Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏக இறைவனுடைய நாமம் "நாராயணனா?"


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
ஏக இறைவனுடைய நாமம் "நாராயணனா?"
Permalink  
 


ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் சொல்லும்போது நேரடியாக விஷயத்துக்கு வருவதையே பெரும்பாலானோர் விரும்புவர்;ஆனால் என்னுடைய தனிப்பட்ட பெலவீனம் என்னவென்றால் அந்த குறிப்பிட்ட கருத்தினூடே தோன்றும் மற்ற எண்ணங்களையும் விமர்சனங்களையும் இங்குமங்கும் கேள்விப்பட்ட தகவல்களையும் இணைத்துக் கொள்கிறேன்;இதனை விவாதத்தைப் பொருத்தவரையிலும் சரி சொற்பொழிவுகளின் போதும் சரி தவிர்க்கமுடியவில்லை;எனது தள நண்பர்கள் என்னிடம் குறைபட்டுக் கொள்ளும் முக்கியமான விஷயம் இதுவே;என‌வே நான் என்ன முடிவு செய்திருக்கிறேன் என்றால் நான் திருந்தப்போவதில்லை;ஏனெனில் என்னுடைய அறியாமையையும் குறைகளையும் மறைப்பதே இந்த சுற்றி வளைக்கும் போக்குதானே..!

இனி நண்பர் சுந்தர் அவர்களது கருத்துக்கு வருவோம்...
பரிசுத்த வேதாகமம் எனும் பைபிளை கையில் எடுத்துள்ளவருக்கு அதை வாசிக்கும் உரிமையைத் தவிர அதைக் குறித்துப் பேசும் உரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது;இதுவும் கூட ஒரு தேர்ந்தெடுப்பாக அல்லாமல் கடமையாகவே கையளிக்கப்பட்டுள்ளது;ஆனாலும் வாசித்து அதை உரைப்பதற்கும் அதை விவரிப்பதற்கும் இடையில் அதிக எச்சரிக்கையுணர்வு தேவைப்படுகிறது;

பரிசுத்த வேதாகமத்தை எதனுடனும் ஒப்பிடாமல் முழுமையாக அதனை நம்புவோர்க்கு மட்டுமே அது தன்னை வெளிப்படுத்திக் காட்டும்;இதன் கருத்துக்களை மற்ற வேதங்களில் காண்பது போலிருந்தாலும் அது முழுவதுமே ஒத்துப்போவதில்லை;ஒரு தவறான கொள்கையை நிரூபிக்க வேதத்தின் இண்டு இடுக்குகளில் நுழைந்து பரிசுத்த வேத எழுத்துக்களை மனம்போன போக்கில் வளைக்கப் பார்ப்பது அறிவுடைமையாகாது;

வேதத்துக்கு வெளியே இருக்கும் ஒரு கொள்கையை நிரூபிக்க வேதம் உரைக்கப்படவில்லை;வேதமே அனைத்துக்கும் இறுதியானது;

பவுலடிகள் இந்த மனப்பான்மையுடன் வந்ததாலேயே தாம் முன்பு அறிந்திருந்த‌ அனைத்தையும் குப்பை என்கிறார்;

செயற்கையாக வேதங்களுக்குள் இணைப்பு கொடுக்க முயற்சித்தால் அது அக்பரின் "தீன் இலாஹி" போலவே இருக்கும்;

// "மனிதன் ஒருதரம் மரிப்பதும் பின்னர் நியாயம் தீர்க்கப்படுவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது" //

இந்த வார்த்தையானது பவுல் மூலம் கூறப்பட்டதென்பது நிச்சயிக்கப்படவில்லை; போகட்டும், இந்த குறிப்பிட்ட வார்த்தை ஒரே பிறப்பையும் அதன்பிறகு நியாயத்தீர்ப்பையும் கூறும்போது அதனைத் தொடர்ந்து வரும் வேதப்பகுதிகளும் அதையே ஆமோதிக்கும்போது வேதம் மௌனம் சாதிக்கிறது என்றால் நான் செவிடனாகிவிட்டேன் என்றே அர்த்தமாகும்;

பௌத்த மதம் என்ன பழம்பெரும் கலாச்சாரங்களான எகிப்திய கிரேக்க பாரம்பரியத்திலும்கூட மறுபிறவிக் கொள்கை இருந்தது; எகிப்திய மன்னர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்ற நம்பிக்கையினாலேயே பிரமிடுகள் உருவானது; கத்தோலிக்கர்களும் அந்த மாயையில் சிக்கி கோவாவில் ஒரு புனிதரை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனராம்; காலப்போக்கில் அதுவே ஒரு அதிசயமாகிவிட்டது; அதை விட உடல் தானம் தரும் நாத்திகனை நான் பாராட்டுவேன்;


(அண்மையில் மேற்கு வங்க கம்யூனிசத் தலைவர் ஜோதிபாசு அவர்கள் மரித்தாரே, அவருடைய உடல் புதைக்கப்படவுமில்லை, கொளுத்தப்படவுமில்லை; மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாகக் கொடுக்கப்பட்டுவிட்டது..! )

மரித்த ஆவிகள் மற்றும் மறுபிறப்பு தொடர்பான நம்பி
க்கைகள் காரணமாகவே விழாக்களும் பல்வேறு கூத்துக்களும் கொண்டாட்டங்களும் இன்றுவரை பிரேசில்,தாய்லாந்து போன்ற வட்டாரங்களில் நடந்து வருகிறது;அதற்கும் நம்ம ஊர் கூழூற்றும் திருவிழாவுக்கும் அழகர் ஆற்றில் இற‌ங்குவது மற்றும் சூரசம்ஹாரம் விழாவுக்கும் பெரிய வித்தியாசமிராது; அந்த விழாக்களின் அருவருப்பான காரியங்களைப் பார்த்து உணர்ந்த நான் எப்படி என் ஆண்டவரை அந்த நம்பிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்க்கமுடியும்;ஒருவர் மௌனமாக அமர்ந்திருப்பதாலேயே அவர் நாம் சொல்வதற்கெல்லாம் சம்மதிக்கிறார் என்று அர்த்தமாகிவிடுமா என்ன?

பரிசுத்த வேதாகமம் சிருஷ்டிகரால் உரைக்கப்பட்டதால் அதன் கொள்கைகளில் எந்த குழப்பமும் மாற்றமும் சமரசமும் செய்யாமல் ஆதிமுதலே சரியானதையே மனிதனுக்குச் சொல்லிவருகிறது;

உதாரணமாக வேதத்தில் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிடப்படும்  தலைமுறைகளின் பட்டியலை கவனித்தால் இந்த உண்மை தெரியவரும்; அதில் மறுபிறவியையல்ல,சந்ததி என்றே குறிப்பிடப்படுகிறது;

முதல் கொலையான "ஆபேல்" மீண்டும் பிறந்தான்,என நம்முடைய ஆதித் தாயான ஏவாள் குறிப்பிடாமல் அவனுக்கு பதிலாக "சேத்" எனும் குமாரனைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறதையும் காண்கிறோம்;

ஆபிரகாம்,ஈசாக்கு,யாக்கோபு எனும் அற்புதமான முற்பிதாக்களைப் பற்றி வேதம் சரியானதொரு அறிமுகத்தைக் கொடுக்கிறது;

மறுபிறப்போ,மறுபிறவியோ தேவசித்தமாக இருந்தால் அதையும் வெளிப்படையாகவே வேதம் பேசியிருக்கும்; அதிமுக்கியமான தெய்வத்துவம் சம்பந்தமான காரியங்களில் மறைபொருளாக உரைக்கவோ மௌனமாக இருக்கவோ அவசியமில்லாமல் வேதம் தனது தரப்பை தெளிவாகவே விளக்கியிருக்கிறது;

"மறுபிறப்பு" என்பதற்கும் "மறுபிறவி" என்பதற்கும் அதிக வித்தியாசமுண்டு;இதைக் குறித்து இன்னும் விவரமாக எழுதமுடியும்; இங்கே நண்பர் சுந்தர் அவர்களால் ஆராயப்படும் பொருளை "மறுபிற‌வி" எனும் வார்த்தையால் குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.


// மரித்த தாவீது எப்படி  மீண்டும் ஜனத்தின் நடுவில் அதிபதியாக இருப்பான்,அதுபோல் நோவா,தானியேல்,யோபு இவர்கள் மூவரும் ஏற்கெனவே பிறந்து மரித்துவிட்ட நிலையில்...//

பழைய ஏற்பாடு மௌனமாக இருந்ததாகச் சொன்ன நண்பர் இந்த வசனத்தின் மூலம் என்ன சொல்லுகிறார், திடீரென வேதம் மௌனத்தைக் கலைத்துக்கொண்டதா என்ன?

இந்த வார்த்தைகளை மாத்திரமே ஆதாரமாகக் கொண்டு வேதத்துக்குப் புறம்பான ஒரு கொள்கையை அதன் மீது திணிக்க முடியாது; இதுபோன்ற துணிகரத்தைத் தடுக்கவே வேதம் கீழ்க்கண்ட எச்சரிக்கையை விடுக்கிறது;

"இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார்.

ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும்,அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்."(வெளிப்படுத்தல்.22:18,19 )

தீர்க்கதரிசிகள் பொதுவாகவே கவித்துவமாக அநேகக் காரியங்களைச் சொல்லிவைத்தார்கள்;அதில் சொல்லவரும் உண்மைகளை ஒப்பீட்டின் அடிப்படையில் பிரபலமான முன்னோர்களை மேற்கோள் காட்டி பல காரியங்களைச் சொல்லியிருக்கலாம்;அதையும் வேதத்தின் கொள்கையாக நிறுவ முடியாது;ஏற்கனவே பிரபலமான பரிசுத்தவான்களின் காலத்தை நினைவுபடுத்தும் முயற்சிதானே தவிர இவை மறுபிறவிக் கொள்கைக்கான ஆதாரமல்ல;

உதாரணமாக நம்முடைய அரசியல்வாதிகள் காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்கிறார்களே, அதற்கு காமராஜர் மீண்டும் பிறவியெடுத்து வரப்போகிறார் என்பதா அர்த்தம்?

//நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;//

இந்த வசனத்தின் பொருளை அத்தனை சாதாரணமாக விளக்கிவிடமுடியுமா என்ன?

மறுபிறவிக்கு ஆதாரமாக இதில் எதுவுமிருப்பதாகத் தெரியவில்லை; முதலும் முடிவுமானவர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டாலும் தற்போதய நிலையில் தம்மை உயிருள்ளவராக வெளிப்படுத்தும் சாட்சியை நண்பர் வசதியாகக் கண்டுக் கொள்ளாமல் விட்டிருக்கிறார்;

உயிருள்ளவர் என்றால் நம்முடைய புரிதல் படியான உயிருள்ளவராக அல்ல; "சாவாமையுள்ள நிலையில்" என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்;

மறுபிறவியின் தத்துவம் என்ன,ஒருமுறை வாழ்ந்து மறைந்துவிட்ட ஆவியானது அது குடியிருந்த ஊனுடல் பயனற்றதாகிவிட்டதால் மற்றொரு உடலை உருவாக்கிக் கொண்டு இந்த உலகில் வந்து பிறந்து வாழ்வதுதானே?

அதைப் போன்றதொரு ஆவியை தம்முடைய அடியவர்கள் மீது இறைவன் பரிசுத்த ஆவி என்று பொழியவில்லை;ஏனெனில் அவர் உயிருடனே இருக்கிறார்;அதுவும் பூமியிலிருந்தபோது எந்த தேகத்தில் வாழ்ந்தாரோ அதே சரீரத்துடன்..!

ஒரு மனிதன் தன் சுயாதீனத்துடனும் தேவனுடைய ஆவியானவருடைய நடத்துதலுடனும் பாவத்துக்கு விலகி நீதியைச் செய்ய உதவும் தன்மையுடைய ஆவியையே பொழிந்தருளினார்;அதுவே வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட ஆவி எனப்படுகிறது;

இந்த மகாமேன்மையான அன்பின் பரிசை சாதாரண மனித அறிவுடன் அணுகி ஏதோ காந்தி தாத்தாவின் ஆவி போல எண்ணுவது எத்தனை மடமையானது என்பதை எனது அன்புக்குரிய நண்பர்கள் உணரவேண்டும்;

// "மனுஷக்குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" //

இது பூமியிலிருந்தபோது ஆண்டவர் இருந்த நிலையினைக் காட்டவே உரைக்கப்பட்டது;இன்று அவருடைய அடிமைகளான நாங்களும் இப்படியே அரதேசிகளும் பரதேசிகளுமாக இருந்து சுயதேசத்துக்குச் செல்லக்காத்திருக்கிறோம்;

// பூமியின் கொள்ளளவுக்கு மேல் இங்கு இருக்க  யாருக்கும்  இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் இடம் கொடுக்க மாட்டான் //

பூமியின் கொள்ளளவை சாத்தான் எப்படி ஐயா நிர்ணயிக்க முடியும்?

உயிர்களை உருவாக்கவோ இயற்கையின் மீது அதிகாரம் செலுத்தவோ சாத்தானுக்கு
இறைவன் எந்த அதிகாரத்தையும் கொடுக்கவில்லை;

நான் சொல்கிறேன் நரகத்தின் கொள்ளளவையும் அக்கிரமத்தின் நிறைவாகுதலையுமே நியாயாதிபதியான இயேசுவானவர் கணித்துக்கொண்டிருந்து தாமதிக்கிறார்..!



-- Edited by chillsam on Saturday 6th of February 2010 11:06:27 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 86
Date:
Permalink  
 

MY CONCLUSION

As brother Chillsam told, it is not advisable for the one who accepted Jesus Christ in his life to use the names of other religious Gods as equal to Jesus name

My idea about rebirth is not clear so I cannot comment now.

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

chillsam wrote:
 
2. இரண்டு,கர்மா,சுழற்சி,மறுபிறவிக் கொள்கையினை நீங்களும் மனதார நம்புகிறீர்களா? அப்படியானால் எதன் அடிப்படையில்?
 

"மனிதன் ஒருதரம் மரிப்பதும் பின்னர் நியாயம் தீர்க்கப்படுவதும் அவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது"
 
என்ற பவுலின் வார்த்தைக்கு  இணங்க இந்த  பூமியில் புதிய ஏற்பாட்டு  காலத்தில் மனிதனின்   மரணத்துக்கு  பின்  நியாயதீர்ப்பேயன்றி  மறுபிறப்பு என்பது இல்லை என்பதை நான் ஏற்கிறேன்! 
 
அதே நேரத்தில் பழைய ஏற்பாட்டு காலத்தில் இந்த மறுபிறப்பு பற்றி வேதம் மௌனிப்பதாலும், கிறிஸ்த்துவுக்கு  முன்னுள்ள   இந்து/ பௌத்த மதங்கள் மறுபிறப்பை ஏற்ப்பதலும்  நமது   வேதத்தில் உள்ள  சில கருத்துக்களின் அடிப்படையில் மறுபிறப்பு இருக்கலாம்  என்று நம்ப தோன்றுகிறது. (இஸ்லாம் கிறிஸ்த்துவுக்கு பிறகு என்பதால் அது மறுபிறப்பை மறுக்கிறது)  
 
 உதாரணமாக தாவீது எப்பொழுதோ மரித்துபோயவிட்ட நிலையில் எசேக்கியேல் புத்தகத்தில் 34 அதிகாரத்தில்
 
23 அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; என் தாசனாகிய   தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; என்று கர்த்தர் கூறுகிறார்!
 
மரித்த தாவீது எப்படி  மீண்டும் ஜனத்தின் நடுவில் அதிபதியாக இருப்பான்?
 
அதுபோல் நோவா தானியேல்  யோபு இவர்கள் மூவரும் ஏற்கெனவே பிறந்து மரித்துவிட்ட நிலையில் 
 
13 மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை  அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். 14 அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
 
மரித்த அவர்கள் மூவரும்  எப்படி மீண்டும் கர்த்தர்   அழிக்கபோகும் தேசத்தின் நடுவில் இருக்கமுடியும்?
 
இதைவிட முக்கியமாக ஒரு விஷயம் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்த்துவை  வேதம் முதினவரும் பிந்தினவரும் என்கிறது!
 
வெளி  
1:17நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; 18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்;
 
இயேசுவானவர் சர்வசிஷ்டிக்கும் முதல் பேரானவர் என்பதாலும் அவர் மூலமாகவே அவருக்காகவே  எல்லாம் படைக்கப்பட்டது என்று வேதம் சொல்வதாலும் அவர் முந்தினவர் என்பது நமக்கு சுலபமாக  புரியவருகிறது.
 
ஆனால் அவர் பிந்தினவர் என்பதன் பொருள் என்ன?
 
இயேசு பிறந்து மரித்த பிறகும் அனேக புது புது மக்கள் தோன்றி  மரித்துகொண்டு இருந்தால் எப்படி அவர் பிந்தினவர் ஆகமுடியும்?  எனவே எனது கருத்துப்படி, இயேசுவே இந்த உலகுக்கு வந்த கடைசி மனிதர். அவருக்கு பின்னால் வரும் ஒவ்வொருவரும் மறு சுழற்ச்சியே என்று கருதுகிறேன். 
 
அதாவது இந்த உலகில் மனிதர்கள் கணக்கில்லாமல் ஏனோ தானோ என்று படைக்கப்பட்டுகொண்டே இருக்கவில்லை. எதற்குமே  ஒரு அடிப்படை வரையறை உண்டு. அந்த குறிப்பிட்ட வரையறை முடிந்தபோது இறுதியாக (காலம் நிறைவேறியபோது)  ஆண்டவராகிய இயேசுவே மாமிசமாக வந்தார். பூமியின் கொள்ளளவுக்கு மேல் இங்கு இருக்க  யாருக்கும்  இந்த உலகத்தின் அதிபதியாகிய சாத்தான் இடம் கொடுக்க மாட்டான் என்பதான் "இயேசு மனுஷ குமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை" என்றார் இறுதியில் அவருக்கு உலகில் இருக்க இடம் கொடுக்காமல் அவரை  சிலுவையில் அடித்து மேலே  தொங்கவைத்து தோற்றுபோனான்!    
 
அவருக்கு பிறகு பிறந்த ஒவ்வொருவரும் மறுசுழற்ச்சியில் வந்தவர்களே என்று நான் கருதுகிறேன்.  இது பிற மத வேதங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் எழுதப்பட்ட எனது சொந்த கருத்து!
 
இந்த கருத்துக்கு வேதத்தின் அடிப்படையில் எதிர்ப்பு இருக்குமானால் பதியலாம் கருத்தை மாற்றிகொள்கிறேன்!  

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// இரண்டாவதாக இயேசு பிறப்பதற்கு முன்புவரை  வாழ்ந்த  மக்கள்  இந்துக்கள்; வேதத்தில் சொல்லப்பட்டதுபோல்  கர்மா அடிப்படையில்  நியாயம் தீர்க்கப்பட்டு சுழற்சி  முறையில்  பூமியில் மறுபிறவி அடைந்தார்கள்; வள்ளலார் அவர்களின் வெளிப்பாடுபடி சுமார் 108 படி நிலைகளை கடந்து,பரிசுத்தமானவர்கள் மட்டுமே இறைவனோடு கலக்கும் நிலை இருந்தது அது வள்ளலார்   போன்ற ஒரு சிலராலே சாத்தியமானது;சாதாரண பாமரமக்களால் அது முடியாத ஓன்று //

அன்பு நண்பர் சுந்தர் அவர்களுக்கு, எந்த நிலையிலும் (நீங்கள் என்னை வெறுத்தாலும்) உங்கள் நட்பை இழக்காத விரும்பாத நான்  எச்சரிக்கையுடனே எழுதுகிறேன்;

முதலில் நாராயணன் என்ற நாமத்தைக் குறித்த பதிவு முழுவதும் உங்கள் சொந்த கருத்தா அல்லது உங்கள் நண்பரை அவர் வழியிலேயே சென்று ஆதாயப்படுத்த எண்ணி கூறிய உட்பொருள் சார்ந்த கருத்தா என்பதை தயவுசெய்து விளக்கவும்;

ஏனெனில் மூன்று முக்கிய விவகாரங்கள் இதில் பின்னி பிணைந்துவிட்டது;

1. இந்துக்கள் கிறிஸ்துவுக்கு முன்னரும் இருந்தனர் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா?

2. இரண்டு,கர்மா,சுழற்சி,மறுபிறவிக் கொள்கையினை நீங்களும் மனதார நம்புகிறீர்களா? அப்படியானால் எதன் அடிப்படையில்?

3. வள்ளலார் கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி இறைவனுடன் கலந்துவிட்டார் என்பதை நம்புகிறீர்களா?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam wrote:
/// பிரச்சினை என்னவென்றால் அநேகர் சொல்வதுபோல சர்வ வல்ல ஏக இறைவனின் தன்மையின் அடிப்படையிலும் பிரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் அடிப்படையிலும் இறைவனுக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழங்குவதும் அதன் பொருள் ஒன்றாகவே இருப்பது போலவும் தோன்றினாலும் தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுபவர்களுக்காகக் கொடுத்துள்ள அவருடைய விசேஷித்த நாமத்தை அறிந்து அதன் பெயரில் தொழுதுகொள்ளுவதே சாலச் சிறந்தது;////

SUNDAR:

// நல்ல கருத்துதான் பெயரை ப்படியே சொல்வது மிகவும் நல்லதுதான்;  ஆனால் அந்தந்த மொழியில் உள்ளவர்களுக்கு அங்குள்ள வார்த்தைக்கு ஒத்தாற்போல் பெயர் இருந்தால்தானே புரியமுடியும்.; 

ஆங்கிலத்தில் ஜீசஸ் என்கிறோம்;  தமிழில்  இயேசு என்கிறோம்; ஹிந்தியில் அதை கொஞ்சம் மாற்றுகிறோம்;  இப்படி மாறி மூல மொழியில் உள்ள வார்த்தைக்கும் இதற்கும் அனேக வேறுபாடு ஆகிவிடுகிறது.  அதற்காக தேவன் நீ எனது பெயரை  மாற்றிவிட்டாய்  உன்னை நான் கண்டுகொள்ளவே மாட்டேன் என்றா   சொல்லுவார்?

மனதில் யாரை கருத்தில்கொண்டு அந்த வார்த்தைகளை உச்சரிக்கிறோம் என்பதை பொறுத்துதான் பலன் இருக்கிறது.   "நாராயணர்"  (தண்ணீர்மேல் அசைவடுபவர்) என்று சொல்லிக்கொண்டு "ஏதாவது ஒரு உருவத்தை கற்பனைபண்ணி  தொழுதால்  அதில்  பயனுக்கு பதில் பாவம்தான் மிஞ்சும்.  //


நல்லது நண்பரே, ஜீஸஸ் என்றாலும் ஈசா என்றாலும் யெஷுவா என்றாலும் அதன் ஆதாரப் பொருள் மாறுகிறதில்லை;உதாரணமாக ஷிவா,ஷங்கரா ஆகிய சொற்கள் ஒருவரையும் கணபதி, விநாயகர், பிள்ளையார் ஆகிய சொற்கள் ஒருவரையும் குறிக்கிறது என்று வைத்துக்கொள்வோம்;அதன் பொருளின் அடிப்படையில் இயேசுவுடனும் இவை ஒத்துப்போகின்றன;

இன்று ஒரு சகோதரியிடம் இப்படியே சொன்னேன்; சிவன், சிவப்பு, குங்குமம்,இரத்தம்,அன்பு,தியாகம் என்று சொல்லிக்கொண்டே வந்து இயேசு மாத்திரமே இரத்தம் கேட்காமல் இரத்தத்தை சிந்தினார்;அதற்குக் காரணம் மனுக்குலத்தின் மீதான அவருடைய அன்பு என்று.

ஆனாலும் ஒரு உயர்ந்த பொருளை விளக்க அவர்களுடைய தெய்வத்தின் பெயரை நான் பயன்படுத்தினாலும் சிவன் உன்னை இரட்சிப்பான் என்று சொல்லமுடியுமா?

இப்படியாக ஒவ்வொரு தெய்வத்தின் பெயரையும் குறிப்பிடும்போதே அதனுடன் இணைத்து கூறப்பட்ட செய்திகள் மற்றும் ஓவியம் அல்லது விக்கிரகமே மனக்கண் முன் வருகிறது;

எப்படிப்பார்த்தாலும் இது சரியாக வரும்போல் தெரியவில்லை.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மற்றொரு தளத்தில் நண்பர் சந்தோஷ் அவர்களுக்கு இறைவனுடைய நாமம் "நாராயணனா" என்பதற்கு நான் அளித்த பதில்:

//
Posting in forums is like holding the tail of tiger and once I hold I should keep on holding (answering). I want to answer this question with Christian view and only to Christians. The question is about Narayana

The great Indian rishis and sages perceived the nature, glory, greatness of true God and they recorded in some places of vedas, upanishads and in some puranas (story form) and based on their revelation  they named the God. After that the true God is replaced with false gods and idol worship also came to practice.

Many Sanskrit names of God have meaning which gives the attributes of true God and one can use this names for true God. But at present who is there behind these names? It is not true God. For example a person named as Jesus after Jesus Christ, may be a great sinner in his life. So as far as name is concerned “Narayana”is correct and as for as image behind this concerned it is not correct. //

என்னுடைய பிரச்சினையை அழகான சிறியதொரு வாக்கியத்தினால் நண்பர் சந்தோஷ் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்; ஆம்,அநேக சமயங்களில் (எனக்கும்) இப்படித்தான் ஆகிவிடுகிறது; இதுபோன்ற கலந்துரையாடல் தளத்தில் பதிலளிப்பது அல்லது ஒரு கருத்தை வெளியிடுவது புலி வாலைப் பிடித்த கதையாகி விடுகிறது; விடவும் முடியவில்லை,விட்டு ஓடவும் முடியவில்லை;அதுவும் 'நாயர் புலி வாலைப் பிடித்த கதை'யாக என்பார்கள்;அது என்ன என்று தெரியவில்லை;

இங்கே நண்பர் குறிப்பிட்ட வண்ணமாக இறைவனின் பொதுவான தன்மைகளை உணர்ந்தோர் அவரவர் வட்டார மொழிகளில் அவருக்கு பெயரிட்டு அழைத்து வழிபட்டிருக்கலாம்;

இதனை ஆதியாகமம்;4:26 லேயே வாசிக்கிறோம்,"சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்."

{Gen 4:26  And to Seth, to him also there was born a son; and he called his name Enos: then began men to call upon the name of the LORD.

இதனைக் குறித்து ரோமருக்கு எழுதும்போது பவுல் இப்படியாகக் குறிப்பிடுகிறார், "தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை.ரோமர்.1:19,20}"

"[Romans.1:19,20 "Because that which may be known of God is manifest in them; for God hath shewed it unto them.

For the invisible things of him from the creation of the world are clearly seen, being understood by the things that are made, even his eternal power and Godhead; so that they are without excuse:"]

அதுவரை யாரிடமும் வெளிப்பட்டிராத "கர்த்தருடைய நாமத்தினை" முதல் தலைமுறை மனிதர்கள் அறிந்திருந்து வழிபட்டது எப்படி என்பது கேள்விக்குறியாக இருக்கிறது; ஏனெனில் தேவன் தமது சிறப்பான பெயரையே மோசேக்குதான் முதன்முதலில் சொல்லுகிறார்; அப்படியானால் இங்கே யாரை (ஆதியாகமத்தை எழுதிய) மோசே குறிப்பிடுகிறார்?

எனவே நாம் அறிவதென்ன, இறைவனின் பொதுவான குணாதிசயம் அல்லது தன்மையின் அடிபடையில் அவரையறிந்தோர் வழிபட்ட முறையினையே வேதம் குறிப்பிடுகிறது;

இப்படி அவரவர் இஷ்டத்துக்கு அவரவர் மொழியில் தான் தோன்றித்தனமாக இறைவனை வழிபட்டாலும் அவர்கள் தேவனை அறியமுடியவில்லை என்கிறார்,பவுல்;

ஏனெனில் தேவன் பொதுவான தன்மையுடையவராக இருந்தாலும்
அவர் தனிப்பட்ட முறையில் சிலருடன் இடைபட்டிருந்தார்; (உதாரணத்துக்கு நோவா,ஆபிரகாம்...) சிலருடைய தனிப்பட்ட அனுபவத்தினை பெரும்பான்மையோர் ஏற்கவில்லை; இதில் தேவனுடைய அனந்த ஞானம் வெளிப்பட்டது;

இதைக் குறித்து தீர்க்கனாகிய ஏசாயா இப்படி கேட்கிறார்,"எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது?"(ஏசாயா.53:1)

பிரச்சினை என்னவென்றால் அநேகர் சொல்வதுபோல சர்வ வல்ல ஏக இறைவனின் தன்மையின் அடிப்படையிலும் பிரிந்துவிட்ட ஆயிரக்கணக்கான மொழிகளின் அடிப்படையிலும் இறைவனுக்கு பல்வேறு நாமகரணங்களைச் சூட்டி வழங்குவதும் அதன் பொருள் ஒன்றாகவே இருப்பது போலவும் தோன்றினாலும் தேவன் தம்மைத் தொழுதுகொள்ளுபவர்களுக்காகக் கொடுத்துள்ள அவருடைய விசேஷித்த நாமத்தை அறிந்து அதன் பெயரில் தொழுதுகொள்ளுவதே சாலச் சிறந்தது;

மற்றபடி இந்த சமுதாயத்தில் வழங்கப்படும் மற்ற பெயர்களுடன் நம்முடைய தேவனை ஒப்பிடுவோமானால் அவர்கள் சொல்லுவார்கள்,"நாம் வழிபடும் தேவன் ஒருவரே என்றால் எங்களுடைய கோவிலுக்கும் வந்து வழிபடுங்களேன்,நாங்களும் உங்கள் ஆலயத்துக்கு வருகிறோம்" என்பதாக;

அப்போது வேறுபாடுகள் களையப்பட்ட ஒரே சமதர்ம சமுதாயம் அமைக்கப்பட்டுவிடும்;ஆனாலும் இதனால் தேவனுடைய சித்தம் பூரணப்படுமா என்பது மாபெரும் கேள்விக்குறியாகும்;



-- Edited by chillsam on Friday 5th of February 2010 08:20:14 AM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard