Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்...


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்...
Permalink  
 


13 days ago

தயவுசெய்து தலைப்பை மாற்றவும்;ஜன்ம பாவங்களுக்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது;போலியான வாக்குறுதிகளை பொதுமக்கள் நம்பவேண்டாம்;ஏனெனில் கிறித்தவ விசுவாசத்திலோ பரிசுத்த வேதாகமத்திலோ ஜன்ம பாவங்கள் சம்பந்தமான எந்த போதனையும் கிடையாது;இங்கே "ஜன்மம்" சம்பந்தமான இருவித விளக்கங்களுக்கும் பொதுவான கருத்தையே நான் முன்வைத்துள்ளேன்.

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=39120168


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

12 days ago

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=39120168


ஜன்ம நாளை பிறந்தநாள் என்ற பொருளில் கொள்ளாமல் அல்லது மறுபிறப்பு என்ற பொருளில் கொள்ளாமல் ஏற்கனவே பிறந்து வாழ்ந்து மறைந்தோரே மீண்டும்
மீண்டும் பிறப்பதாகவும் அல்லது தங்கள் முன்னோர்களின் பாவச் சுமைகளை அதாவது நல்வினை தீவினை எனப்படும் கர்மபாபங்களைத் தாங்கள் சுமப்பதாகவும் சிலர் எண்ணி அதற்காகவும் முழுகிக் கொண்டிருக்கிறார்கள்;இந்த குழப்பத்தைத் தவிர்க்கவே, தலைப்பை மாற்றவும் என்று கோரிக்கை மட்டும் வைத்தேன்;கட்டளையிடவில்லை; ஆணவத்துடன் செயல்படுவது நானில்லை என்றே எண்ணுகிறேன்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அந்த  கருத்துக்கள்  பற்றி  ஒவ்வொன்றாக  சரியான  முறையில்  தங்கள் (தளத்தில் வேண்டுமானாலும் கூட)  வசன  ஆதாரத்தின் அடிப்படையில் தாழ்மையான நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்தி விவாதிக்கலாம். சற்று கோபமான வார்த்திகள் வந்தால் கூட நான் விலகிவிடுவேன். //

இதுபோல மிரட்டினால் நான் உள்ளேயே வரமாட்டேன்...
இது எப்படி இருக்கு?

(இதற்கு மேல் எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை;அது ஏற்கனவே உங்கள் எழுத்துக்களால் தளத்திலேயே இருக்கிறது;கொஞ்ச ஞானமும் நிறைய பொறுமையும் இருந்தால் அதனை அறிந்துகொள்ளலாம்;மற்றபடி இதை மையமாகக் கொண்டு புதிய விவாதம் தேவையில்லையென்றெண்ணுகிறேன்.)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

chillsam wrote:
அருமை நண்பர் சுந்தர் அவர்களே, தங்களை மனமடிவாக்கின அன்பு சகோதரரில் ஒருவனாக நான் இருந்திருந்தால் என்னை தயவாகப் பொறுத்துக்கொள்ளவும்;

 

தாங்கள்  என்னை  பலமுறை  மனமடிவுக்குள்ளக்கியிருக்கிரீர்கள்  எனது  உண்மையே.  ஆகினும் தங்களை பாதிக்கும் அளவுக்கு கருத்துக்களை எழுதியதில் என்னுடைய தவறும் இருப்பதுபோல் உணர்கிறேன். இதுவே  பழைய ஏற்பாட்டு காலமாக இருந்தால் நான் இவ்வாறு கேட்கவேண்டிய அவசியம் இல்லை ஆனால் இந்த புதிய ஏற்பாட்டு காலத்தை பொறுத்தவரை
கீழ்படிதலும் தாழ்மையும் மிக மிக அவசியமாகிறது எனவே எனக்கு யார்மீதும் கொஞ்சமும் கசப்பும் கோபமும் ஏற்ப்படாத அளவு ஒப்புரவாகவே இம்மன்னிப்பை கோரினேன்.
 
chillsam wrote:
///கலந்துரையாடலையும் கருத்தாய்வையும் தவிர்த்து தீர்மானமாக எதையோ அறிவித்து ஏற்பவர் ஏற்கட்டும் , ஏற்காதவர் போகட்டும் என்ற அணுகுமுறையினையே நான் எதிர்க்கிறேன்;////
////வாதிட்டு ஒன்றை நிறுவும் நம்பிக்கை எனக்கு போய்விட்டது;////

தங்களின் இதே நிலைதான் என்னுடையதும். விவாதத்தின் மூலம் யாரையும் யாராலும் மாற்ற முடியாது என்று அறிந்தபின்னரே அதுபோல் ஒரு பதிவை இட நேரந்தது. நானும் பல சகோதரர்களிடம்
முடிந்தஅளவு விவாதித்து பார்த்து விட்டேன். மேலும் வேத புத்தகம் எல்லோருடைய கருத்துக்கும் சாதகமாக சிலவசனங்களையாவது தன்னுள் கொண்டுள்ளதால் இறுதியில் நமது அனுபவங்களின் அடிப்படையிலேயே உண்மையை அடையாளம் காணவேண்டியுள்ளது. இந்த அணுகுமுறை நிச்சயம் வெற்றியை கண்டுள்ளது என்றே நான் கருதுகிறேன் காரணம் என்னுடைய எழுத்துக்களை மனதார ஏற்று அதன்படி வாழ தீர்மானித் திருக்கும் சில சகோதரர்களை நான் கர்த்தருக்குள் சம்பாதித்திருக்கிறேன். அதானால் என் தேவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். புரியவேண்டியவரளுக்கு என் எழுத்துக்கள் நிச்சயம் புரியும் என்று நான் திட்டமாக நம்புகிறேன்

chillsam wrote:
/// தனி மடலில் நான் தங்களிடம் மனதார கெஞ்ச நினைத்த காரியம்..,
சத்தியத்தைக் குறித்தும்
ஆவியானவரைக் குறித்தும்
மறுபிறவியைக் குறித்தும்
இயேசுவின் தெய்வத்துவத்தைக் குறித்தும்
திரித்துவத்தைக் குறித்தும்
இந்து வேதங்களைக் குறித்தும்
முன்னோர்களைக் குறித்தும்
இந்து தெய்வங்களைக் குறித்தும்
சபைகளைக் குறித்தும்
சபைகளின் போதனைகளைக் குறித்தும்
ஏன், தங்கள் சொந்த அனுபவங்களைக் குறித்தும் தாங்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை மறுபரிசீலனை செய்வது தான்.////
 
அதாவது ஏறக்குறைய என்னுடைய எல்லா கருத்துக்களையுமே மறு பரிசீலனை செய்ய சொல்லிவிட்டீர்கள் என்று கருதுகிறேன். மிக்க நன்றி. எனக்கு இரண்டே இரண்டு காரியங்களை தாங்கள் தெரியபடுத்த வேண்டும். 
 
1. நீங்கள் யாருடய அல்லது  எந்த போதனையின் அடிப்படையில் என்னுடைய கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
 
2. பருபரிசீலனை செய்யசொல்லும் என்னுடைய கருத்துக்களின் எந்த கருத்து ஜனங்களை தேவனை விட்டு பிரித்து  தவறான பாதைக்கு கொண்டு சென்றுவிடும் என்று தாங்கள் கருதுகிறீர்கள்?
 
அந்த  கருத்துக்கள்  பற்றி  ஒவ்வொன்றாக  சரியான  முறையில்  தங்கள் (தளத்தில் வேண்டுமானாலும் கூட)  வசன  ஆதாரத்தின் அடிப்படையில் தாழ்மையான நேர்மையான வார்த்தைகளை பயன்படுத்தி விவாதிக்கலாம். சற்று கோபமான வார்த்திகள் வந்தால் கூட நான் விலகிவிடுவேன்.
 
தாங்கள் எழுதும் கருத்துக்கள் பற்றிய உண்மைகளை  ஆண்டவரிடம் கேட்டுதான் நான் ஆராய்ந்து அறிவேன். தாங்களின் கருத்து சரியான இருந்தால் நிச்சயம் நான் ஏற்றுக்கொள்வேன். சிலர்போல நான் கருதுவதுதான் சரி எழுதியதை மாற்ற மாட்டேன்  என்று தவறான  கருத்துக்களை எழுதி வைக்க விரும்புகிறவன் நானல்ல வசன அடிப்படையில் தோற்ப்பது பற்றியோ கருத்துக்களை மாற்றுவது பற்றியோ நான் கவலைப்படுவது இல்லை! மாறாக மேலும் ஒரு உண்மையை அறிந்து கொண்டேன் என்று அதற்காக பெருமை படுபவன்.
 
ஆயிரம் பிரிவுகள் இருந்தாலும் ஒரே ஒரு உண்மைதான் இருக்கிறது அது  எது  என்று ஆராய்ந்துவிடலாம்!

 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&subForumID=498687&p=2

// என்னுடைய எழுத்துக்கள் எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருந்தது என்பது எனக்கு தெரியவில்லை;
னால் நான் அநேகமுறை ஆண்டவராலும் பல அன்பு  சகோதரர்களாலும் கடிந்து கொள்ளப்பட்டிருக்கிறேன்;மிகவும் மனமடிவுக்குள்ளாகி இருக்கிறேன். //

http://www.lord.activeboard.com/forum.spark#comment-39050341


அருமை நண்பர் சுந்தர் அவர்களே, தங்களை மனமடிவாக்கின அன்பு சகோதரரில் ஒருவனாக நான் இருந்திருந்தால் என்னை தயவாகப் பொறுத்துக்கொள்ளவும்;

கலந்துரையாடலையும் கருத்தாய்வையும் தவிர்த்து தீர்மானமாக எதையோ அறிவித்து ஏற்பவர் ஏற்கட்டும் , ஏற்காதவர் போகட்டும் என்ற அணுகுமுறையினையே நான் எதிர்க்கிறேன்;

சில வாரங்கட்கு முன்பு தங்களுக்கு ஒரு நட்பின் மடல் எழுத ஆவியானவர் தூண்டினார்;ஆனாலும் நான் தவிர்த்து வந்தேன்;தற்போது அதற்கேற்ற சூழ்நிலை வாய்த்ததால் இதனை எழுதுகிறேன்;

தனி மடலில் நான் தங்களிடம் மனதார கெஞ்ச நினைத்த காரியம்..,
சத்தியத்தைக் குறித்தும்
ஆவியானவரைக் குறித்தும்
மறுபிறவியைக் குறித்தும்
இயேசுவின் தெய்வத்துவத்தைக் குறித்தும்
திரித்துவத்தைக் குறித்தும்
இந்து வேதங்களைக் குறித்தும்
முன்னோர்களைக் குறித்தும்
இந்து தெய்வங்களைக் குறித்தும்
சபைகளைக் குறித்தும்
சபைகளின் போதனைகளைக் குறித்தும்
ஏன், தங்கள் சொந்த அனுபவங்களைக் குறித்தும் தாங்கள் கொண்டுள்ள தவறான அபிப்ராயங்களை மறுபரிசீலனை செய்வது தான்.

http://www.lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=38657785

மேற்காணும் தொடுப்புக்கு பதிலளிக்க எண்ணி கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அந்த குறிப்பிட்ட ஜன்னலை மூடாமல் எனது உலாவியில் அப்படியே வைத்திருக்கிறேன்;ஆனாலும் ஏனோ., உற்சாகமில்லாமல் எழுதவில்லை;வாதிட்டு ஒன்றை நிறுவும் நம்பிக்கை எனக்கு போய்விட்டது;

மீண்டும் சொல்கிறேன், நம்மைப் போன்றோர் இணைந்து செயல்பட்டால் இன்னும் அதிகம் சாதிக்கமுடியும்;ஆனால் அது இயலாத காரியம் என்று ஏற்கனவே சொல்லிவிட்டீர்கள்;

கர்த்தருக்கு சித்தமானால் சந்திப்போம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// திரித்துவம்  உண்டு என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்;ஆனால் பிதாவும் குமாரனும் ஒருவரே அவர்தான் இயேசு  என்று கருதுகிறீர்கள் //

அன்பான நண்பருக்கு நான் மேற்கண்ட கருத்தை எங்கே சொன்னேன் என்பதை விளக்கினால் நலம்;
இது உங்களது புரிதல் சார்ந்த கருத்தாக  அமைந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம்;

நான் விரிவான விவாதத்துக்கு உதவியாக இன்னும் எனது தனிப்பட்ட கருத்துக்களை வெளியிடாமல் விமர்சனம் மட்டுமே செய்துக் கொண்டிருக்கிறேன்;

அதிரடியான தலைப்புகளும் செய்திகளும் என்னிடத்தில் உண்டு என்பது உங்களுக்குத் தெரியும்;சற்றுப் பொறுத்திருந்து பாருங்கள்;

நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்து கருத்தைப் பதித்தமைக்கு நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

chillsam wrote:

// "பிசாசின் கிரியைகளை அளிக்கவே இயேசு வந்தார்" //

பிழை திருத்தினால் அவர்களுக்குக் கோபம் வருகிறது;ஆனால் ஒரு எழுத்தினால் எவ்வளவு பெரிய அர்த்தப்பிழையான அனர்த்தம் உண்டாகிறது பாருங்கள்..!

"பிசாசின் கிரியைகளை அழிக்கவே இயேசு வந்தார்" என்று வரவேண்டிய அர்ததம் "
ழி" என்ற ஒரு எழுத்தைச் சரியாக உச்சரித்துப் பழகாததால் (மதுரை..?) அதை அப்படியே எழுதி....?!


நண்பர் சில்சாம் அவர்களுக்கு பிழையை சுட்டிகாட்டியமைக்கு நன்றி. பிழையை திருத்திவிட்டேன்.
 
நான் பிரிந்திருப்பதாக கருத வேண்டாம்.  என்னை பொறுத்தவரை ஒவ்வொருவர் சொல்லும் கருத்திலும்  
சில உண்மைகள் அடங்கி  இருப்பதால் யாரையும் என்னால் நிராகரிக்க முடியவில்லை.
 
திரித்துவம்  உண்டு என்ற உண்மையை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் ஆனால் பிதாவும் குமாரனும் ஒரேவரே அவர்தான் இயேசு  என்று கருதுகிறீர்கள்.
சில சகோதரர்கள்  பிதாவும் குமாரனும் வேறு என்பதை அறிந்திருக்கிறார்கள் ஆனால் திரித்துவத்தை ஏற்க்க மறுக்கிறார்கள்.
சிலர்  எல்லோரையும் மீட்கும் திட்டம் தேவனிடம் உண்டு என்ற உண்மையை அறிந்திருக்கிறார்கள் ஆனால் அதற்க்கான வழியை சரியாகஅறியாமல்  மனிதர்களை இடரசெய்கிறார்கள். 
 
என்னை பொறுத்தவரை   நான் அனைத்தையும் நம்புகிறவன் எனவே யார்பக்கமும் தனிப்பட்ட முறையில்
சாய்ந்துபோக முடியவில்லை. யார்சொல்வதையும் முற்றிலும் தவறு என்றும் சொல்லமுடியவில்லை.  
 
நான் நிச்சயம் தங்கள் தளத்தின் பங்குபெறுவேன். அதுபோல் நீங்களும் எனது தளத்தில் பங்குபெற்று தங்கள் கருத்தை கூறுங்கள்!

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// "பிசாசின் கிரியைகளை அளிக்கவே இயேசு வந்தார்" //

பிழை திருத்தினால் அவர்களுக்குக் கோபம் வருகிறது;ஆனால் ஒரு எழுத்தினால் எவ்வளவு பெரிய அர்த்தப்பிழையான அனர்த்தம் உண்டாகிறது பாருங்கள்..!

"பிசாசின் கிரியைகளை அழிக்கவே இயேசு வந்தார்" என்று வரவேண்டிய அர்ததம் "
ழி" என்ற ஒரு எழுத்தைச் சரியாக உச்சரித்துப் பழகாததால் (மதுரை..?) அதை அப்படியே எழுதி....?!

http://eternal-life.activeboard.com/index.spark?aBID=134761&p=3&topicID=33729643


http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=33729779




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அண்மையில் நீங்கள் உங்கள் தளத்தில் பூட்டியுள்ள "மனுஷகுமாரனாகிய இயேசுகிறிஸ்து யார்" என்ற திரியில் தங்கள் இறுதி உரை மிகவும் அருமையாக இருந்தது; உங்கள் பொறுமைக்கும் ஆழ்ந்த நுண்ணறிவுக்கும் எனது பாராட்டுக்கள் உரித்தாகுக..!

// நான் தேவனோடு   மட்டும் தான் கூட்டு; உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி //

இந்த வார்த்தையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என யோசித்தேன்; ஆமா, நீங்க உண்மையில "அந்த" கட்சியில சேர்ந்தா பெரிய ஆளா வருவீங்க...என்ன, டெபாசிட்டு தான் கிடைக்காது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 46
Date:
Permalink  
 

Chillsam wrotes:-
///என்னைப் பொறுத்தவரை உங்களால் அனுமதிக்கப்பட்டு நீங்கள் விவாதித்துவரும் நபர்களால் உங்களுக்குத் தான் சக்தி விரயமாகும்; ஏனெனில் அவர்களோடு நான் 10 வருடமாகப் போராடி வருகிறேன்;///


நீங்கள் பத்து வருடம் போராடியுள்ளீர்கள் நாளை தேவன் உங்களிடம் கேட்டால் நான் பத்து  வருடம் போராடினேன் அவர்கள் எனது வார்த்தைக்கு செவிகொடுக்கவில்லை  என்று கூறிவிடுவீர்கள்.
 
ஆனால் என்னை பார்த்து உனக்கு பல காரியங்களை தெரிவித்தேனே நீ ஏன் அவர்களுக்கு உண்மையை  விளக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்ல?
 
எனவே நான் ஒரு பத்து நாளாவாது அவர்களுடன்  போராடிவிட்டு போகிறேன்.
 
 
chillsam wrotes :- 
 
/////ஊழியர்களை மிகவும் மதிக்கும் நீங்கள் விரும்பினால் தனியாகப் போராடிக்கொண்டிருக்கும் என் போன்றோரை ஒருமுறை சந்தித்து ஒத்த கருத்துடனும் ஒருமிக்கப்பட்ட ஷக்தியுடனும் சத்தியத்துக்காகப் போராடலாமே..!/////

உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி சகோ.  சில்சாம். உங்களை தேவ ஊழியர் என்ற முறையில்  மதிக்கிறேன் ஆனால் உங்கள் எழுத்துக்கள்   என் மனதுக்கு உடன்பாடாக இல்லை!

நீங்கள் ஆண்டவருக்காக  வைராக்கியவாதியாக இருக்கலாம் ஆனால் நான் மிகவும்  "சாப்ட் டைப்"   சிறிது கடினமாக பேசினாலும்   என்னால் அதை ஜீரணிக்க முடியாது.  அதுபோல் யாரையும் கடினமாக பேசவும் நான் விரும்பமாட்டேன்.  எனவே தங்கள் போன்றோருடன் எனக்கு  ஒத்துபோவது கடினம்.  

நான் தேவனோடு   மட்டும்தான் கூட்டு.
உங்கள் அழைப்புக்கு மிக்க நன்றி.

SUNDAR         
http://lord.activeboard.com/


-- Edited by SUNDAR on Monday 25th of January 2010 06:18:42 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

இறைவன் தளத்தின் தனிமடலும் எனது பதிலும்...

சகோதரர் சில்சாம் அவர்களுக்கு தாங்கள் ஒரு முழுநேர ஊழியர் என்பதையும் நீங்கள் ... எனது குடியிருப்பு பகுதி பக்கத்தில் தான் இருக்கிறீர்கள் என்பதையும்  அறிவேன்!

நான் தேவன் மேலும் அவரால் அபிஷேகம் பண்ணப்பட்ட   தேவ ழியர்கள் மேலும்   மிகுந்த மரியாதை உள்ளவன்; ஏனெனில் என்னை பொறுத்தவரை நான் இந்த  உலக வேலை செய்பவன்; ஆனால் ஊழியர்களோ தேவாதி தேவனுக்கு ழியம் செய்யும் மேலானவர்கள் என்று கருதி  அவர்களுக்கு கனமும் மரியாதையும் கொடுக்க கூடியவன்.

தங்களை எவ்விதத்திலும் குறைத்து பேசவோ அல்லது அல்லது தவறாக எழுதவோ எனக்கு மனமில்லை எனவே தங்களிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள்.

தயவு செய்து உங்களுக்கு பிடித்தம் இல்லாத  விவாதங்களில்  தலையிட வேண்டாம்!

எது தளத்தில் இருக்கவேண்டும் எது நீக்கப்பட வேண்டும் என்பதை நிச்சயம் தேவன் எனக்கு வெளிப்படுத்துவார்  என்றும், ஒருவேளை தவறான விவாதம் நடந்தால்  தேவனே அதை உடனே நிறுத்த சொல்வார் என்பதும் எனது அனுபவித்தில் உண்டு. எனவே தாங்கள் எதற்கும்  கவலை கொள்ளாமல் உங்கள் பணிகளை தொடரலாம்.  கொடுக்க பதில் எதுவும் இல்லாத பட்சத்தில் நீங்கள் சகோதரர்களுக்கு உதவலாம்.

கள்ளபோதனை என்று சொல்வதை விட தவறான புரிதலால்தான்  அவர்கள் அப்படி  போதிக்கிறார்கள் என்று கருதுகிறேன். முடிந்தால் விளக்குவோம் இல்லை பிடிவாதமாக நின்றால் திரியை தூக்கிவிடலாம்!

புரிதலுக்கு நன்றி
இறைநேசன்

===========================================================
// கள்ளபோதனை என்று சொல்வதை விட தவறான  புரிதலால்தான்  அவர்கள் அப்படி  போதிக்கிறார்கள் என்று கருதுகிறேன். முடிந்தால் விளக்குவோம் இல்லை பிடிவாதமாக நின்றால் திரியை தூக்கிவிடலாம் ! //
===========================================================

தங்களது நட்புணர்வுடன் கூடிய மடலுக்கு நன்றி; எதை வேண்டுமானாலும் எழுதுபவர்களுடன் நான் போராடுவதில்லை;ஒரு கட்டத்தில் விலகி அமைதியாகிவிடுவேன்;காரணம் எனக்கு அத்தனை நேரமிருப்பதில்லை; இரவெல்லாம் நான் பணிபுரிவதை கவனித்திருப்பீர்கள்;நான் இங்கே பொழுதுபோக்க வரவில்லை என்பதை ஆண்டவர் அறிவார்; வைராக்கியத்துடன் போராடுகிறேன்;

என்னைப் பொறுத்தவரை உங்களால் அனுமதிக்கப்பட்டு நீங்கள் விவாதித்துவரும் நபர்களால் உங்களுக்குத் தான் சக்தி விரயமாகும்; ஏனெனில் அவர்களோடு நான் 10 வருடமாகப் போராடி வருகிறேன்;

அவர்கள் குடும்பங்களைக் கவிழ்த்துப் போட வீடுவீடாக அலைந்துக் கொண்டிருக்கிறார்கள்;அவர்களுடைய புத்தகங்களைக் கூட நான் சந்திக்கச் செல்லும் வீடுகளில் வைக்காமல் கொண்டுவந்து விடுவேன்;

நீங்கள் அவர்களுக்கு "வாழ்த்துச் சொல்லுவது கூட பாவம்" என்று வேதம் எச்சரிக்கிறது; ஆனால் நீங்களோ அவர்கள் போக்கிலேயே சென்று அவர்களைப் பிடித்துவிடலாமென வெகுளித்தனமாக எண்ணுகிறீர்கள்;

அவர்களை நீங்கள் எந்த காலத்திலும் ஆதாயம் செய்யவே முடியாது; வாசலில் நாய் கட்டியிருக்கும்;நாம் அச்சத்துடன் உள்ளே செல்லும்போது ஒரு குரல் கேட்கும், "கடிக்காது,உள்ளே வாங்க" என்று; அதுபோன்றதே உங்கள் வாதமும்;கள்ளப்போதகத்துக்கு எந்த முகமூடியும் போடமுடியாது; அதை நீங்கள் தாமதமாகப் புரிந்துக்கொண்டு அவற்றையெல்லாம் நீக்குவதற்குள் "எல்லாம்" முடிந்திருக்கும்..!

ஊழியர்களை மிகவும் மதிக்கும் நீங்கள் விரும்பினால் தனியாகப் போராடிக்கொண்டிருக்கும் என் போன்றோரை ஒருமுறை சந்தித்து ஒத்த கருத்துடனும் ஒருமிக்கப்பட்ட ஷக்தியுடனும் சத்தியத்துக்காகப் போராடலாமே..!

With love,
"chillsam"


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard