிகளாக இவர்கள் விளங்குகிறார்கள்.

இதனை நாம் உடனே தடுத்தாக வேண்டும்;அதற்கு நாம் செய்யவேண்டியதென்ன என்பதை அறிய தொடுப்பைத் தொடரவும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41657555&p=3


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

josephsneha@Kovai

// இந்தியாவில் ஏன் உலகத்துக்கு சுவிஷேஷம் அறிவிக்கப்பட்டு 2000 ஆண்டுகள் ஆகின்றன, அதில் தமிழ் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டு சற்றேறக்குறைய 400 வருடங்கள் ஆகின்றன, ஜொர்மன் மொழியில் அப்ப்டி இருந்தது, ஸ்வீடிஷ் மொழியில் இப்படி இருக்கிறது, ஆங்கில பிரதியில் இப்படி இருக்கிறது என தெரியாமலே பல தமிழக கிறிஸ்தவர்கள் 400 வருடங்களாக இயேசுவை தெய்வமாகவும் இரட்சகராக தொழுது வந்திருக்கின்றனர்.... பாவம் என்ன செய்ய, அவங்களுக்கெல்லாம் நரகம் தான் என சொல்வீர்கள் போல. அதுபோக 2000 வருடங்களாக ஆதி கிறிஸ்தவர்கள் ஜெர்மன் பைபிள் தெரியாமல் தான் சிங்கங்களுக்கும், பட்டயத்துக்கும் இரையானார்கள், என்னே பரிதாபம் போங்கள்.
//

அன்பான நண்பர் ஜோ அவர்களே,
போகாத இடம்போனால் வராத சொல் வரும் என்பார்கள்;இரும்பு அடிக்கிற இடத்தில் ஈ'க்கு என்ன வேலை என்றும் சொல்லுவார்கள்;முதலாம சங்கீதத்திலேயே "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும்.." என்பதை சிறுவயதிலேயே மனனம் செய்துவைத்திருக்கிறோம்.

இந்நிலையில் நீங்கள் அவர்களிடம் போய் நரகத்தைக் குறித்து பேசி அவமானப்பட வேண்டுமா? அவர்களுடைய போதனையின்படி நரகம் என்பதெல்லாம் கிடையாது;அது தவறாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது; கல்லறைக் குழியையே நாம் (திரித்துவவாதிகளின்..? ) தவறான உபதேசத்தின் காரணமாக நரகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால்
யெகோவா
மிகுந்த அன்புள்ளவர் அவர் யாரையும் அழிக்கப் போவதில்லை;ஒவ்வொருவரையும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் மீட்கப் போகிறார்;உங்கள் ஆட்கள் தான் ஹோண்டா அக்கார்டு காரில் பவனி வருவதற்காகவே வீணாக உலகமுழுவதும் ஜனங்களை டென்ஷன் பண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்;இயேசு என்ற ஒரே மனிதனின் பலியினால் அனைத்து பாவமும் முடிந்துபோனது;பாவத்தின் தண்டனை என்பது ஆதாமுக்கு தேவன் சொன்னவிதமாக நிறைவேறியே தீரும்;பாவத்துக்கான தண்டனை என்பது மரணிப்பதைத் தவிர வேறொன்றுமில்லை;பரலோகம் என்று ஒன்றுமில்லை;இந்த உலகமே பரலோகமாக மாறப்போகிறது;ஆத்துமா என்று ஒன்றுமில்லை;அது சரீரத்துடன் ஒட்டிய சிந்தனா சக்தி;அதுவும் மனிதன் மரித்தவுடனே மரித்துவிடும்;அதற்கு மீண்டும் ஆயிரம் வருட ஆட்சியில் உயிர்கொடுத்து கிறித்துவின் இராஜ்யத்தில் யெகோவா வாழச்செய்வார்;எனவே இந்த ஞானத்தைப் பெறும் வரை உங்களை சும்மா விடமாட்டார்கள்;எப்படி வசதி..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=33075156


soulsolution
மீண்டும் ஏதேன்!
193 நாடுகள் கோபன்ஹேகனில் கூடி பூமி வெப்பமாவதைத்தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவது ஒரு சாதாரண நிகழ்வாகத்தெரியலாம். ஆனால் வேதத்தை ஆராய்பவர்களுக்கு இது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தை நிரூபிக்கும் ஒரு செயல் என்பது தெரியும். ஆம் இந்த பூமி மீண்டும் ஏதேன் நிலைக்கு (முந்தின சீருக்கு) சீரமைக்கப்பட வேண்டும், அதனுடைய ஒரு கட்டம்தான் இந்த நிகழ்வாகும். வருகையின் வெளிச்சத்தில் இருள் என்ற அறியாமை விலகிக்கொண்டிருக்கிறது. எப்படி ஒரு மகத்தான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். தேவனுக்கே மகிமையுண்டாவதாக‌!


யெகோவா சாட்சிகள் பற்றிய தொடுப்பை ஏனய்ய்யா இங்கு வந்து கொடுக்கிறீர்? லூஸா நீர்?


Chilsam: 01:35:54 Dec 29, 2009
ஆமாண்டா,நான் லூஸு, நீ டைட்டு...
ஒன் க்ரூப் யாரு போட்ட குட்டி என்று கூட தெரியாமலா இங்க நான் வந்திருக்கேன்..?
இந்த உலகிலுள்ள மாசுகளை நீக்கிவிட்டு மாபெரும் தூய்மையான உலகை அனைத்து தேசங்களும் இணைந்து உருவாக்கிவிடும் என நம்பிக்கொண்டிருக்கும் நீ லூஸா...அல்லது நான்..?

வசனத்துக்கு மாறாக நீ எதைச் சொன்னாலும் ஒனக்குக் கேடு காலம் நெருங்கிடுச்சின்னு எழுதி வச்சுக்கோ..!

"ஏஞ்சல்டிவி"காரன் இப்படித் தான் பரலோகத்தைப் பார்க்கும் டெலஸ்கோப்பை கண்டுபிடிச்சிட்டாங்க என்று புருடா விட்டான்...அதுக்கு
ம் இதுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை.

ஒனக்கு விளக்கம் கொடுக்கக்கூட மனசு வரமாட்டேங்குது...நீ இப்படியே இருக்கறதுதான் எனக்கு நல்லாயிருக்கு..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard