Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


அட அட அட... எனக்கு தெரியும் என் பதில் உங்களை இப்படி ஆட வைக்கும் என்று. விவாதங்களை முறைப்படி நடத்தலாம் என்று சகோ.சில்சாம் அழைத்தும் இப்படி நடக்கலாமா கந்தர்வன்? ஒவ்வொரு தலைப்பையும், தனித்தனியே வைத்தால், வாசகர்க்கு படிக்க எழுத வசிதியாக இருக்கும் என்ற நல்லெண்ணத்தை நீங்கள் ஏன் புரிந்து கொள்ள கூடாது.
மேலும் உம்பெருமானை நான் சிறுமை படுத்தவில்லை, உமது புராணங்கள்தான் அதை செய்கிறது. ஒரு சராசரி மனிதனுக்கு தோன்றிய கேள்வியை நான் கேட்டேன். அவ்வளவே.
சரி, ஜலந்திரன் விஷயத்தை நான் கிளறவில்லை. நீங்கள் பழைய ஏற்பாட்டில் இருந்து அள்ளி வீசுவீர்கள் என்று பயந்து அல்ல. Just to keep you comfortable.
நீங்கள் சிந்தனையாளர் என்ற போர்வையில் வந்ததால், சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று, உங்கள் கேள்விக்கு பதில் சொன்னால், உங்களை திட்டியதாக புகார் சொல்கிறீர்களே. நான் எங்கே உங்களை திட்டினேன்? எடுத்து சொல்ல முடியுமா?
சரி, நீங்கள் குழந்தைத்தனமாக கேட்பதால், குழந்தைகளுக்கு சொல்வது போல், ஒரு கதையாக என் பதிலை சொல்கிறேன். இப்போது அலுவல் காரணமாக வெளியே போவதால், மாலை உமக்கு என் பதிலை கதையாக சொல்கிறேன். அதுவரை பொறுமை காக்கவும். 


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது  //

இது திருச்சிக்காரருடைய சொந்த கருத்து, அவருக்கு உரிமையுண்டு. ஆனால், முற்றிலும் உண்மைக்கு மாறானது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

//
மூன்றாவது பைபிளின் போதனையைக் குறித்து நீங்கள் என்ன கேட்டாலும் அதனை விளக்க ஆயத்தமாக இருக்கிறோம்;அதைக் குறித்தும் தனி திரியாகத் துவங்கி விவாதிக்கலாம்;ஒன்றுடன் ஒன்றை சம்பந்தப்படுத்தினால் நமது நட்பு பாதிக்கப்பட்டு மதவெறியாகும் ஆபத்துண்டு. //

கர்மாவைப் பற்றி அசோக் குமார் கேட்டார். அதற்கு ஐயம் தீர நான் விளக்கத்தைக் கூறிவிட்டேன். அது சம்பந்தமான கிறித்தவத்தில் உள்ள ஒரு சிக்கலையும் காட்டினேன். ஆகையால், தனியாக ஒரு தொடரை ஆரம்பிக்கும் அவசியம் தெரியவில்லை. உங்களது அபிப்பிராயம் வேறானால், தனி தொடரை ஆரம்பிக்கலாம்.

//
இரண்டாவதாக ஜலேந்திரன் சம்பந்தமாக நண்பர் அசோக் அவர்கள் முன்வைத்துள்ள வாதம்;அதனைத் தனியே அணுகினால் என்ன பிரச்சினை? //

அசோக் குமார் கேட்டதன் நோக்கம் எம்பெருமானைச் சிறுமைப்படுத்துவதே. ஆகையால், அது அநாகரீகமான ஒரு முயற்சி. மேலும், புராண நூல் வேதத்திற்கு முரணாகச் சொன்னால், வேதம் சொல்வதைத் தான் ஏற்க இயலும் என்பது ஆதி சங்கரர் முதலிய அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. இத்தோடு ஜலேந்திரன் விஷயத்தை விடுவோம்.

இன்னொரு விஷயம் -- எனக்கு இத்தளத்தில் ஒரு நாளைக்கு ஒரு தடவை மேல் வர முடியாது. ஆகையால், எனது மறுமொழிகள் இனி ஒரு நாளைக்கு ஒன்றாக தான் வரும்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// என்னிடம் வந்து ஜலேந்திரன், துளசி என்று ஏதேதோ பிதற்றினால் இருக்கவே இருக்கிறது பழைய ஏற்பாடு, அதிலிருந்து எனக்கு அள்ளி வீசவும் தெரியும். வாதத்தைத் தர்க்க ரீதியில் மாத்திரமே வைத்துக் கொண்டால், நானும் பழைய ஏற்பாட்டிலிருந்து வரிகளை உருவமாட்டேன் என்று சத்தியம் பண்ணுகிறேன். //

அன்பு நண்பர் கந்தர்வன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்;தங்களுடைய பதிலை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்கிறேன்.

முதலில் வரவேற்பு; நீங்கள் ஒரு வாசகர் மற்றும் எழுத்தாளர் என்ற முறையில் தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது;இங்கே அதிகமாக கிறித்தவர்கள் எழுதுவதால் கிறித்தவ தளம் போல இருக்கிறதேயன்றி இந்த தளத்தின் நோக்கமானது மதச்சார்பற்ற நிலையிலிருந்து அனைத்து மார்க்கநெறிகளின் வழியே பரம்பொருளையடையும் சரியான மெய்ப் பொருளையடையும் வழியைத் தேடுவதே;எனவே நீங்கள் தேர்ந்தெடுக்கும் எந்த பொருளிலும் தனி விவாதத்தைத் துவங்கி தொடரலாம்.

இரண்டாவதாக ஜலேந்திரன் சம்பந்தமாக நண்பர் அசோக் அவர்கள் முன்வைத்துள்ள வாதம்;அதனைத் தனியே அணுகினால் என்ன பிரச்சினை? அத்துடன் பைபிளை ஏன் சம்பந்தப்படுத்தவேண்டும் என்பதை யோசியுங்களேன்;இங்கே நண்பர் திருச்சிக்காரன் ஒரு திரி கொளுத்திப் போட்டிருக்கிறாரே கவனிக்கவில்லையா,// இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது  // என்கிறாரே...இது என்ன‌?

மூன்றாவது பைபிளின் போதனையைக் குறித்து நீங்கள் என்ன கேட்டாலும் அதனை விளக்க ஆயத்தமாக இருக்கிறோம்;அதைக் குறித்தும் தனி திரியாகத் துவங்கி விவாதிக்கலாம்;ஒன்றுடன் ஒன்றை சம்பந்தப்படுத்தினால் நமது நட்பு பாதிக்கப்பட்டு மதவெறியாகும் ஆபத்துண்டு.

எனவே இடைவெளியை பேணுதல் இரு தரப்புக்குமே நல்லது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


திரு சில்ஸாம்,

உங்கள் வரவேற்புக்கு நன்றி. என்னுடைய நோக்கத்தை இங்கு தெளிவுபடுத்துகிறேன்:

அசோக் குமார் அவர்கள் ஏதோ தர்க்க ரீதியில் கேள்வி கேட்பதைப் பார்த்து இங்கு ரிஜிஸ்டர் செய்துக் கொண்டேன். கர்மா தியரியில் எந்த வித தர்க்க ரீதியான சிக்கல்களும் இல்லை. ஆனால், உங்களுடைய கிறித்தவ மதத்தில் கர்மாவையோ மறுபிறப்பையோ ஏற்பதில்லை, ஆதலால் பல சிக்கல்கள் விளைகின்றன. அதில் முக்கியமான ஒன்று, "சிசுவாக இருக்கும்போது இறக்கும் குழந்தை என்ன ஆகிறது? அதற்குச் சொர்க்கமா அல்லது நரகமா?" என்பதே. இதையே உங்களுக்குச் சவாலாக வைக்கிறேன்.  என் கருத்து என்னவென்றால், இதற்கு எப்படி பதில் அளித்தாலும் உங்களுடைய "நியாயமான கருணையுள்ள" இறைவன் என்னும் கொள்கை அடிபட்டுப் போகும். மறுபிறவியை ஏற்காத எந்த ஒரு இறைக் கொள்கையின் கதியும் இதுவே.

என்னுடைய கேள்விக்கு "கர்த்தர் நல்லவர். அவருடைய வழி அவருக்குத் தான் தெரியும்" என்றெல்லாம் சப்பைக்கட்டுக் கட்டாமல்,  தர்க்க பூர்வமான லாஜிக் அடிபடாத விடையை அளிக்கமுடியுமா? இதற்கு "தெரியாது" என்ற பதிலைக் கூற முடியாது. "தெரியாது" என்றாலும் கூட, "சொர்க்கம்" அல்லது "நரகம்" இதில் ஏதோ ஒன்று என்று தான் ஒப்புக்கொள்ளவேண்டும். "கேள்விக்குப் பதில் சொர்க்கமா இருந்தால் என்ன விளைவு" என்றும் "கேள்விக்குப் பதில் நரகமாயிருந்தால் என்ன விளைவு" என்றும் யோசித்துப் பாருங்கள்.

இக்கேள்விக்கு அசோக் குமாரைக் கேட்டால், அவர் என்னைப் பற்றிக் கண்டபடி வசவு மாரி பொழிந்துள்ளார். இதற்கு முன் தமிழ்ஹிந்து தளத்தில் ஜான்ஸன் அவர்களோ, "சாத்தான் தான் உங்களை இப்படிக் கேள்வி கேட்க வைக்கிறான்" என்கிறார். நியாயமான பதிலை யாரும் தரவில்லை, வெறும் அச்சுருத்தலும் வியக்தி தூஷணைகளுமே இதுவரை கிடைத்துள்ளன.

இந்த அடிப்படைக் கேள்விக்குக் கூட பதில் சொல்ல இயலவில்லை என்றால், நீங்கள் அடுத்தவருடைய மதத்தைப் "பொய்யானது" என்று விமர்சிக்க அருகதையே இல்லை என்பதே எனது கருத்து.

மற்றபடி நான் உங்கள் பிரச்சாரத்தைக் கேட்க வரவில்லை. தெய்விக அருளை நேரே பிரத்யக்ஷமாகக் கண்டு பகவானுடைய அருளால் பல விஷயங்களை நானே நம்ப முடியாத அளவுக்கு வெகு விரைவில் அறிந்துக் கொண்டவன். பல தர்க்க வாதங்களில் நான் கலந்துக் கொண்டு பல விஷயங்களை நியாயமான முறையில் எடுத்துரைத்திருக்கிறேன். என்னிடம் வந்து
ஜலேந்திரன், துளசி என்று ஏதேதோ பிதற்றினால் இருக்கவே இருக்கிறது பழைய ஏற்பாடு, அதிலிருந்து எனக்கு அள்ளி வீசவும் தெரியும். வாதத்தைத் தர்க்க ரீதியில் மாத்திரமே வைத்துக் கொண்டால், நானும் பழைய ஏற்பாட்டிலிருந்து வரிகளை உருவமாட்டேன் என்று சத்தியம் பண்ணுகிறேன்.

நன்றி,

கந்தர்வன்



-- Edited by gandharvan on Tuesday 19th of October 2010 05:08:53 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


அன்பான சகோதரர் கந்தர்வன் அவர்களை உள்ளன்புடன் வரவேற்கிறோம் ; தங்களது பதிவின் விவரங்களை நான் அறியவில்லை,ஆனாலும் தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆர்வத்துடன் வரவேற்கிறோம்.வாழ்த்துக்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

Mr. Ashok Kumar,

If all aborted babies go to heaven, your religion must insist on killing babies (which gets them a sure ticket to heaven) instead of preaching to them later (they may or may not accept your teaching, you know). What do you say for this?

__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

Mr. Ashokkumar, it looks like your faith is shaken by my questions. Otherwise, you wouldn't have given the following response:

//
 Are you a aborted baby? Are you dead before knowing good and bad? I beleive that you are a grown up man. And whatever a necessary Gospel that is needed for a grown up man is given to you already. And still you are not able to perseive or understand that, because of you spiritual blindness. How can you expect to perseive or understand the Gospel that is meant for others.
 Ultimately JESUS CHRIST is the ONLY WAY. GOD is a fair GOD. He gives necessary oppurtunity to everyone to know and respond to the GOSPEL. Even to the people who died before Jesus, the Gospel has been preached. And JESUS loves everyone more than you and me. So, he knows how to take care of those children.
//

If your faith was unshaken, you would have given an intellectual logical response. My faith in my Dear Lord is unshaken and hence you can ask any question for which I can give intellectual answers, and I won't indulge in personal attacks like you did above.



__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
Permalink  
 

Ashok Kumar,
//நீங்கள் அளித்த பதில், முன்னாள் இந்து என்ற முறையில் எனக்கும் தெரியும்.//

I don't really see that, as your understanding below is wrong.

// அப்படி என்றால், உங்கள் யுக கணக்கு (சத்யுகம், த்ரேதா, த்வாபர், கலியுகம்) போன்றவை என்னாவது?? சத்யுகம்தான் முதல் என்கிறீர்கள், அது பல ஆயிரம் ஆண்டு முன்பு என்கிறீர்கள், ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு ஆரம்பம், மற்றும் முடிவு வைத்திருக்கிறீர்கள், அப்படி பார்த்தால் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் தொடங்கி தானே ஆக வேண்டியுள்ளது. அப்புறம் எப்படி ஆரம்பம் இல்லை என்கிறீர்கள்?
//

Yuga cycle exists, Krita yuga (or Satya Yuga), Treta Yuga, Dvapara yuga, and Kali yuga is again followed by a cycle of Yugas. After 1000 cycles of yugas, there is a pralayam. This is one day of four-faced Brahma, called "kalpa". Brahma has a life span of 100 such years of 360 such days. After that, there is a mahApralayam. Then, the position of Brahma is occupied by some other Atma.

//ஆண்டவன் அனாதியாக இருக்கலாம், மனிதன் அநாதி என்பது ஏற்புடையது அல்ல. அதனால், உங்கள் பதில் ஏற்கும்படி இல்லை.//

Who said humans are anAdi? I am saying that only Atmas are anAdi. You and me, the Atma, is neither human, animal, deva, or plant. Understand this difference. Body is only like a coat that we are made to wear as a result of Karma.

// இதை நான் சொல்லலை, உன்காளுங்கதான் சொல்லிக்கிறாங்க. நான் அடுத்த பிறவியே இல்லைங்கறேன். //

Whoever said what you said does not know what he is saying.

// உங்கள் பல பிறவியில் தேவர்களும் அடக்கமா? தேவர்களுக்கும் மரணமா? இந்திரன் முதலான எந்த தேவனும் மரித்ததாக பொதுவாக இந்துக்கள் சொல்வதில்லையே.//

It is very clearly told in the scriptures that the lifespan of devas also comes to an end at the pralayam/Mahapralayam. Some may, by the Lord's favor, continue to be in the same post, or some may attain liberation, or some may be born as humans in the next kalpa.

// நீங்கதான் திருமாலை மட்டும் பரம்பொருள் என்று சொல்பவர் ஆயிற்றே, அப்போ சிவன், முருகன், etc .,எல்லாம் வெறும் தேவர்கள் அல்லது பூதகணங்கள் தானே, அவங்கெல்லாம் இப்போ செத்து போயிட்டாங்களா? Does your demi gods (devas) reproduce? Sounds really funny. //

Demigods are just like another species of beings. There is nothing funny if they reproduce. All of them are pretty much alive otherwise the world would not function. This is like the company where you work wouldn't function if people in different posts are absent.



// Also, what is the purpose of taking birth as  plants, microbs and many other things that doesn't have the capability to think and take any consious decision? //

To experience pain and suffering from pApa karmas.

//
Are you a aborted baby? Are you dead before knowing good and bad? I beleive that you are a grown up man. And whatever a necessary Gospel that is needed for a grown up man is given to you already. And still you are not able to perseive or understand that, because of you spiritual blindness. How can you expect to perseive or understand the Gospel that is meant for others.
 Ultimately JESUS CHRIST is the ONLY WAY. GOD is a fair GOD. He gives necessary oppurtunity to everyone to know and respond to the GOSPEL. Even to the people who died before Jesus, the Gospel has been preached. And JESUS loves everyone more than you and me. So, he knows how to take care of those children.
//

I have thrown the question to you as an intellectual challenge. If you cannot answer the question, it proves logically that your so-called God does not exist. Instead of answering properly, you are making ad-hominem attacks. How does it matter what I am? Anybody can ask a question and expect an honest answer.

// So, he knows how to take care of those children.//

That's not an answer. It is an emoted response. Xtian theologians have struggled a lot to answer this question. It proves that you are following false teaching.

// Dear Gandharvan, My GOD is not a concept, My GOD is a person. //

Prove that by answering my question about babies.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

 யௌவன ஜனத்தின் சார்பில் உங்களை வரவேற்கிறேன் கந்தர்வன்,
         நீங்கள் அளித்த பதில், முன்னாள் இந்து என்ற முறையில் எனக்கும் தெரியும்.
//There is no "first janmam" for anyone. Janmas are "anAdi". //
   அப்படி என்றால், உங்கள் யுக கணக்கு (சத்யுகம், த்ரேதா, த்வாபர், கலியுகம்) போன்றவை என்னாவது?? சத்யுகம்தான் முதல் என்கிறீர்கள், அது பல ஆயிரம் ஆண்டு முன்பு என்கிறீர்கள், ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு ஆரம்பம், மற்றும் முடிவு வைத்திருக்கிறீர்கள், அப்படி பார்த்தால் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் தொடங்கி தானே ஆக வேண்டியுள்ளது. அப்புறம் எப்படி ஆரம்பம் இல்லை என்கிறீர்கள்?
ஆண்டவன் அனாதியாக இருக்கலாம், மனிதன் அநாதி என்பது ஏற்புடையது அல்ல. அதனால், உங்கள் பதில் ஏற்கும்படி இல்லை.

   //So it is wrong to say that only after all karma has necessarily been exhausted, one attains mukti.//
இதை நான் சொல்லலை, உன்காளுங்கதான் சொல்லிக்கிறாங்க. நான் அடுத்த பிறவியே இல்லைங்கறேன்.

//In other words, if you take any of our births, there was always a previous state of existance, either as a microbe, plant, insect, bird, animal, human, or as devas, yakshas, gandharvas, or kinnaras.//
உங்கள் பல பிறவியில் தேவர்களும் அடக்கமா? தேவர்களுக்கும் மரணமா? இந்திரன் முதலான எந்த தேவனும் மரித்ததாக பொதுவாக இந்துக்கள் சொல்வதில்லையே. நீங்கதான் திருமாலை மட்டும் பரம்பொருள் என்று சொல்பவர் ஆயிற்றே, அப்போ சிவன், முருகன், etc .,எல்லாம் வெறும் தேவர்கள் அல்லது பூதகணங்கள் தானே, அவங்கெல்லாம் இப்போ செத்து போயிட்டாங்களா? Does your demi gods (devas) reproduce? Sounds really funny.

Also, what is the purpose of taking birth as  plants, microbs and many other things that doesn't have the capability to think and take any consious decision?
  // kindly explain what happens to babies who are either aborted within the foetus or attain death before they even understand the concept of good and bad. Do they go to heaven? or do they go to hell?//
 Are you a aborted baby? Are you dead before knowing good and bad? I beleive that you are a grown up man. And whatever a necessary Gospel that is needed for a grown up man is given to you already. And still you are not able to perseive or understand that, because of you spiritual blindness. How can you expect to perseive or understand the Gospel that is meant for others.
 Ultimately JESUS CHRIST is the ONLY WAY. GOD is a fair GOD. He gives necessary oppurtunity to everyone to know and respond to the GOSPEL. Even to the people who died before Jesus, the Gospel has been preached. And JESUS loves everyone more than you and me. So, he knows how to take care of those children.
   
//Hence, your concept of God is wrong.//
Dear Gandharvan, My GOD is not a concept, My GOD is a person.

More to come, wait and see. Every knee shall bow.
Ashok


__________________


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 20
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


Ashok,

Your question is not valid. There is no "first janmam" for anyone. Janmas are "anAdi". In other words, if you take any of our births, there was always a previous state of existance, either as a microbe, plant, insect, bird, animal, human, or as devas, yakshas, gandharvas, or kinnaras.

Moksham or liberation or Vaikundam results from Ishvara's (Supreme Lord's) grace, which has the power to destroy all sins. Andal in Thiruppavai sings "pOya pizhaiyum pugutharuvAn ninRanavum theeyinil dhoosaagum". So it is wrong to say that only after all karma has necessarily been exhausted, one attains mukti.

As a challenge to you Xtians, kindly explain what happens to babies who are either aborted within the foetus or attain death before they even understand the concept of good and bad. Do they go to heaven? or do they go to hell? (Augustine of Hippo clearly says they go to "hell", catholicism says they go to some kind of "limbo". Both are unfair, everyone can see that). It is clear that if you answer "heaven" or "hell" to this question, you will have a contradiction. Hence, your concept of God is wrong.

-- Edited by gandharvan on Tuesday 19th of October 2010 08:57:02 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


Ashok: மறு ஜென்மம் உண்டா?
Hindu: ஆமாம். நாம் இறந்த பின், நமது கர்மாக்களுக்கு ஏற்ப, நமது அடுத்த பிறவி அமைகிறது.
Ashok: அப்பொழுது உங்களது இந்த இந்த பிறப்பின் காரணம்?
Hindu: என் பழைய கர்மாக்கள்.
Ashok: எதுவரை இந்த பிறப்பு, இறப்பு சுழற்சி போகும்?
Hindu: என் கர்மாக்கள் தீரும்வரை.
Ashok: கர்மா இல்லை என்றால் பிறப்பு இல்லையா?
Hindu: ஆமாம், கர்மாக்கள் தீர்ந்துவிட்டால், மெய்பொருளை அறிந்து, பிறப்பு இறப்பு சுழற்ச்சியில் இருந்து விடுபட்டு, பரத்தை அடைவேன்.
Ashok: So, ஒருவன் பிறப்புக்கு, அவன் முர்ப்பிரவியின் கர்மாதான் காரணமா?
Hindu: அப்படிதான் நாங்கள் நம்புகிறோம்.
Ashok: அப்பொழுது, உங்கள் முதல் பிறப்பு எதனால் ஏற்ப்பட்டது? நீங்கள் முதன் முதலில் பிறப்பதற்கு முன் உங்களுக்கு கர்மாக்களே இருந்திருக்க முடியாதே?
Hindu: confuse Can anyone help me with an answer for this?

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


பத்மபுராணத்தில் விஷ்ணு துளசியை (வ்ருந்தாவை) கற்பழித்ததை குறித்து திருச்சிக்காரனுடன் நடந்த வார்த்தை பரிமாற்றம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SATHESH, on September 14, 2010 at 22:31 Said:

//விஷ்ணுவிற்கு துளசி பூஜை செய்கிற ஒவ்வொருத்தரும், ஒரு கற்பழிப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும், அந்த பெண்ணின் தவறு என்னவென்றால், அவள் விஷ்ணுவின் பக்தையாம், மேலும் மிகுந்த பக்தியுடன் இருந்தாளாம். //

ஒரு சின்ன வேண்டுகோள் துளசி பற்றி இப்படி ஒரு இழித்துரை தயவு செய்து இது சம்பந்தப்பட்ட புராண கதையை விளக்குங்கள்,இதனை பற்றி நான் அறிதிருக்கவில்லை.

thiruchchikkaaran, on September 14, 2010 at 22:31 Said:

இந்த‌ துள‌சி என்று சொல்ல‌ப் ப‌டுவ‌து நாம் ப‌ல‌ரும் அறிந்த‌ வ‌கையிலே ப‌ல‌ ம‌ருத்துவ‌ குண‌ ங்க‌ளை உடைய‌ ஒரு சிற‌ந்த‌ தாவ‌ர‌மே. அது பெண்ணாக‌ இருந்திருந்தால் இந்த‌ கற்பழிப்பு நிக‌ழ்வு உண்மையாக‌ இருந்திருந்தால் அதை செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் மூர்த்தியாக‌ இருந்தாலும் ம‌னித‌னாக‌ இருந்தாலும் நாம் அதைக் க‌ண்டிக்கிறோம், எதிர்க்கிறோம்.ஆனால் உண்மையா என்று ஆராய‌ வேண்டும். க‌ட்ட‌ப் ப‌ஞ்சாய‌த்து தீர்ப்பு வ‌ழ‌ங்க‌ இய‌லாது. இவ‌ர்க‌ள் வேத‌த்திலே இந்த‌ நிக‌ழ்வு இருக்கிற‌து என்று சொல்கிறார்க‌ள். நாமும் ரிக், ய‌ஜுர், சாம‌, அத‌ர்வ‌ண‌ வேத‌ங்களில் தேடியும் கிடைக்க‌வில்லை. ப‌க‌வ‌த் கீதையிலும் இல்லை.

தெளிவாக‌ இந்த‌ அதிகார‌ம், இத்தனையாவ‌து சொல் என்று குறிப்பிடாம‌ல் சும்மா பாட்டி வ‌டை சுட்டாங்க‌, காக்கா வ‌ந்த‌து என்ப‌து போல‌ ஜ‌லேந்திர‌ன் என்
று ஒருவ‌ன் இருந்தானாம் என்று எழுதி உள்ள‌ன‌ர். என‌வே எங்கே இருக்கிற‌து என்ப‌தை தேடி நாம் ஆராய‌ வேண்டும். ஆனாலும் இது ஒரு முக்கிய‌ விட‌ய‌ம். நாம் நிச்ச‌ய‌ம் இது ப‌ற்றி விவாதிப்போம். விரைவில் க‌ட்டுரை வெளியிட‌ப்ப‌டும்.க‌ற்ப்பழிப்பு த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.

Ashok kumar Ganesan, on September 14, 2010 at 22:31 Said:

Padma purana is one of the major eigteen puranas of Hinduism. And the Padma purana talks about Tulsi (Vrinda) Story.

The below paragraph I copy and paste it from Wikipedia:

According to Hindu mythology, the Tulsi plant was a woman named Vrinda (Brinda), a synonym of Tulsi. She was married to the demon-king Jalandhar. Due to her piety and devotion to Vishnu, her husband became invincible. Even god Shiva, the destroyer in the Hindu Trinity could not defeat Jalandhar. So Shiva requested Vishnu – the preserver in the Trinity – to find a solution. Vishnu disguised himself as Jalandhar and violated Vrinda. Her chastity destroyed, Jalandhar was killed by Shiva. Vrinda cursed Vishnu to become black in colour and he would be separated from his wife. Thus, he was transformed into the black Shaligram stone and in his Rama avatar, his wife Sita was kidnapped by a demon-king and thus separated from him. Vrinda then burnt herself on her husband’s funeral pyre or immolated herself due to the shame. The gods or Vishnu transferred her soul to a plant, henceforth which was called as Tulsi. As per a blessing by Vishnu to marry Vrinda in her next birth, Vishnu in form of Shaligram – married Tulsi on Prabodhini Ekadashi. To commemorate this event, the ceremony of Tulsi Vivah is performed.[3][4][6]

//த‌வறு செய்த‌வ‌ர் யாராக‌ இருந்தாலும் நாம் அதைக் கண்டிப்போம்.//

Kandiyungal.

thiruchchikkaaran, on September 14, 2010 at 22:31 Said:

இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப்படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது.

ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம் , இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த ஸ்மிருதி வகையை சேர்ந்ததே ஆகும்.

இதில் ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது. இந்து மதத்திலே இரண்டு வகையான நூல்கள உள்ளன. அவற்றை ஸ்ருதி என்றும் ஸ்ம்ருதி என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இதிலே ஸ்ருதி என்பது உண்மைகளை விளக்கும் , ஆராயும் தத்துவ ஆராய்ச்சிப் பகுதி ஆகும். வேதங்களின் தத்துவ விளக்கப் பகுதிகளான உப நிடதங்கள், பகவத் கீதை ஆகியவை ஸ்ருதி எனப் படுகிறது. ரிக், யஜூர், சாம ,அதர்வண, வேதங்கள் நான்கும், கீதையும் ஸ்ருதி எனப் படுகிறது. ஸ்மிருதி எனப் படுவது மேகதூதம், குமார சம்பவம், இண்டிகா போன்ற பதிவுகள் ஆகும். இவற்றை எழுதியவர்கள் பெரும்பாலும் புலவர்கள் ஆவர். நீங்கள் குறிப்பிடும் பத்ம புராணமும் இந்த சிமிருதி வகையை சேர்ந்ததே ஆகும். ஸ்ருதி என்பது அத்தாரிட்டியாக கருதப் படுகிறது. இதில் ஸ்மிருதி என்பது புலவர்களால தொகுக்கப் பட்டது.

இந்த துளசி என்பது ஒரு தாவரம் ஆகும். அது பூசனைக்கு பயன் படுத்தப் படும் பொருள்களில் முதன்மை வகிக்கிறது. அது பல மருத்துவ குணங்களை உடையது. அது மிகவும் புனிதமாக கருதப் படுகிறது என்பதும் உண்மையே.

இப்போது நீங்கள் சொல்லும் படிக்கான விடயத்திற்கு வருவோம்.

பிருந்தா என்பவர் ஜலேந்திரன் என்பவற்றின் மனைவி என்றும், அவரின் கற்பொழுக்க வலிமையால் ஜலேந்திரனை யாரும் வெல்ல முடியவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதிலே ஜலேந்திரன் என்பவர் பலரையும் தொல்லைப் படுத்தி வந்ததால் அவரை வென்று அழிக்க வேண்டிய கட்டாயத்தில் விஷ்ணு அல்லது நாராயணன் என்று சொல்லப் படுபவர் இருந்ததாக சொல்லப் படுகிறது.

இதற்காக அவர் ஜலேந்திரன் போல வேடமிட்டு துளசியை ஏமாற்றிக் க
ற்ழித்ததாக சொல்லப்படுவது உண்மையானால, ' பரவாயில்ல வேறு என்ன பண்ணுவாரு பாவம் என்று விட்டு விட முடியாது. அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன். அது ஒரு அநியாய வன்முறையே.

இந்த விஷ்ணு அல்லது நாராயணன் என்பவர் இந்து மதத்தின் முழு முதற் கடவுள் கடவுள் எனக் கருதப் பட இயலாது என்பதையும் நாம் ஆராய்ச்சின் வாயிலாக அறிகிறோம். இந்து மத ஸ்ருதிகளில் இந்து மத ஸ்ருதிகளில் கடவுளாக சொல்லப் படும் கடவுள் புருஷன் , புருஷோத்தமன் என்று சொல்லப் படுபவர் முழு வலிமையும் உடையவராக, எல்லாவற்றையும் தன்னிலே தாங்கியவராக எல்லாவற்றுக்குள்ளும் வூடுருவி இருக்கும் கடவுளாக சொல்லப் படுகிறார்.

யாருக்கும் அஞ்ச வேண்டியவோ, வேடம் போட வேண்டியவோ அவசியம் இல்லாத அளவுக்கு வலிமையும் முழு கண்ட்ரோலும் உள்ளவராகவே சொல்லப்படுகிறார். எல்லாமே அவராக இருப்பதாக சொல்லப் பட்டு உள்ளது. அவர் அவ்வப்போது (ஒவ்வொரு யுகத்திலும்) அவதாரங்கள் எடுப்பதாகவும் பகவத் கீதை சொல்கிறது.

(தொடரும்)

Ashok kumar Ganesan, on September 14, 2010 at 22:31 Said:


அடுத்தவன் மனைவியை, அவள் புருஷனின் வேடமணிந்து, கற்பழித்து, அவளை தற்கொலைக்கு தூண்டியது பேய்தனமா? தெய்வீகமா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள் திருச்சிக்காரன்.

thiruchchikkaaran, on September 15, 2010 at 22:31 Said:

இதுல என்ன அண்ணனே மன சாட்சி, நாம் தான் தவறு என்று சொல்லி இருக்கிறோமே. நாம அது சரி என்று சொன்னால் தானே மனசாட்சியை கேட்க வேண்டும். நம்முடைய தெளிவான பதிலை ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். இந்த நிகழ்வு உண்மையாக இருந்திருக்குமானால், அது ஒரு தவறு, குற்றம், அதை நாம் ஒத்துக் கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து விட்டோம்.

நம்மைப் பொறுத்தவரையில் கடவுள் தானே அவர் இனவாதம் செய்யலாம், இனப் படுகொலைக்கு திட்டம் தீட்டி செயல் படுத்தலாம், ஒரு இனத்துக்கு தான் முன்னுரிமை என்று சொல்லாலாம் , எல்லாம் சரிதான் என்று சொல்லுபவர் அல்ல நான். துளசியார் ஏமாற்றிக் கற்பழிக்கப்பட்டு இருந்தால் அது தவறுதான், அப்படி செய்தவர் மனிதராக இருந்தாலும், அரக்கராக இருந்தாலும், தேவராக இருந்தாலும் அது தவறுதான், வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்களுக்கு நான் சொல்லும் இன்னொரு தகவல் என்ன என்றால், இந்த நாராயணர் என்று சொல்லப் படுபவர் இந்து மதத்தின் முக்கிய கடவுளாகவோ, ஆதி கடவுளாகவோ சொல்லப்பட்டதாக இல்லை. இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் நாராயணர் முக்கியமாக வணங்குகின்றனர் என்பது உண்மையே.

ஆனால் நாராயணர் தான் இராமராகவும், கிருஷ்ணராகவும் இன்னும் எல்லா அவதாரமாகவும் வந்தார் எனக் கருத முடியாது. பகவத் கீதையில் அப்படிக் குறிப்பிடப் படவில்லை.
கீதையில் வைகுந்தம், பாற்கடல்… பற்றி எல்லாம் ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. அதேநேரம் நாராயணர் என்று சொல்லப்படுபவர் விருந்தா எனப்படும் பெண்ணை ஏமாற்றிக் க
ற்ழித்தார் என்று சொல்லப்படும் ஒரு குற்றச் சாட்டு அது உண்மையா என்று தெரியவில்லை, புனைவாகக் கூட இருக்கலாம். இருப்பினும் அது உண்மையாக இருந்தால் கண்டிக்கிறேன் , எதிர்க்கிறேன்.

Ashok kumar Ganesan, on September 15, 2010 at 22:31 Said:

நான் கேட்டது ஒரு மார்க் கேள்வி. பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் “அசுரத்தனமா” அல்லது “தெய்வீகமா”? நேரடியாக பதில் சொல்லாமல் சுற்றி வளைப்பது ஏனோ?

thiruchchikkaaran, on September 16, 2010 at 22:31 Said:

ஒரு ஆராய்ச்சி என்று வரும் போது நம்முடைய் கருத்துக்களை விளக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. ஒற்றை வார்த்தையிலோ, வரியிலோ பதில் சொல்ல இது என்ன கட்டைப் பஞ்சாயத்தா?

ஒவ்வொரு செயலையும் ஆராய்ந்து அது சரியா இல்லையா, என்று சொல்லுகிறோம். ஒவ்வொரு கொள்கையையும் ஆராய்ந்து அதன் மீதான கருத்தை முன் வைக்கிறோம்.

முதலில் இந்த கற்பழிப்பு குற்றச் சாட்டு எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. வேதங்களில் இருக்கிறது என்றால் அதை ஓரளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

வேதங்களில் இருக்கிறது என்று சொல்லி விட்டு புராணத்தை எடுத்துக் காட்டுகிறார்
கள். இவர்கள் எந்த விஷ்ணுவை சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள வாழ்ந்த காலத்தில் துளசி என்ற பெயரில் ஒரு பெண் வசித்து இருக்கக் கூடும். விஷ்ணு என்று ஒரு அரசன் ஆட்சி செய்து இருக்கக் கூடும். அல்லது இவர்கள சொல்லும் விஷ்ணு எனப் படுபவர், வைகுந்தத்தில் வாசம் செய்பவர் என சொல்லப் படும் நாராயணர் என்று இருந்தாலும் , அவர் இப்படி கற்பழிப்பு செயலில் ஈடு பட்டு இருந்தால் அதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இனஅழிப்பு செய்தாலும் பரவாயில்லை, ஒரு இனத்தை இரட்சிக்க வந்தேன் என்று சொன்னாலும் பரவாயில்லை என்று கைகட்டி, வாய் பொத்தி மண்டியிடவில்லை நாம்.

Ashok kumar Ganesan, on September 16, 2010 at 22:31 Said:

ஐயா, நான் கேட்கும் கேள்வி பத்மபுராணத்தில் வரும் கதாப்பாத்திரத்தை பற்றியே. பத்மபுராணம் உண்மையா என்று கேட்கவில்லை. அல்லது அதில் வரும் விஷ்ணுதான் நாராயணனா என்று கேட்கவில்லை. எதற்க்காக நீங்கள் இப்படி மழுப்புகிறீர்கள். நேர்மையான மக்கள் இப்படி மழுப்பவேண்டிய அவசியம் இல்லையே.

பத்மபுராணத்தில் வரும் விஷ்ணு கதாபாத்திரம் செய்தது அசுரத்தனமா அல்லது தெய்வீகமா? உண்மை சுடும் என்று பயமாய் இருந்தால், பதில் அளிக்க வேண்டாம்.

thiruchchikkaaran, on September 16, 2010 at 22:31 Said:

அசோக், இந்த கேள்விக்கு தெளிவான பதில் அளித்தாகி விட்டது. ஏமாற்றிக் கற்பழிக்கும் கொடும் செயலை செய்தது யாராக இருந்தாலும், அது ஒரு அயோக்கிய கொடூர செயலே. அதற்கு தக்க தண்டனை அளிக்கப் பட வேண்டும் என்பதே நமது கருத்து. இதிலே உண்மை சுட என்ன இருக்கிறது?

Ashok kumar Ganesan, on September 20, 2010 at 22:31 Said:

அப்போ இந்த விஷ்ணு செய்தது, அரக்கதனம்தான்னு ஒத்துக்கிட்டீங்க.
அதைத்தாங்க நிறைய சுவிஷேஷர்களும் சொல்லறாங்க. அவங்க இதை சொல்ல தேவை இல்லைதான், ஆனாலும் அவங்க அப்படி சொல்றது தப்புன்னு தெரியலை. இப்போ பாருங்க நீங்க கூட இந்த விஷ்ணுங்கரவரு செய்தது தப்பு, கண்டிக்கதக்கதுன்னு சொல்லறீங்க.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


"கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது."(நியாயாதிபதிகள்.5:31)

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

கேட்ட கேள்விகளுக்கு பதில் இல்லாமல் திருச்சிக்காரன் "ஜன கன மன" பாடி ஓடி போய்ட்டார் போல.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

RV சொல்கிறார்:
ஆகஸ்ட் 25, 2010 at 8:04 பிற்பகல்
// சில்சாம், context -ஐ தெளிவாக விளக்குவது நலம். அலமேலுவும் விருட்சமும் அதை செய்திருக்கிறார்கள். நீங்கள் விட்டுவிட்டீர்கள்.//

நண்பர் RV அவர்களே,நான் சில வருடங்களாகவே பின்னூட்டமிடுவதில் பயிற்சி பெற்றுள்ளேன்; இங்கே- இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளை யாரும் கடைபிடிப்பதில்லை;

ஆனாலும் எனது செய்தி சென்று சேரவேண்டிய இடத்தைச் சேரும் என்ற நம்பிக்கையுடனே பதிக்கிறேன்;அது அப்படியே ஆகும்;

விடயம் என்னவென்றால் கிறித்தவர்கள் மதப் பிரச்சாரம் செய்வதைக் குறித்து "விருட்சம்" மற்றும் "அலமேலு" தரக் குறைவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்; அதனை விலாவாரியாக விளக்காமல் நான் நேரடியாக எனது பதிலை பதித்துள்ளேன்;

"ஜெஹோவா" மற்றும் "இயேசு" ஆகியோருக்கான தங்கள் ஒப்பீடு சிறுபிள்ளைத்தனமாகவும் எமது மனதைப் புண்படுத்துவதாகவும் உள்ளது;

நாங்கள் ராமனையும் கிருஷ்ணனையும் குறித்து இதுபோன்று அபாண்டமாக அல்லது உண்மைக்கு மாறாக எதையும் எழுதிவிட முடியாது;

இருப்பதை எழுதினாலே திருப்பி அடிக்கிறார்கள்; மகா மட்டரகமான அருவருப்பான செக்ஸ் வர்ணனைகள் நிரம்பிய வேதங்களின் கதாநாயகர்களை சிலைகளாக நிறுத்தி தெய்வமாகத் தொழுகிறார்கள்;அதையெல்லாம் குறித்து யாரும் எதுவும் உணர்வடைகிறதில்லை;

இங்கே உங்களைப் போன்றோர் மிகவும் டெக்னிகலாகவும் மேம்போக்காகவும் பரிசுத்த தெய்வத்தை (JEHOVAH- the CREATOR GOD & JESUS CHRIST-the Son of GOD and the REDEEMER thars all) சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்;

வாழ்க,வளமுடன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


The sentence given below is from koottanchoru.wordpress.com.
//அவருக்கு நான்-வெஜ்தான் பிடிக்கும் போல, அதனால் ஏபல் ஆட்டை பலி கொடுப்பதை ஏற்றுக் கொள்வார், ஆனால் உழவன் கெய்னின் படையலை ஏற்க மாட்டார். கெய்ன் கடுப்பாகி தம்பி ஏபலை கொன்றுவிடுவான். எனக்கென்னவோ கொலையில் ஜெஹோவாவுக்கு பங்கிருப்பதாகத்தான் தோன்றுகிறது!//

ஐயா RV ,
தேவனுக்கு ஆபேல் தன்னுடைய ஆடுகளின் முதற்ப்பலனை கொடுத்தார். Abel gave FIRST preference to GOD. காயின் அப்படி செய்யவில்லை. அதனால்தான், தேவன் ஆபேலின் காணிக்கையை ஏற்றுக்கொண்டார். காணிக்கையைவிட கொடுப்பவரின் மனமே முக்கியம். Hope you understand that GOD is not biased here.
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இந்துக்களே, உங்களுக்கு இந்த கேள்விகள் எழவில்லையா??
Permalink  
 


நண்பர் அசோக் அவர்களுக்கு வாழ்த்துக்களுடன்...
தாங்கள் பின்னூட்டமிட்டுள்ள "விருட்சம்" என்பவர் பார்வையிடக்கூடிய தளத்திலும் தாங்கள் பதிவிடலாம்;அந்த தளத்தில் நான் பின்னூட்டமிட்டதின் பிரதியே இது;மேலும் விஷ்ணுவுக்கு எதிரான தங்கள் கூற்றுக்கான அதிர்வுகளும் தமிழ்ஹிந்துவில் பலமாக இருக்கிறது,கவனிக்கவும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நண்பர் விருட்சம்,
    நக்கலடிப்பது என்று முடிவு பண்ணிவிட்டால் யாரை வேண்டுமானாலும் நக்கலடிக்கலாம். நண்பர் சில்சாம் அவர்கள் விற்பனை பிரதிநிதிகளையும், வங்கிக்கடன் பிரதிநிதிகளையும் குறிப்பட்டது எதற்காகவெனில், தங்கள் சுயலாபதிர்க்காக அவர்கள் உங்கள் நேரத்தை திருடும்போது பொறுமை காக்கும் நீங்கள், உங்கள் நித்தியதிற்க்காக, சில உண்மைகளை, தங்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சிலமணித்துளிகள் கேட்கும் கிருஸ்துவ ஊழியர்களிடம் பொறுமையாக இருக்கமுடியவில்லையே. உங்களுக்கு நேரம்/விருப்பம் இல்லை என்றால், அவர்கள் ஒதுங்கி சென்றுவிடுவார்கள்.
  திருப்பதியில் இருந்து வந்தவுடன் லட்டு பகிரும், நவராத்ரிக்கு கொலு பார்க்க அழைப்பு விடுக்கும், நெடுநாளாக திருமணமாகாதவர்களை பார்த்து அன்புடன் திருமனஞ்சேரிக்கு சென்று வரச்சொல்லும் இந்து நண்பர்களை பார்த்து கிருஸ்துவர்கள் குற்றம் சாட்டியது உண்டா? ஆனால், தங்கள் ஆலயத்திற்கு ஒரு முறை வர அழைப்பு விடுக்கும் கிறிஸ்துவரை தேச துரோகி போல பார்ப்பது ஏனோ?
   கிருஸ்துவர்கள் பெரும்பான்மையினராக முயற்சி செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது. நீங்களே நினைத்து பாருங்கள், அப்படி பெரும்பான்மையினராகி என்ன சாதிக்க போகிறோம்? இப்போது பெரும்பான்மையை இருக்கும் இந்துக்கள், தாங்கள் பெரும்பான்மையை இந்த தேசத்தில் இருப்பதால் என்ன கண்டீர்கள்?
யோசிப்பீர்களா???
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நமது இந்து நண்பர்கள், நாம் இந்து மதத்தில் குற்றம் கண்டுபிடிக்கவே காத்து இருக்கிறோம் என்ற நினைப்பு இருக்கிறது. ஆனால், நாம் சத்தியத்தையே தேடுகிறோம் என்பதே உண்மை. மகாபாரதத்தில் இருந்து ஒரு நல்ல விஷயத்தை நான் இங்கு எடுத்து வைக்கிறேன்.
பாஞ்சாலி துகில் உரியப்ப்படும்போது, அவள் தன் கணவர்களை கூப்பிடுகிறாள், பலனில்லை.
தன் ஆடையை, தன் பலம் கொண்டமட்டும் பிடித்துக்கொள்கிறாள், ஆனால் துச்சாதனனின் பலத்திற்கு முன்னாள் எடுபடவில்லை.
கடைசியில் தன் கைகளை உயரத்தூக்கி, கிருஷ்ணனை கூப்பிடுகிறாள். இந்த முறை அவள், தன் சொந்த பலத்தை நம்பவில்லை, வேறு யாரையும் நம்பவில்லை (கணவனே கண் கண்ட தெய்வம் என்றாலும், கணவர்களையும் அவள் கூப்பிடவில்லை), கிருஷ்ணனை முழுமையாக சரணடைந்த பின்புதான் கிருஷ்ணன் வந்து அவளை இரட்சித்ததாக, பாரதம் சொல்கிறது. அதை இந்துக்கள் எந்த வித இடையூறுமின்றி ஏற்கின்றனர். பலரை அல்ல, ஒருவரை மட்டுமே முழுமையாக சரணடையும் போது இரட்ச்சிப்பு வருவதை இந்துத்துவமும் இங்கு ஏற்கிறது.
ஆனால், இதே போன்றதொரு தத்துவத்தை கிறிஸ்து ஒருவர் முலமே இரட்ச்சிப்பு என்ற கருத்தை, திருச்சிக்காரன் முதற்கொண்டு பலரும் மறுக்கின்றனர். கிறிஸ்துவை அவர்கள் பல தெய்வங்களில் ஒன்றாக வைக்க அவர்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், ரட்சிப்புக்கு ஒருவரிடம் மட்டுமே முழுமையாக சரணடைய வேண்டும் என்பதை இவர்கள் அறிவு ஏன் அறிய மறுக்கிறது???
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நண்பர் உமாசங்கர்,
   யாரையும் குற்றப்படுத்தும் நோக்கம் எமக்கில்லை. யாரையும் புண்படுத்தவும் நான் விழையவில்லை. போப்பின் பிரசங்கத்தை நான் கேட்டதில்லை, எந்த ஒரு பிஷப்பையும் சந்தித்ததில்லை. எந்த ஒரு மதத்தலைவரும் எனக்கு பரிட்சயம் இல்லை. யாருடைய தூண்டுதலின் பேரிலும் நான், நான் கிறிஸ்துவின் நற்செய்தியை பகிர்வதில்லை. எனக்கு வந்த கேள்விகள், நான் கண்ட பதில்கள், மேலும் என் அனுபவங்களை மற்றவர் முன் வைக்கிறேன், அவ்வளவே.
   நான் உங்கள் வேதத்தில் இல்லாதவைகளை குறித்து கேள்வி கேட்கவில்லை.
   எனது வேதத்தில் இல்லாதவைகளை குறித்து பேசவும் இல்லை.
   இதில் எது தவறு என்கிறீர்?
நன்றி,
அசோக்
 


__________________
«First  <  1 2 3 4  >  Last»  | Page of 4  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard