Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆவியா...ஆவியானவரா.?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஆவியா...ஆவியானவரா.?
Permalink  
 


bereans:
தேவ‌ திட்ட‌ம் : ஒரு பார்வை
பூமியை ப‌டைத்து அதை "ந‌ல்ல‌து" என்று சொன்ன‌ தேவ‌ன், இந்த‌ பூமியை கைவிடும்ப‌டியாக‌ இல்லை. இதை மீண்டும் க‌ட்டி எழுப்புவ‌தே தேவ‌னின் திட்ட‌ம். அவ‌ர் அதை செய்யும் போது, அனைவ‌ரும் இந்த‌ பூமியில் புதிய‌ ச‌ரீர‌த்துட‌ன் உயிர்த்தெழுந்து வ‌ருவார்க‌ள். இதுவே கிறிஸ்துவ‌ சுவிசேஷ‌த்தின் வாக்குத்த‌த்த‌ம்.

"ப‌ல‌ர் இதில் த‌ங்கி வாழ‌வும், சில‌ர் இதை ஆழ‌வும்". இந்த‌ இர‌க‌சிய‌ம் இன்று கிறிஸ்துவின் வ‌ருகை நெருங்கி வ‌ருவ‌தால் ஏற்ப‌டும் வெளிச்ச‌த்தினால் ப‌ல‌ரை சிந்திக்க‌ செய்திருக்கிற‌து. வெளிப்ப‌டுத்தின விசேஷ‌ம் வெளிப்ப‌டுத்துவ‌தும், ப‌வுல் சொல்லுவ‌தும் இதை தான், அதாவ‌து, தேவ‌னின் அந்த‌ புதிய‌ பூமியில் மேசியாவான கிறிஸ்துவின் த‌லைமையில் ஆளுகை செய்வார்க‌ள் என்று (வெளி. 20:6).

தேவ‌னின் இந்த‌ புதிய‌ பூமியின், ந‌டு நாய‌க‌னாக‌ இருப்ப‌வ‌ர் கிறிஸ்துவை த‌லையாக‌ கொண்ட‌ ச‌பையே. அவ‌ரின் ஆவி (சிந்தை) த‌ற்போது ந‌ம்மை வ‌ழி ந‌ட‌த்துவ‌தும், அவ‌ர் திரைக்கு அந்த‌ப்ப‌க்க‌ம் ந‌ம் பார்வையில் ப‌டாத‌ப‌டி பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் அம‌ர்ந்திருக்கிறார். ஆனால் ஒரு நாள் அந்த‌ திரை நீக்க‌ப்ப‌ட்டு, ப‌ர‌லோக‌த்தின் அர‌சாட்சி இந்த‌ பூமியில் வ‌ரும் (உம்முடைய‌ இராஜிய‌ம் வ‌ருவ‌தாக‌ (ம‌த்.6:10)), கிறிஸ்துவின் பிர‌ச‌ன்ன‌ம் இந்த‌ பூமியை நிற‌ப்பும், அவருடையவர்கள் அவருடன் அவர் சாயலில் எழுப்படுவர், மீதமானவர் இங்த பூமியில் உயிர்த்தெழுவர். எல்லோரின் முழ‌ங்கால்க‌ளும் முட‌ங்கும், இன்று ம‌றைவாக‌ இருக்கும் ச‌த்திய‌ங்க‌ள் யாவ‌ரும் புரிந்துக்கொள்ளும்ப‌டியாக‌ வெளிப்ப‌டும், தேவ‌னின் ராஜிய‌ம் என்றென்றும் நீடிக்கும். இதுவே இந்த‌ உல‌க‌த்திற்கு கிடைக்கும் "இர‌ட்சிப்பு" எல்லா ஜ‌ன‌ங்க‌ளும் இர‌ட்சிக்க‌ப்ப‌டவும், ச‌த்திய‌த்தை அறிகிற‌ அறிவை அடைய‌வும்" 1 தீமோ 2:4-6. இதுதான் "இர‌ட்சிப்பு" ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்ப்பிக்க‌ப்ப‌டுவ‌து.


// அவ‌ரின் ஆவி (சிந்தை) த‌ற்போது ந‌ம்மை வ‌ழி ந‌ட‌த்துவ‌தும், அவ‌ர் திரைக்கு அந்த‌ப்ப‌க்க‌ம் ந‌ம் பார்வையில் ப‌டாத‌ப‌டி பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் அம‌ர்ந்திருக்கிறார். //

நல்லா படம் காட்றீங்'ணே...ஆவியானவர் எனும் ஆள்தத்துவமுடைய இயேசுவுக்கும் மேலானவரைக் குறித்து அவரே வாக்குபண்ணி அந்த அற்புத செயல்களை சாதாரண மனிதர்களான பேதுரு மற்றும் பவுல் ஆகியோர் மூலம் கண்டோமே...வாக்களிக்கப்பட்ட இம்மானுவேலர் எங்கே சொல்லுங்களேன்..!


bereans:
பரலோக நரக விஸிட் அடிப்பவர்களை தலைவர்களாக கொண்டிருந்தால் நிலைமை இப்படி தான் இருக்கும். இது எல்லாம் உங்களுக்கு புரியாது, உங்களுக்கு புரியவைக்க எனக்கு விருப்பமும் இல்லை. கிண்டலடிக்கும் தோரனையில் எதை பார்த்தாலும் அது புரியவும் புரியாது. தயவு செய்து விட்டு விட்டு வேறு வேலை அல்லது வேறு ஏதாவது தளம் இருக்கும், அங்கு உங்கள் கருத்துக்கு ஒத்து போவோர் இருப்பார் அங்கு போய் பதியுங்கள். இது எல்லாம் உங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம். உங்களுக்கு எல்லாம் பரலோகத்தில் தாவீதை பார்த்தேன் என்று பாட்டி கதை சொன்னால் தான் இனிப்பாக இருக்கும். அது போன்ற பாட்டி கதைகள் இந்த தளத்தில் வருவதில்லை. அப்படி இருக்கும் தளமாக பார்த்து போய் தங்களின் தாகத்தை தீர்த்துக்கொள்ளுங்கள்.

திருத்துவம் பேசும் தளங்கள் நிறைய இருக்கிறது, அங்கே போய் தேவ தூஷனம் செய்துக்கொண்டிருங்களே!! இங்கு வந்து எழுதி எங்கள் தளத்தின் நோக்கத்தை திசை திருப்பும் பிசாசின் தந்திரங்களை தொடர வேண்டாம் என்று சொல்லுகிறேன்.உங்களையே பவுலாகவும் பேதுருவாகவும் நினைத்து கொண்டு இருப்பதினால் இன்னும் பல குழப்பங்கள் வரும். இது எல்லாம் வேதத்தில் இருக்கிறது. கள்ள போதகர்கள் வருவார்கள் என்று, அவர்களுக்கு உண்மை கசக்கும், ஏனென்றால் உண்மை பேசினால் பிரபலமாக முடியாது. உங்களை போல் ஊழியன் என்கிற போர்வையில் இருந்தால், பரலோகம் போய் வந்தேன் தாவிதுடன் நடனம் ஆடினேன், பரிசுத்த ஆவி என்கிற ஆள்தத்துவத்துடன் நாற்காளி போட்டு பேசினேன் என்று எல்லாம் சொல்லி பிரபலமாக இருக்க முடியும், காணிக்கை தசமபாகம் போன்றவற்றை மிரட்டி, திருடி, பிச்சை எடுத்து குடும்பத்துடன் வாழ முடியும். மனசாட்சி இருந்தால் இந்த ஊழியர்கள் இப்படி வாழ்வது இல்லை, தன் சொந்த உழைப்பில் தான் வாழ்கிறார்கள் என்று எழுதும், இல்லாவிட்டால் இந்த தளத்தில் எழுதாதீர்!!

தூங்குகிறவனை எழுப்ப முடியும், தூங்குகிறவனை போல் இருப்பவனை எழுப்ப முடியாது!! சரிதான்........

// திருத்துவம் பேசும் தளங்கள் நிறைய இருக்கிறது, அங்கே போய் தேவ தூஷனம் செய்துக்கொண்டிருங்களே!! இங்கு வந்து எழுதி எங்கள் தளத்தின் நோக்கத்தை திசை திருப்பும் பிசாசின் தந்திரங்களை தொடர வேண்டாம் என்று சொல்லுகிறேன். //

நீங்கள் உங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தால் நாம் உள்ளே நுழையமாட்டோம்;அல்லது பிரச்சினைக்குரிய எம்மை
யும் எமது கருத்துக்களையும் நீக்கிவிட்டு உறுப்பினர் மட்டுமே பார்க்கக்கூடிய தளமாக நீங்கள் மாறிக்கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை;

மாறாக உங்களுக்குள்ளேயே ஒரு சபலம் இருந்து யாராவது ஆள் கிடைப்பாரா என்ற ஏக்கத்துடன் இங்கே சுமார் ஆயிரத்துக்கும் மேல் இரண்டாயிரத்துக்கு பக்கம் எழுதி குவித்துள்ளீரே அதற்கு மாற்று கருத்தை ஏற்கும் மனநிலை உங்களுக்கு இல்லாமல் ஏன் பொதுவில் வைத்து எழுதவேண்டும்;

உலகமுழுவதும் இலட்சக்கணக்கான ப்ளாக்கர்களும் (blogger) ஃபோரம்களூம் (forum) உண்டு; ஆனால் எந்த முட்டாளாவது உம்மைப் போன்ற அணுகுமுறையினைக் கடைபிடித்திருப்பானா என்று தெரியவில்லை; உம்முடைய கருத்து சரியானது என்றால் மாற்றுக்கருத்தினையும் இங்கே கௌரவமாக ஏற்கவேண்டும்;அப்போது தான் உம்முடைய கருத்துக்கே ஒரு மரியாதை கிடைக்கும்;

இல்லையானால் அது குரான் போலாகிவிடும்;'ஏற்றுக்கொள்... வெட்டிடுவேன் ' என்ற வன்முறை மார்க்கத்தின் வேரிலிருந்து நாம் வரவில்லை;

வேதத்தின் திரித்துவம்
மனிதனின் திரித்துவம்
தேவனின் திரித்துவம்
சாத்தானின் திரித்துவம்
இவற்றை கற்றுணர்ந்தோரால் தொகுக்கப்பட்ட ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சொந்த விளக்கங்களையும் கோதுமை வித்தவனின் கள்ள உபதேசத்தையும் தழுவிக்கொண்டு இருப்போர் எம்மை ஒருக்காலும் ஏமாற்றமுடியாது...அண்ணே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard