Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்மஸ் அதிர்ச்சிகள்!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கிறிஸ்மஸ் அதிர்ச்சிகள்!
Permalink  
 


soulsolution:
"அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே இடமில்லாதைருந்த படியினால், பிள்ளையைத் துணிகளிலே சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்" லூக்2:7

"அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு...." மத்2:11

மாட்டுத்தொழுவம் என்ற வார்த்தையே இங்கில்லாத போது இயேசு கிறிஸ்து மாட்டுத்தொழுவத்தில்தான் பிறந்தார் என்று நம்பிக்கொண்டிருக்கிறது கிறிஸ்தவம், மேலும் "கந்தைத்துணியோ கர்த்தருக்கு" என்று பாடல் வேறு. ஒரு யூதஸ்த்ரீ தனது முதல் பிரசவத்துக்கு எப்படி முன்னேற்பாடாக இருந்திருப்பாள் என்று யாருமே யோசிப்பதில்லை. கந்தைத்துணி என்ற வார்த்தையே இல்லை.

சாஸ்திரிகள் வந்து பார்த்தது வீட்டில், நட்சத்திரம் வழிகாட்டியது வீட்டுக்கு....

யோசிக்கலாமே?

MyReply: 01:10:16 Dec 22, 2009

"அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்.

இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்" (லூக்கா.2:7,11,12)

இது தூதனால் மேய்ப்பருக்கு அறிவிக்கப்பட்டதான நற்செய்தி; இதனைத் தேர்ந்த கல்வியாளரும் கிரேக்கருமான லூக்கா பதிவு செய்துள்ளார்;

"முன்னணையிலே" எனும் வார்த்தையைத் தான் மாட்டுத்தொழுவம் என்கிறோம்; ஆங்கிலத்தில் "manger" எனப்படும் இதன் அர்த்தம் தீவனத்தொட்டி எனக் கொள்ளலாம்;

இது சம்பந்தமாக இரண்டு வித புரிதல் உண்டு; ஒன்று,கால்நடை இளைப்பாறுமிடம்; இரண்டு தீவனத் தொட்டி;

யூகமாக இவற்றைக் குறிப்பிடக் காரணம் காலமும் கலாச்சாரமும் மொழி சம்பந்தமான தடைகளுமே; ஆனாலும் சூழ்நிலை நமக்கு ஓரளவு தெரியவருவதினால் சில‌ உண்மைகளை எளிதாக அறியமுடிகிறது;


soulsolution:
சத்திரத்தில் தான் இவ்வித தொழுவம் (Manger) இருந்து வந்தது. வழிப்போக்கர்கள் (Travellers) இந்த சத்திரத்தில் தங்கும் போது தாங்கள் கொண்டு வரும் குதிரைகள், மற்றும் மாடுகளுக்கு தீவனம் காட்டும் படி கட்டி வைக்கும் இடம் தான் வேதத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த இடமாகும். மற்றபடி யூதர்களின் மாடுகள் தங்கும் இடம் அல்ல அது. ஆகவே தான் தூதர்கள் மூலமாக முன்னையில் கிடக்கும் குழந்தை பற்றி கேள்விப்பட்ட அந்த இடையர்கள் சரியாக சத்திரத்தில் உள்ள தொழுவத்தில் வந்து பார்க்க முடிந்தது. இலாவிட்டால், பெத்லெஹேமில் உள்ள எத்துனை மாட்டு தொழுவங்களை தான் அவர்கள் தேடியிருப்பார்களோ!!

http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=32991845



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard