Many people look at you have got to exact footwork prior to writing. Can be conceivable to help you alot more pleasing article like this. digital marketing companies in china
It is a scripting spoken communication for the common purpose. PHP is one of the most best loved languages accepted across the world wide for development. PHP coating development is the best use for frameworks and provides a aim structure. PHP based web sites volunteer more room to grow as PHP adds more functionality to your web site and allows your site visitors to interact with you through scripts. PHP programming language projects customer-oriented and eye catching web sites as well as best active web pages. This is fastest growing scripting linguistic communication that takes your business beyond your anticipation grade in this extremely private enterprise marketplace. alexistogel
Spot up for this write-up, I actually think this excellent website wants far more consideration. I’ll probably be again to learn to read a lot more, thank you for that info. ko66
I recently came across your blog and have been reading along. I thought I would leave my first comment. I don’t know what to say except that I have enjoyed reading. hello88
I do not even know how I stopped up here, however I believed this post used to be great. I do not recognize who you are but certainly you’re going to a well-known blogger should you are not already Cheers! painel smm brasil
Howdy! Do you use Twitter? I’d like to follow you if that would be okay. I’m absolutely enjoying your blog and look forward to new updates. zing88.skin
I keep listening to the news bulletin lecture about receiving free online grant applications so I have been looking around for the most excellent site to get one. Could you advise me please, where could i get some?kubets.app
This is a good post. This post gives truly quality information. I’m definitely going to look into it. Really very useful tips are provided here. Thank you so much. Keep up the good works. استقدام من الفلبين
I had been honored to get a call from a friend immediately he identified the important recommendations shared in your site. Going through your blog posting is a real amazing experience. Thanks again for considering readers just like me, and I wish you the best of success being a professional topic. gemwin
இன்றும், என்னை பொறுத்தவரை கற்பனைகளுக்கு கீழ்படிவதைவிட தேவனுக்கு முழுமையாக கீழ்படிவதுதான் மிக மிக சிறந்தது. தேவனுக்கு கீழ்படிவதர்க்கும் கற்பனைகளுக்கு கீழ்படிவதர்க்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை நாம் அறிய வேண்டும்.// தேவகட்டளைக்கு கீழ்ப்படிவதும், தேவனுக்கு கீழ்படிதலும் வெவ்வேறு விஷயங்களா? இரண்டும் ஒன்றுதானே.
இயேசுவும், பிதாவும் ஒன்றுதானே.
// கற்பனைகளும் நீதிநியாயங்களும் பொதுவாக எல்லோருக்கும் எழுதி கொடுக்கப்பட்டவைகள். ஆனால் தேவனுக்கு கீழ்படிதல் என்பது, தேவன் சில நேரங்களில் பலருடைய நன்மையை கருத்தில்கொண்டு, தான் தெரிந்துகொண்ட சிலரை, சில தனிப்பட்ட விசேஷ வழிகளில் நடத்துவார்.//
தேவன் பாரபட்சமில்லாதவர்தானே.
// அப்பொழுது சில வார்த்தைகளை பொருட்படுத்தாமல் கடந்துபோகும்படி அவரே நம்மை வழிநடத்துவார் அதுபோல் ஒரு நிலையை நான் அனுபவித்திருக்கிறேன் அதற்க்கு ஆதாரமாக கீழ்கண்ட வசனங்களை எடுத்து கொள்ளமுடியும்!
எரேமியா 7:22. நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும், 23என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; // "பலியையல்ல கீழ்ப்படிதலையே விரும்புகிறேன்" என்று ஆண்டவர் சொன்னதை திரிக்கலாமா? //அதாவது இங்கு புரிதல் என்பது மிகசுலபம்!. உலகமா? தேவனின் கட்டளையா? என்று வரும்போது தேவனின் கட்டளைதான் உயர்ந்தது! ஆனால் தேவனா? அவர் எழுதிகொடுத்த கட்டளையா? என்று வரும்போது தேவன் சொல்வதுதை செய்வதுதான் சிறந்தது. இந்நிலையில் அவர் ஒரு கட்டளையை மீறசொல்லலாம் ஆனால் அதினால் நமக்கு நிச்சயம் ஒரு தீங்கு உண்டு ஆனால் ஆயிரம் ஆயிரம்பேருக்கு அதில் நன்மை இருக்கும். இந்நிலையில் நாம் தேவனுக்கு கீழ்படிந்து அவர் சொல்வதை செய்வதுதான் சிறந்தது. அவ்விதத்தில் பிதா என்ன சொல்லி அனுப்பினாரோ அதற்க்கு அப்படியே இயேசு கீழ்படிந்து அனைத்தையும் செய்து முடித்தார். பலரது நன்மையை கருத்தில்கொண்டு சில காரியங்களை மீறிசெயல்பட்டார்.//
பிதா, தான் இட்ட கட்டளையை தானே மீற சொல்வாரா? அதற்க்கு பதிலாக எந்த ஒரு பலியும் இல்லாமல் மனுக்குலத்தை முழுவதுமாக ரட்சித்திருப்பாரே...
இயேசு ஒரு கட்டளை மீறி இருந்தாலும், மரணத்திற்கு பாத்திரமானவரே, அப்படியானால், அவருடைய சிலுவை மரணம் அவர் பாவத்தை கழுவவே போதுமானதாய் இருக்கும், உமது ரட்சிப்பிர்க்கு மீண்டும் ஒரு குற்றமில்லா ஆட்டுக்குட்டி தேவைப்படும்.
//
இனியும் இதில் குற்றம்கண்டுபிடிக்க நினைத்தால் அதற்க்கு என்னிடம் பதிலில்லை. தேவனின் நேரடி வழிநடத்துதலை அறிந்தவர்கள் மட்டுமே இதை புரிந்துகொள்ள முடியும்! //
ஏசுவையே குற்றப்படுத்தும் நீர், பிசாசின் மூலம் வழிநடத்த படுகிறீரோ என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் பரிசுத்த ஆவி, இயேசுவை குற்றப்படுத்தாது.
இயேசு எந்த ஒரு கற்பனையையும் மீறவில்லை. "நான் கற்பனைகள் நிறைவேற்றவே வந்தேன்" என இயேசு கூறியுள்ளதை பாருங்கள். கற்பனைகள் நமக்கு என்ன கற்பிக்கிறது? பாவம் என்றால் என்ன என்று நாம் கற்பனைகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது. கற்பனையை மீறியவன் பாவியாகிறான். இயேசுவானவர் கற்பனையை மீறி இருந்தால், அவர் பாவியாவார். பிறகு அவருடைய மரணத்தில் நம் பாவம் எப்படி பரிகரிக்கப்படும்?
ஓய்வு நாளில் என்ன செய்யலாம், என்ன செய்ய கூடாது என்று பார்த்தால், உங்களுக்கு உண்மை புரியும். அந்தகால சாஸ்திரிகள், நீங்கள் கூறியபடி இரண்டு விஷயங்களில் இயேசுவை குற்றப்படுத்தினார்.
1 ) ஒரு மனிதன் தன்னை தேவனுக்கு நிகராக உயர்த்தியது.
2 ) ஓய்வு நாளில் செய்ய கூடாத காரியத்தை செய்தது.
நான்றாக பாருங்கள், ஏசுவின்மேல் இந்த இரண்டு பழியும் விழாது. அவரே தேவனாய் இருப்பதால், அவர் தன்னை தேவனுக்கு நிகராக உயர்த்தியது தவறல்ல. ஓய்வு நாளில், "உலக பிரகாரமான காரியங்களைத்தான்" செய்யக்கூடாது. இயேசு, அவர் நாட்களில் எந்த உலகப்பிரமான காரியத்தை செய்தார்? ஓய்வு நாளில் போதனை செய்வது தவறா? தவறில்லையே!!! அதேபோல், அவர் தனது செயல்களினாலே போதனை செய்தார். மனுஷகுமாரனுக்கு மன்னிக்கும் அதிகாரம் இருக்கிறது என்றும், மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவரை இருக்கிறார் என்றும் தன் "செயல்களின்" மூலம் போதனை செய்தார். தொழில் ரீதியில் தச்சனான இயேசு, ஓய்வு நாளில், தச்சுவேலை செய்து இருந்தால் அவர் கற்பனையை மீறியவர் என்று குற்றம் சாட்டலாம். மேலும், ஒரு செயலை விட, செயலுக்குண்டான நோக்கமே முக்கியமாய் இருக்கிறது. வேதத்தை பரிசுத்த ஆவியின் துணையுடன் படியுங்கள். இல்லாவிட்டால் பைத்தியமாக நேரிடலாம்.
நண்பர் சுந்தர் அவர்களே,குறிப்பிட்டதொரு வேத வசனத்தை வியாக்கியானம் செய்வதைக் குறித்த வழிகாட்டு நெறியினையே நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்;
அதற்கு தாங்கள் இன்னும் இணக்கமான பதிலை முன்வைக்கமுடியும்; குறிப்பாக தங்களது குறிப்பிட்ட வியாக்கியானம் மற்றொருவருடைய நம்பிக்கைக்கும் பொதுவான விசுவாசத்துக்கும் எதிரானதாக - அதாவது தடுக்கலாக இருக்குமானால் - அந்த தடுக்கல் நீக்கப்பட - தவறை ஒப்புக்கொள்ள வேண்டுமே தவிர 'ஏற்றால் ஏற்கலாம்,இல்லாவிட்டால் பரவாயில்லை,நான் சொன்னதே சரியானது ' என்று விலகிச் செல்வதைப் போல நடந்துக்கொள்ளக்கூடாது;நீங்களும் கூட சரியானதைப் புரிந்துக்கொள்ளவேண்டும் என்பதே எமது நோக்கம்..!
தங்களுடைய கருத்து கிறித்தவ உலகத்தில் கேள்விப்பட்டிராத புதிய கருத்து;ஆனால் அதற்கு இணைவாக்கியம் எங்கே? யூகத்தினடிப்படையிலேயே நீங்கள் இதுபோன்ற கருத்தை- அதாவது "இயேசு கற்பனையை மீறியதாலேயே அவர் வந்த நோக்கம் நிறைவேறியது" எனும் கருத்தை முன்வைக்கிறீர்கள்;அதனை சரிசெய்ய மீண்டும் அந்த திரிக்கு உயிர்கொடுத்து ஆரோக்கியமான விவாதத்துக்கும் தீர்வுக்கும் வழிசெய்யுங்கள்..!
சந்தோஷ்: //ஒரு தவறான கருத்தை சொல்லிவிட்டு, திரியையும் நீக்கிவிட்டு திரி நீக்கிய காரணமாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது சரியில்லாத செயல்//
சுந்தர்: //சகோதரரே வேதம் சொல்வதை தான் எழுதியிருக்கிறேன்;ஆனால் அது தவறான கருத்து என்று நீங்கள் சொல்கிறீர்கள்;வேதமே தவறாக சொல்கிறது என்றால் அதற்கு யார் பொறுப்பு? //
நண்பர் சுந்தர் அவர்களே,ஏன் இப்படி முரண்டு பண்ணுகிறீர்கள்; நீங்கள் அவசரப்படாமல் யோசியுங்கள், நீங்கள் வசனத்தை மட்டும் எழுதவில்லை, வசனம் ஒருபோதும் தவறாகாது; 'அந்த வசனத்தின் கருத்து இதுதான்' என்று நீங்கள் புதியதொரு கொள்கை விளக்கத்தைத் தருவது தான் தவறான கருத்து..!
தோண்டியெடுப்பதும் வாதிப்பதும் வாசகரின் நலனுக்காகவே; சுயநலத்துக்காக அல்லவென்று அறிய வேண்டுகிறேன்;
//"அவர் தேவனுக்கு சமமானவர்" என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை "அவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார்" என்பதிலும் இருக்கிறது. //
நண்பர் சுந்தர் அவர்களே, மிக சாமர்த்தியமாக எனது வாதத்தினைப் பயன்படுத்தி நுணுக்கமானதொரு கேள்வியை எழுப்பியிருக்கிறீர்கள்; பாராட்டுக்கள்..!
நான் சொல்லுகிறேன், இயேசுவானவர் தேவனுக்கு சமமானவரல்ல என்று பரிசேயர் (அவரைக் குற்றஞ்சாட்டியது) எண்ணியது எத்தனை பொய்யானதோ அத்தனை பொய்யானது அவர் ஓய்வுநாள் கற்பனையை மீறினார்,என்பதும்..!
ஏனெனில் அதே யோவான் 8:46 - ல் சவால் விடுகிறார்; தாம் ஓய்வுநாள் கட்டளையை மீறவில்லை என்பதை பல்வேறு சூழ்நிலைகளில் அவர் நிரூபித்துள்ளார்;
இதனை சந்தோஷ் அவர்கள் மிக நேர்த்தியாக விளக்கியுள்ளார்;
இயேசுவானவர் தம்முடைய மலைப் பிரசங்கத்தில் மிகத் தெளிவாகச் சொன்னது, 'கற்பனையை அழிக்க அல்ல,நிறைவேற்றவே வந்தேன் ' என்பதாகும்..!
-- Edited by chillsam on Sunday 30th of May 2010 12:56:05 AM
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
////வேத வசனங்களை எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம், எடுத்துக் கொள்ளலாம். அவை மூன்று கருத்துக்களை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். 1. அதை படித்த பின்பு தேவ பக்தி அதிகரிக்க வேண்டும் 2. உண்மையானதாக இருக்க வேண்டும் 3. பிறருக்கு தடுக்கல் ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.////
தேவனது வாத்தைகளின் வல்லமையை விளக்குவதற்கும் அதன்மேல் மனிதர்களுக்கு பயபக்தி அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே வசனத்தின் அடிப்படையில் அந்த பதிவு இடப்பட்டது ஆனால் அதன் நோக்கம் அறியப்படாமல் அது வேறு கோணத்தில் திரும்பவே பிறருக்கு தடுக்கலாக இருக்க கூடாது என்ற எண்ணத்தை கருத்தில் கொண்டு அத்திரி நீக்கப்பட்டது இங்கு மீண்டும் அதை தோண்டி எடுக்கவேண்டும் என்று விரும்புவது நீங்கள்தான்.
////ஒரு தவறான கருத்தை சொல்லிவிட்டு, திரியையும் நீக்கிவிட்டு திரி நீக்கிய காரணமாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது சரியில்லாத செயல்////.
சகோதரரே வேதம் சொல்வதை தான் எழுதியிருக்கிறேன். ஆனால் அது தவறான கருத்து என்று நீங்கள் சொல்கிறீர்கள். வேதமே தவறாக சொல்கிறது என்றால் அதற்க்கு யார் பொறுப்பு?
நான் இயேசுவை பாவம் செய்தார் என்றோ அல்லது அவர் குற்றவாளி என்றோ நான் தீர்க்கவரவில்லை அவர் தேவ நடத்துதலின் அடிப்படையில் அல்லது பிதாவின் சித்தத்தின் அடிப்படையில் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார் (அதன் மூலம் புதிய ஏற்பாட்டின் மூலஉபதேசத்துக்கு அவர் முன்மாதிரியானார்) என்று குறிப்பிட்டிருந்தேன் அதில் எதுவும் தவறு இருப்பது போல் எனக்கு தெரியவில்லை சகோதரரே.
இன்று ஒரு கிறிஸ்த்தவர் ஒய்வுநாளில் வியாபாரம் செய்தால் அவரை கொலை குற்றவாளி என்று சொல்ல முடியுமா ஆனால் இஸ்ரவேலருக்கோ அது கொலைக்குற்றம். இந்நிலையில் புறஜாதியார் நீதிமன்றத்தில் நின்ற இயேசுவை அதுஒரு குற்றம் என்று சொல்லமுடியாத காரணத்தால் பொய் சாட்சியை தேடினர்.
இப்பொழுது மீண்டும் நான் சுட்டிய வசனத்தைபற்றி இங்கு பார்ப்போம் :
யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
இங்கு யூதர்கள் இயேசுவின் இரண்டு செய்கை நிமித்தம் அவரை கொலை செய்யும்படி வகை தேடினர் என்று வசனம் சொல்கிறது.
1. அவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார்
2. அவர் தன்னை தேவனுக்கு சமமாக்கினார்
ஓன்று இதில் இரண்டும் உண்மையாக இருக்கவேண்டும் அல்லது இரண்டும் தவறாக இருக்கவேண்டும்.
"அவர் தேவனுக்கு சமமானவர்" என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை "அவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறினார்" என்பதிலும் இருக்கிறது.
பரிசேயர் பார்வையில் அவர் தேவனுக்கு சமமானவர் அல்ல என்பது உண்மை என்றால் அவர் ஓய்வுநாள் கற்பனையை மீறியதும் உண்மை அல்ல
ஒரு சிலர் தங்களுக்கு வேண்டும் போது வசனத்தை யாருக்கு சொல்லப்பட்டாலும், எப்படி சொல்லப்பட்டாலும் தங்களுக்கு வேண்டிய மாதிரி அர்த்தம் எடுத்து கொள்ளுகின்றனர். ஆனால் இவர்களே சில சமயங்களில் ஒரு வசனம் சொல்லப்பட்டால் அது சொல்லப்பட்டது போன்றேதான் அர்த்தம் எடுத்து கொள்ள வேண்டும். வேறு மாதிரி புரிந்து கொள்வது தவறு என வாதிடுவது வியப்பை அளிக்கிறது. ஒரு தவறான கருத்தை சொல்லிவிட்டு, திரியையும் நீக்கிவிட்டு திரி நீக்கிய காரணமாக அடுத்தவரை குற்றம் சாட்டுவது சரியில்லாத செயல்.
என்னை பொறுத்த வரை வேத வசனங்களை எப்படி வேண்டுமானாலும் விளக்கலாம், எடுத்துக் கொள்ளலாம். அவை மூன்று கருத்துக்களை உறுதி செய்வதாக இருக்க வேண்டும். 1. அதை படித்த பின்பு தேவ பக்தி அதிகரிக்க வேண்டும் 2. உண்மையானதாக இருக்க வேண்டும் 3. பிறருக்கு தடுக்கல் ஏற்படுத்துவதாக இருக்க கூடாது.
வேத வசனங்களை விளக்கும் போது அனேகர் சூழ்னிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எந்த சூழ்னிலையில், யாருக்கு எப்படி சொல்லப்பட்டது என்று பார்த்தால் அனேக காரியங்கள், சத்தியங்கள் தெரிய வரும். உதாரணமாக நான் எழுதிய ஒரு கட்டுரையில் லோத்தின் குடும்பம் ஓடிப் போக தாமதித்த காரணம் அவர்கள் பொன், பொருள், மது முதலியவை எடுத்து வைத்துக் கொண்டதில்னால்தான் என்று எழுதியுள்ளேன். ஆனால் இவை அப்படியே வேதத்தில் இல்லை. ஆனால் இதன் மூலமாக பல கருத்துக்களை அறிய வாய்ப்புள்ளது.ஒருவர் தாமதிக்கிறார் என்றால் வேறு காரணம் என்னவாக இருக்க முடியும் நான் எழுதியதை தவிர?
-- Edited by SANDOSH on Friday 28th of May 2010 09:22:28 PM
// ஆசியாவின் ஏழு சபைகளூக்கு சொல்லப்பட்ட வசனஙகளில் இந்தியா சேராத போதும், ஜெயங்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் தனக்கு சாதகமாக, தனக்கு மட்டுமே சொல்லப்பட்ட வசனஙகளாக எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை;ஆனால் யோவான் 5:18 மட்டும் மிகவும் சரியாக கொடுத்திருக்கபட வேண்டும். வெளீ சுவி 2 மற்றும் 3 யாருக்கு கொடுக்கப்பட்டாலும் அது நமக்குத்தான் சேரும். //
நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கும் மேற்கண்ட வரிகள் யாருடைய கருத்து..?
அவை மேற்கோள் காட்ட தரப்பட்டவை என்றே எண்ணுகிறேன்.
யோவான் 5:18 அவர்( இயேசு) ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
மேற்கண்ட வசனத்தின் படி இயேசுவானவர் ஓய்வுநாள் பிரமாணத்தை மீறியது போலவே அதன் மற்றொரு (குற்றச்சாட்டான) பகுதியான தேவனுக்குத் தம்மைச் சமமாக்கி தேவதூஷணம் செய்தார் என்றும் கூறமுடியும்;
இது பரிசேயர் பார்வையிலான சுவிசேஷகனின் கூற்று மற்றும் இயேசுவானவர் சாதாரண மனிதன் என்று கொள்வோமானால் இந்த வசனம் மிகச் சரியானதாக இருக்கும்;
ஆனால் அவர் மனிதன் மட்டுமல்ல தேவன் என்று நிரூபிக்க யோவான் சுவிசேஷ ஆக்கியோன் அவசரப்படாமல் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் கொண்டே வருகிறார்;
எனவே வசனங்களை "பிக்"(Pick) பண்ணி அவசர முடிவுக்கு வந்து கொள்கைகளை அறிவிக்காமல் அதன் முழுபொருள் அல்லது "காண்டெக்ஸ்ட்"(Context) எனப்படும் சூழமைவைக் கொண்டு முடிவுக்கு வரலாம்;
இதுபோலவே இயேசு தேவன் அல்ல,தேவகுமாரன் என்றும் அவர் தேவகுமாரன் கூட அல்ல,பிரதான தூதன் மிகாவேலின் அவதாரம் என்றும் பயங்கரமான போதகங்கள் பரவிக் கிடக்கிறது;
சுவிசேஷத்தின் இறுதிவரை வாசித்தே முடிவுக்கு வரமுடியும்;உதாரணமாக ஒரு கடிதத்தை வாசித்து முடித்தபிறகே அதன் முழுசெய்தியையும் அறிகிறோம்;கால்வாசி, அரைவாசி வாசித்துவிட்டு முழுவதும் வாசித்தறிந்த திருப்தியினைப் பெறுவோமா?
அதுபோலவே எந்தவொரு வேதப் பகுதியையுமே "ப்ரேக்"(Break) பண்ணாமல் முழுவதுமாக வாசித்தபிறகே போதனைகளை உருவாக்கவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)